இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
இலக்கியத்தில் உண்டிந்தச் சொல்லோட்டம்;
இலங்குமதில் உணர்வார்ந்த பொருளூட்டம்;
- இருக்குமதில் சுவையோட்டம்.
432 பரிபாடல்" தனில்உண்டு குதுகுதுப்பு;
பெரியபுரா ண"த்தும் உண்டு குதுகுதுப்பு;
- பரிவு' என்றே பொருளதற்கு. பரிபாடல்" காட்டும்.ஒரு பதைபதைப்பு;
பற்றும் அதன் பொருளாகும் மெலிமெலிப்பு:
- படிப்போர்க்கும் ஒருசுவைப்பு.
433 திருவாச க”த்தில்ஒரு விதுவிதுப்பு:
திகழ்நால டியார்’’சொல் கலகலப்பு;
- தேர்பொருளோ ஒலிஒலிப்பு. தரும் நீதி வெண்பா'வில் சிலுசிலுப்பு;
தக்க நீதி நெறி'யில்ஒரு பரபரப்பு;
- தரும்.விரைவுப் பொருளிருப்பு. சீவகசிந் தாமணி'யில் வழுவழுப்பு; 434
சோர்வாக நழுவவிடும் மழுமழுப்பு;
- சேரும் அங்கு பொருளமைப்பு.
235