இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அவன் உணர்வில் அவள்
உள்ளுணர்வில் அன்பதனை திறந்த
ஊற்றுணர்வைக் "காதல் என உரைத்தால்
எள்ளளவும் அதிற்குறைவே. இல்லா - ஏந்திழையாள் என்னுளத்தே இன்பப் புள்ளிவைத்துக் கோலமிட்டாள்; அவள்,நான்
மச்சூட மாலையிடும் பூவை: வெள்ளமென எனையணைப்பாள்; காதல்
வெள்ளோட்டத் தனில்,அவளே வெல்வாள்.
பெண்மையிலே சித்திரையின் நிலவு:
பெறும்எனக்கோ பத்தரைமாற் றுயர்வே; உண்மையிலே முத்திரைகொள் அழகே;
உறும்எனக்கோ புத்துணர்ச்சி உறவு; தன்மையிலே தமிழ்மரபுத் தலைவி;
தனைஎனக்கே தத்துவைத்த துணைவி; நுண்மையிலே புத்தகம்:என் நினைவாம் -
நீரோட்டந் தனில்,அவளே நிறைவாள்.