146
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
ஊழித் தீயே, கடையனலே! பரிதியே! உன்னுடைய குதிரைகள் எங்கே?
நீ பனிப் பகைவன்; உன்னுடைய புரவிகள் பணியிலே புரள்கின்றனவா?
நீ சுடர், அதனால்தான் சுடுகிறாயா?
நீ பதங்கன்; அதனால் தான் என்னைப் பதப்படுத்தினாயா?
மார்த்தாண்டன் நீ, உன்னைத் தாண்டி யாரும் வர முடியாது.
என்னுழ் நீ; ஆகவே, நீ என்றும் இருப்பவன்!
அருணன் நீ, அரும்பைத் தொடர்ந்து ஆகாயம் வரை விரிந்து இருக்கிறாய்!
ஆதவன் நீ; உன்னுடைய ஆதரவு எமது உரிமைக்குத் தேவை!
நீ மித்திரன்; எனவே நீ என் உறவு!
நீ ஆயிரம் சோதி; எனவே உனக்கு ஆயிரம் பகை உண்டு!
நீ தரணி! இயல்பாகவே கோடைப் பரணி உன்னிடத்திலே உண்டு!
நீ செங்கதிர்; ஆகவேதான் - நீ காலையிலே மென்மையாக இருக்கின்றாய்!
கண்டன் நீ; என்றும் எவர்க்கும் எப்போதும் தோற்றதில்லை!
தபணன் நீ; உன்னிடத்திலே வைராக்கியம் உண்டு!
ஒளி நீ; உன் உருவத்தைத் தெளிவாக யாரும் கண்டு பிடித்ததில்லை - ஒளிந்துகொண்டே இருப்பவன்!
சான்றோன் நீ; உலக அறிவாளர்கள் உன்னை நோக்கி சிரம் தாழ்த்தி வணங்குகின்றனர்!
நீ எல்; எல்லாம் நீ!
நீ பார்க்கரன்; உன்னுடைய ஒளி நிறமே அதுதான்!