இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60 தமிழ் நூல் அறிமுகம்
நள்ளிரவிலும் தூங்காமல் அவர்களை விசாரிக்கச் செல்லும் அரசனுடைய அரிய பண்பை எண்ணியெண்ணி வியப்போம். .
காதலால் உறங்காம்ல் சிறந்த கலைவளம் செறிந்த அரண்மனையில் படுத்துக் கிடைக்கும் பெண்ணரசியின் நிலையும், வீரத்தால் உறங்காமல் புதிதாக அமைக்கப் பட்ட பாசறையில் கூடாரந்தோறும் உலவும் அரசனின் நிலையும் நெடிய வாடையையும் நல்ல வாடையையும் ஒருங்கே தோற்றுவிக்கும் இப்பாட்டு, நமக்கு இரண்டும் இணைந்த நெடுநல்வாடையாக நின்று சுவை யூட்டுகிறது.