பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

111

கேண்மையில் இனத்தாரும் உள்ளனர்;
இனம் அல்லாதாரும் உள்ளனர்.
இவ்விரண்டையும் அடுத்துக் காணலாம்.

5. இனநல ஏமம்

நட்பாம் கேண்மை போன்றது இனம். இங்கு இனம் என்றால் ஒருவருடன் அவருக்கு இனமாக அஃதாவது துணையாகக் கூடியிருப்பவரைக் குறிக்கும். சாதி என்பதை அன்று. கேண்மை இருவர் தொடர்ந்து ஒன்றிப் பழகுவது. இனம் கூடியிருப்பது; தொடராமலும் அமையும். நட்பு இடையறாத் தொடர்பு, இனம் ஒரு கூட்டு; செயற் பாட்டிற்குத் துணையாக உதவுவதும் பழகுவதும் இனமாதல் ஆகும்.

நட்பில் தீநட்பும் உண்டு; கேண்மையில் புன்கேண்மையும் உண்டு. இனத்திலும் நல்லினமும் உண்டு; தீயினமும் உண்டு. இதனைத் திருவள்ளுவர்,

             "நல்லினத்தின் ஊங்குங் துணையில்லை; தீயினத்தின்
             அல்லல் படுப்பது உம் இல்" (460)

என்ற குறளில் காட்டினார். இத்துடன், நல்லினம் துணையாகும் (பாதுகாப்பாகும்), தீயினம் அல்லல் தரும் என்று 'இன நல ஏம’த்தைக் குறித்தார்.

'பெரியாரைத் துணைக்கோடல்' என்னும் அதிகாரத் தால் நல்லினத்தின் நலத்தையும் சிற்றினஞ் சேராமை'யால் தீயினத்தின் தீமையையும் விளக்கினார். 'சிற்றினஞ் சேராமை"யாம் எதிர்மறையில் நல்லினத்தில் ஏமத்தை அழுத்தமாக விரித்தார்.