பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. அண்ணா ஒரு தமிழ்ப் பூ மாலை!




எங்கள் அண்ணனே தத்துவத்தின் தேக்கமே! எதிர்காலத்தின் ஆக்கமே!

கிழக்காசிய நாடுகளைச் சுற்றி விட்டு வந்த உதய சூரியனே!

கடல் கடந்த நாடுகள் தங்களைப் புகழ்ந்து, கோலாகல வரவேற்பைத் தந்தன!

எதிரிகளும் ஊமையாகும்படி கலாச்சாரத் தூதுவராய் சென்று: கீர்த்திக் கொடி நாட்டிவிட்டு வந்தீர்!

தலைநகரம்; உமக்கு வீர வரலாற்று விழாவெடுத்துத் தாங்கொணா மகிழ்ச்சியுற்றது!

அது கண்டு; நாங்கள் தேனில் விழுந்த எறும்பு களானோம்!

உம் தோற்றம் கண்ட இடமெல்லாம்; மக்கள் பூந்தோட்ட மாயினர்!

உம் நோக்கம் படர்ந்த இடமெல்லாம்; வீரத்தின் விளையாடலாகத் திகழ்ந்தது!

அண்ணனே! நீர் தறுகண்மையின் தோற்றுவாய்!

இனியனே! பனியனைய மலர்க்கண்ணா!

பாவையர் கூட்டம் உம் பளிங்கு முகம் கண்டு, தமிழின்