இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
45. தமிழ் அணிகலன்
செந்தமிழ் இன்பமதே - தமிழீர், செப்பும் அளவுளதோ? அந்தமிழ் வான் அளக்க - தமிழீர்,
அளவுகோல் கண்டதுண்டோ?
கன்னல் கசப்பென்பார் - செந்தமிழ்
கண்டிட்ட நுண்சுவையோர்; மின்னல் இருட்டென்பார் . செந்தமிழ்
மேவும் ஒளியுணர்வோர்.
உள்ளம் கவிழ்ந்திருப்பின் - செந்தமிழ்
ஊக்கம் அளிப்பதுகாண்;
வெள்ளம் என அறிவைச் - செந்தமிழ்
வெற்றிக் களித்திடுங்காண்!
முன்னவர் வாழ்ந்த நிலை - செந்தமிழ்
முன்னிற்கச் செய்வதுகாண்;
பின்னவர் வாழ்வினுக்கும் - செந்தமிழ்
பெற்றி அளிப்பதுகாண்;
| 69
326
327
328
329