அன்பு வெள்ளம்/எதையும் தாங்கும்

விக்கிமூலம் இலிருந்து

எதையும் தாங்கும்

புதிதான் அன்பின் வியக்கத் தக்கவைகளில் முதன்மைப் படுத்திக் காட்டும் ஒன்றாக விளங்கும் மறைமொழி எதையும் தாங்கும் என்பது. காலங் காலமாக, நல்ல விளைவுக்காக, நல்லன. செய்வதற்காக, வறுமையினையும் துன்பத்தினையும் தாங்கிக் கொண்டு அவற்றினின்று நீங்காமல் நின்று நிலைத்திருப்பது அன்பின் செயற்படு பொருளில் ஒன்றான இந்த 'எதையும் தாங்கும்' என்னும் சொற்றொடர்!

வருத்தத்தை வெளிப்படுத்தாமல் ஆண்டாண்டுக் காலமாகத் தன்மறுப்பு என்னும் பேரில் எதையும் தாங்கிக் கொண்டுவருகிறது. இறையருள் உலகில் கொண்டு சேர்க்கத்தக்கது, "எதையும் தாங்குவது” என்னும் சொல்லின் அன்பின் செயற்பாடு. இது மாந்தர் தம்முள் எதையும் தாங்கும் அன்பினர்க்குக் கடவுள் என்ன செய்வார் என்பதனை விளக்கும் மறைபொருள் விளக்கம்! எதையும் தாங்கும் அன்பு என்பதன் அடுத்த கட்டம், அன்பு யாரையும் எப்போதும் கைவிடாது என்பதாம்.

அறிவு, நிலைகுலைந்து போகும்; அறிவு சார்ந்த மற்றவை யனைத்தும் கூடக் கைவிட்டு விடும். வலிமை கொண்டு முயன்று பார்த்தால் சட்டத்தின் துணை கொள்ளல், மன வலிமை கைக்கொள்ளல், ஆக இத்தனையும் நம்மைக் கைவிட்டுவிடும்; தோல்வியுறச் செய்யும். ஆனால் எதையும் தாங்கும் அன்பு, வெற்றியைத் தருமே தவிர தோல்வியைத் தருவதில்லை, கைவிட்டுவதில்லை, எந்த நிலையிலும்.

அன்பில் நம்பிக்கை வைக்கத் தொடங்கும் நேரம் நமது வாழ்வின் வெற்றி தொடங்கும் நேரம்! ஓர் அற்புத ஆற்றலை நம்பி, அதனைக் கைக் கொள்ளும் போது, புலனறிவுக்கும் மேற்பட்ட ஒரு அறிவுப் பெருவெளியில் சேர்க்கிறது அந்த அற்புத ஆற்றல்.

அன்பினில் நம்பிக்கை உறுதி கொள்பவர் வாழ்வில் நம்பிக்கை உறுதி கொள்பவர் ஆவார்.

நம்மைப் பற்பல சிக்கல் எதிர் கொள்ளினும் நம்மை அடிமைப்படுத்தி வைக்கும் இடுக்கண்கள் வந்தாலும் நம்மில் நமக்குத் துணையாக நிற்கும் வல்லமை படைத்த மிகப் பெரிய ஒன்று அன்புதான் என்று நாம் சொல்லலாம்,

உள்ளபடியே, அன்பு, நம்மை கடவுளின் அருள் உலகுக்கு உயர்த்துகிறது.