பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

93


வேடிக்கை, கேலி, கிண்டல், கண்டிப்பு, சோகம் ததும்பும் வகையிலும் இருக்கும்.

தாம் எழுதுகின்ற புதிய புதிய படைப்புக்களை கவிஞர் எழுதி முடித்தவுடன், அதைத் தனது நண்பர்களிடமோ, மாணவர் களிடமோ படித்துக் காட்டிக் கருத்தறிந்த பிறகே மனநிம்மதி பெறுவார். சில நேரங்களில் அவரே உரக்கப் பாடி மகிழ்வார்.

தாகூர் கதைகள், நாவல்கள் பெரும் பகுதி வங்கத்து கிராம மக்களது வாழ்க்கைச் சம்பவங்களாகவே இருந்தன. இந்திய மக்களின் பண்பாடுகள், நாகரிகங்கள் அவரது கதைகளிலே ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். எப்படி கவிஞரது பாடல்கள் அவரது புலமையை உலகுக்குப் புலப்படுத்துகின்றனவோ, அதனைப் போலவே கதைகளும், நாவல்களும் கற்பனைச் சிறகடித்து புகழ் வானத்திலே வட்டமிட்டபடியே இருந்தன.

நோபல் பரிசு பெற்ற பிறகு, அவரது இலக்கியப் பணிகள் அவருக்கு ஓய்வு கொடுக்காமலே நெருக்கிக் கொண்டே இருந்தன. அவ்வளவு கடமைகளுக்குப் பிறகும், அவர் அழகான பாடல்களைப் புனைந்து பாடிக்கொண்டே வாழ்ந்தார்.

கவிஞர் எழுதும் பாட்டுக்கள் அத்தகைய அனுபவம் வாய்ந்தது என்பதை 1892-ஆம் ஆண்டில் அவர் எழுதிய கடிதம் ஒன்று விளக்குவதைப் பாருங்கள். இதோ...

“கோயில் மணி ஒன்றும் இங்கு அடிப்பதில்லை. மக்கள் வாழும் பகுதி அருகே இல்லாமையால், மாலை நேரமானதும் பறவைகள் பாடலை நிறுத்தியவுடன் முழு அமைதி நிலவுகிறது.