உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

நடப்பதாகக் கதை கட்டி விடுகிறார்கள். உண்மையில் இறைவனிடத்தில் பக்தி உண்டாக அற்புதங்களே வேண்டுவதில்லை. அற்புத மென்று தான் இங்கே குறிப்பிடுபவை, மனித சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளே. இறைவன் இந்த உடம்பைப் படைத்திருக்கிருனே, இதை விட அற்புதம் வேறு ஏதாவது உண்டா? இந்த உடம்பில் கண்ணை வைத்திருக்கிருனே, இது மாதிரி அற்புதத்தை மனிதன் செய்ய முடியுமா? உடம்புக்குள் இருதயம் ஒன்றை வைத்துத் துடிக்கச் செய்கிறானே அந்த மகா அதிசயமான அற்புதம் ஒன்றுக்கே இறைவனுக்கு நூறு புராணங்கள் பாடலாமே. இருதயத்துக்குள் உணர்ச்சியை எழுப்பி மூளைக்குள் அறிவை மலர்த்தி மனிதனைத் தன் அருளுக்குப் பாத்திரனாகும்படியாக அமைத்திருக்கும் அற்புதத்தைச் சிந்தித்துப் பார்த்தால் உள்ளம் உருகாதோ?

ஆகவே கதிர்காமத்தில் தனியே செப்பிடு வித்தைகளைப் போன்ற அற்புதங்களைக் கண்டுதான் பக்தி கொள்ள வேண்டும் என்பதில்லை. இலங்கையில் எங்கேயோ ஒரு மூலையில் காட்டில் இத்தனை மக்களைக் கூட்டம் கூட்டமாக முருகன் வரும்படி செய்கிறானே, அதுவே அற்புதம், பல சமயத்தவர்களும் ஒரே இடத்தில் வந்து பணியும்படி செய்வது அற்புதம். இத்தனை காலமாகியும் மகிமை குன்ருமல் இருப்பது அற்புதம்.

இந்த அற்புதங்களைச் சிந்தித்துப் பார்த்தால், உணர்ச்சியுடன் சிந்தித்துப் பார்த்தால், பக்தி உண்டாக வகை உண்டு. பக்தர்களுக்கு உள்ளம் உருகி இன்புற வழி உண்டு.

என்னுடைய அனுபவங்களை எழுத வேண்டுமென்று அன்பர்கன் விரும்பியமையால் இதனை எழுதலானேன். இது "அமிர்த் வசனி" என்ற மாதப் பத்திரிகையில் வெளியாயிற்று. அதன் ஆசிரியர், ஸ்ரீ சு. முத்துசாமி ஐயரவர்கள் என்பால் அளவற்ற அன்புடையவர். இந்த யாத்திரைக் கட்டுரைகள் வெளிவரும்போது என்னை மேலும் மேலும் தூண்டி ஊக்கமளித்த அவர்கள் அன்பை மிக்க நன்றியறிவுடன் பாராட்டுகிறேன்.

அருணகிரிநாதப் பெருமான் கதிர்காமத்தைப் பற்றிப் பாடிய திருப்புகழ்ப் பாடல்களை இப்புத்தகத்தின் இறுதியிற் சேர்த்திருக்கிறேன். அதன் பின் நான் பாடிய சில பாடல்களும் இருக்கின்றன.

இது கதிர்காமத்தின் புராணம் அன்று. கதிர்காமத்துக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு வழி காட்டும் துணை நூலும் அன்று. கதிர்காமத்துக்குச் சென்றபோதும் அத்தலத்தைத் தரிசித்த போதும் அப்பாலும் என் உள்ளத்தில் விளைந்த எண்ணங்களும் சித்திரங்களும் அமைந்த கட்டுரை இது. அந்த அளவிலே இதற்கு ஏதேனும் பயன் உண்டானால் முருகன் திருவருள் என்று எண்ணி மகிழ்வேன்.

மயிலாப்பூர்
கி.வா. ஜகந்நாதன் 25—8—53