பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

29

29 கொண்டு வந்தது தினம் அவர் வரவில்லை என்று சாயங்காலம் நான் வீட்டிற்கு திரும்பி வந்தவுடன் அதே பாடம் என் தாயாருக்கு ஒப்பித்துக்கொண்டு வந்தேன் ஆயினும் அவர்கள் மாத்திரம் தன் நம்பிக்கையினின்றும் கொஞ்சமும் மாறவில்லை, அடிக்கடி 'அப்பா, என்றைக்காவது ஒரு நாள் திரும்பி வருவார். கலங்காதே’ என்று எனக்கு தைரியம் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.


ஒரு நாள் காலை எழுந்தவுடன் திடீரென்று குழந்தை! இன்றைக்கு உன் அப்பா திரும்பி வருவதாக நான் நேற்றிரவு கனவு கண்டேன்-இன்றைக்கு எப்படியும் அவரை நாம் காண்போம் ரங்கூனிலிருந்து வரும் பிரயாணிகளை ஜாக்கிரதையாக உற்றுப் பார்த்துவா'- என்று சொன்னார்கள் அதை நான் நம்பாவிட்டாலும், அவர்களுக்கு 'ஆகட்டும்' என்று உத்திரவு சொல்லி, அன்றைத் தினம் வழக்கப்படி என் வேலைக்குப் போனேன்.


அன்றைத்தினம் ரங்கூன் நீராவிக் கப்பல், கொஞ்சம் கால தாமதமாகி வந்தது; நான் ஹார்பரில் (Harbour) பிரயாணிகள் வரும் வாயிலருகில் நின்று இறங்கி வரும் ஒவ்வொரு பிரயாணியின் முகத்தையும் கவனமாய் உற்றுப் பார்த்து வந்தேன் அவர்களில் ஒருவராவது என் தகப்பனாரின் ஜாடையுடையவனையும் காணவில்லை மனதில் மிக்க கிலேசத்துடன், நான் வீட்டிற்குத் திரும்ப, யத்தனிக்கும் தருவாயில், யாரோ ஒருவர் என் முதுகில் தட்டி ‘அடே கிழவா! உன்னை நான் இங்கு சந்திப்பேன் என்று நினைக்கவே யில்லை ' என்று சந்தோஷத்துடன் கூறிய சப்தம் என் செவியில் பட்டது. நான் ஆச்சரியத்துடன் திரும்பிபார்க்க, சென்ற யுத்தத்தில் என்னுடன் எங்கள் ரெஜிமெண்டில், என் பக்கலில் நின்ற யுத்தம் புரிந்த பழய சிநேகிதர் ஒருவரைக் கண்டேன் நாங்கள் கொஞ்சம் நேரம் ஒருவொருக்கொருவர் யோக க்ஷேமத்தை விசாரிப்பதில் கழித்தோம் நான் தங்கியிருக்கும் வீட்டின் மேல் விலாசம் அவருக்குக் கொடுத்த பிறகு அவர் என்னை விட்டுப் பிரியுமுன் "இந்தா கிழவா இதோ நான் பர்மாவிலிருந்து கொண்டு வந்த மங்குஸ்தான் பழங்கள், இவற்றை வாங்கிக் கொள்" என்று சொல்லி, எனக்கு 12 பழங்கள் கொடுத்தார், அவர் பின்னால் ஒரு போர்டர் தூக்கிக் கொண்டு வந்த கூடையினின்று அப் பழங்களைக் கண்டவுடன் என்னையும் அறி யாதபடி என் மனதில் ஒரு சந்தோஷம் உண்டாச்சுது- "சரிதான் ஆனால் எனக்கு ஆறுபழங்கள் போதும்” என்று கூறி, எனது நண்பர் எவ்வளவு சொல்லியும் கேளாமல் அவைகளில் ஆறு பழங்களை மாத்திரம் பொறுக்கி எடுத்துக் கொண்டேன், என்னிடம் இன்னொரு கூடை பழங்கள் இருக்கின்றன என்று அவர் எவ்வளவோ வற்புறுத்