உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

சாயங்கால மயக்கம் எனது சொந்த ஊரிலிருந்து வந்து வெகு நாட்களாகி விட்டது. ஊர் ஆசை என்பது. கட்குடி மாதிரி, ஒரு போதை வஸ்து. அந்த ஆசை வந்துவிட்டால், அதற்கு மாற்றுக் கிடையாது. போய்த்தான் தீரவேண்டும். இந்த ஊர்ப்- பித்தம், காதலைப் பார்க்கினும், தேசபக்தி கடவுள் பக்தி களைப் பார்க்கினும் மிகக் கொடூரமானது. அதன் ஏகச் சக்ராதிபத்தியம் மனத்தில் என்னென்ன கனவுகளை யெல்லாம் எழுப்பும், தெரியுமா? அன்று சின்னப் பையனாக இருக்கும் பொழுது தோழ டன் ஆற்றங்கரையில் சண்டை போட்டது முதல், நான் முதலில் விடியற்கால ஸ்நானத்திற்குச் செல்லும் இன்பம் முதல், எல்லாச் சிறு அற்பச் சம்பவங்களும்.-அடே, அதில் என்ன மோகம்! ஊருக்குப் போனேன். திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவருணி நதிக் கரை யில் ஒரு சிறு கிராமம். சென்னையில் வசிப்பதால், ராஜீயக் கைதி சிறையில் அநுபவிக்கும் சிரமத்தை யெல்லாம், தியாகம் செய்யாமல் அநுபவித்துவிடலாம். அதிலே ஊருக்குப்போக வசதி கிடைத்தது. இந்த உலகத்திலே கிறிஸ்து சொன்ன மோக்ஷ சாம்ராஜ்யம் கிடைத்துவிட்ட மாதிரியே இருந்தது. ரயில் ஏறுவதும், வண்டி போவதும், ஸ்தூலத்தில் நான் ஊரை அநுபவிப்பதும் நடப்பதற்குப் பல நேரத்திற்கு முன்னமேயே, நான் ஊருக்குப் மணி போய் விட்டேன்.