உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

74 புதுமைப்பித்தன் கதைகள் > நான் சொல்வதைக் கேட்பீர்களா, மாட்டீர்களா?" "இப்படி முரண்டினால் "பின்னே......." " இரண்டு பேருக்கும் பொதுவாக ஒன்று சொல்லு கிறேன். இப்பொழுது இருட்டிவிட்டது. பாதி வழிவரை கொண்டுவந்து விட்டுவிட்டு வருகிறேன்!" "நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் போலிருக்கிறது!" << இல்லை, மூன்றரை! நீ சொன்னபடிதான் பாதி கேட் கிறேனே!" "கேட்க வேண்டாம். போங்கள்!" என்று விர்ரென்று திரும்பிச் சென்றாள் மரகதம். ராமச்சந்திரன், அவளைக் கூப்பிட்டுக்கொண்டு ஓடி. அவள் முன்பு நின்றான். அவள் கண்களில் நீர் தளும்பி நின்றது. இதற்கெல்லாம் இப்படி அழுதால்? வருகிறேன்! என்று சொல்லி அவளுடன் சென்றான். பாதி வழியில் சென்றதும்." அத்தான் எதற்கு வந் திருக்கிறார் தெரியுமா?" என்றாள். 'எதற்கு? என்னைக் கலியாணம் செய்துகொள்ள!" அப்படியா! சந்தோஷம்." பிறகு இருவரும் பேசவில்லை. XIII வெள்ளைச்சியின் படிப்பு வெகு மும்முரமாகச் சென் றது. உயிரெழுத்து, மெய்யெழுத்து, எல்லாம் பாராமல் சொல்லுவாள். சிறிது கஷ்டப்பட்டு எழுதவும் தெரியும். ராமச்சந்திரனுக்கு அவளிடம் ஒரு பிரேமை ஏற்பட் டது. அவளுடைய பேச்சில் ஓர் இன்பம்,சில சில சமயம்