பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

269


களைப் பெற்றுக் கொள்கின்றனர்.பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஆதிநாட்களில், மக்கள் காடுகளில் வாழ்ந்தபோது, அந்த கூட்டத்திற்கு ஒரு தலைமை தேவைப்பட்டது. விலங்குகளால் விளைகின்ற பேரபாயத்திலிருந்து காத்துக் கொள்ளவும், அவர்களைப் போல் கூட்டமாகக் கூடியிருந்து வாழ்ந்த கூட்டத்திலிருந்து பாதுகாப்புப் பெறவும், ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒவ்வொரு தலைமை இன்றியமையாததாகத் தேவைப்பட்டது.

அத்தகைய தலைமைப் பொறுப்பேற்கும் தகுதியுடையவருக்கு சில அதிசயமான குணாதிசயங்கள் வேண்டியிருந்தன. அந்த தலைவனுக்குரிய முக்கிய தகுதியாக அவனது வயது, வலிமை, அறிவாற்றல் கணக்கிடப்பட்டது.

இவ்வரிய பண்புகளை அதிகம் கொண்டிருக்கின்றவனே மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டான். அப்படி ஏற்றுக் கொண்டவர்களும் அவனைப் போற்றி, அவனைப் பின்பற்றி நடக்க, வாழ்ந்துசெல்ல முற்பட்டனர். ஆதலால் அவன் தலைவனானான். அவனது நிலைமை தலைமை என்று புகழ் பெறலாயிற்று.

ஆதி நாட்களில் இந்தத் தலைமைப் பொறுப்பு இடம், அறிவு, வயது, வலிமை கொண்டவர்களால் நிரப்பப்பட்டது. அதுவே குடும்பச் சொத்துபோல, பரம்பரை உரிமையாகவும் வரத்தொடங்கியது.

காலம் மாற மாற, அரசராட்சி முறை மாறி, மக்களாட்சி முறை மலர்ந்து வந்தது. பரம்பரை ஆட்சி முறை மாறியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தலைமைப் பொறுப்பினை ஏற்றார்கள்.