பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எனக்குப் பொறாமையாக
இருக்கிறது

கவிஞர் வாலி


கொண்டையா - ராஜூவும் -
கோபுலுவும்-
வரைந்த தெல்லாம்
வர்த்தகச் சந்தையில்
கிடைக்கும் - கவின்மிகு
கடைச் சித்திரங்கள்!

வி.ச. காண் டேகரும்
வ.ரா. வும் -
வரைந்த தெல்லாம்
வாசக சாலையில்
கிடைக்கும் - கருத்துமிகு
நடைச் சித்திரங்கள்!

ஆனால்...
என் இனிய நண்பர்
எழுத் தோவியர் -
என்.வி. கலைமணி!
எழில் கொஞ்ச வரைந்திருப்பது.
கடைச் சித்திரமுமல்ல, நடைச் சித்திரமுமல்ல.

தன் -
நூல்வகை களையே
நால்வகைச் சேனையாய்க் கொண்டு.
தமிழர்களுக்காக - ஒரு
தங்கத் தலைவன் நடத்திய -
தர்ம யுத்தம் பற்றிய
படைச் சித்திரம்!

தென் பொதிகையில்

23