இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
$3?
ஆற்றங்கரைப் பிள்ளையாரைப் போல அப்படியே சமைந்து விட்டான் மாமல்லன்.
டிரைவர் கொண்டு வந்த தண்ணிரை வாங்கி மேகலை யின் முகத்தில் திருமாறன் தெளித்தான். நூறு வினாடி களுக்குப் பிற்பட்டு, டாக்டர் வந்தார். மேகலை கண் திறந்தாள். திறந்ததும், முதன் முதலில் அத்தான்! “ என்று கூவினாள்.
மாமல்லனோ ஆடாமல் அசையாமல் கண்ணின் வடித்துக் கொண்டேயிருந்தான்.
“அத்தான், எனக்கு ஒன்றுமே இல்லை. அழாதீர்கள் அத்தான் ‘ என்ற சொற்கள் செங்கற்பட்டு ராஜபாட்டை யில் எதிரொலித்துக் கொண்டிருந்தன :