அந்தமான் கைதி/22
Jump to navigation
Jump to search
காட்சி 22.
இடம் : திருமண மண்டபம்.
காலம் : காலை
(புரோகிதர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மேளவாத்தியம் முழங்குகிறது சிலர் வந்தவர்களை வரவேற்று, சந்தனம் தாம்பூலம் கொடுக்கின்றார்கள். ஐயர் சொற்படி பெண்ணும் மாப்பிள்ளையும் அரசாணியைச் சுற்றி வருகிறார்கள். பெண் மயங்கிக் கீழே விழுகிறாள், சிலர் தண்ணீர் தண்ணீர் என்றும், சிலர் தூக்குங்கள் தூக்குங்கள் என்றும் பல விதமாகப் பேசிக் கொள்ளுகிறார்கள். இதற்கிடையில் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்த ஜம்பு, பொன்னம்பலம் பிள்ளையையும் புரோகிதரையும் இடித்து ஜாடை காண்பித்துக் கழுத்தில் தாலியைக் கட்டச் செய்கிறான்.)