இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38
கற்றவரிற் சோம்பிநிற்கும் கசடர் தம்மைக்
கைதூக்கி உணர்வூட்டிக், கல்லா தாராம்
மற்றவர்க்கும் அறிவொளியைப் பாய்ச்சி, உண்மை
மானுடராய் மேம்படுத்தும் பொறுப்பை ஏற்கும்
நற்றுணைவ ராகஎதிர் காலம் ஆளும்
நாயகர்இந் நன்முடிவை எடுக்கா விட்டால்...
வெற்றுடலாய் உயிரற்று வாழ்ந்தி ருப்போம்;
வீழ்ச்சியினின் றெமைமீட்ட அண்ணல் வாழி!