பக்கம்:அறிவின் கேள்வி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணிகள் காலக் கடல் அலைகள் காப்பாற்றி நமக்களிக்கும் முத்துக்களாகும். உலக மணல் விளியிலே நமக்குக் கிடைக்கிற அற்புத மணிகளாகும்.

இத்துடன் நான் இணைத்திருக்கிற “அறிவின் கேள்வி” சிந்தனையில் தோன்றிய ரத்தினம். உண்மை ஒளிரும் அறிவுச்சுடர். வின்வுட் ரீட் என்பவர் எழுதிச் சென்ற நூல் ஒன்றில் உள்ள சில பக்கங்களின் தமிழாக்கம் இது. உலகத்தின் கதையை, உயிர்க்குலச் சரிதையை, மனிதன் காலப்போக்கிலே அனுபவித்த வேதனைகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ள அந்நூலில் மதம், கடவுள் முதலிய பிரச்சனைகளைக் குறித்து தமது எண்ணங்களை அழுத்தமாக வரைந்திருக்கிறார் அவர். அவரது சிந்தனையின் உயர்வை நேர்மையை, ஒழுங்கை, அழுத்தத்தை பின்வரும் பக்கங்கள் நிரூபிக்கும்.

சிந்தனையின் முடிவல்ல அது. சிந்தனைக்கு முடிவே கிடையாது. சிந்திக்கத் துயுண்டும் சிறந்த கருத்துகள் கொண்டது. கடவுள் தத்துவத்தை, கட்வுளுக்காகப் பரிந்து மக்கள் பேசுகிற வாதங்களைப் பிரித்துப் பிழிந்து பார்த்து அத்தனையும் சாறில்லாச் சக்கையே என்று ஒதுக்கிவிடும் அவரது திறனையும் துணிவையும் பாராட்டத்தான் வேண்டும். இத்தகைய சிந்தனையாளர்கள் இன்று அதிகள் தேவை.

-கோரநாதன்