அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/புதிய பதவியின் அலுவல்

விக்கிமூலம் இலிருந்து


(65) புதிய தவியின் லுவல்



எலியட்பால் என்பவர் பிரபல ஆசிரியர், அவருடைய புகழ் காரணமாக அரசாங்கத்தில் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. “போர் முனையிலிருந்து திரும்பிய வீரர்களைக் கவனிக்கும் இயக்குநர்" என்று அந்தப் பதவிக்குப் பெயர்.

சுருக்கெழுத்தும் தட்டச்சும் தெரிந்த ஒரு பெண்ணைச் செயலாளராக நியமித்துக் கொண்டார் இயக்குனர். ஆனால், அந்தச் செயலாளருக்கு வேலை எதுவும் இல்லை.

போர் முனையிலிருந்து திரும்பிய 2,50,000 வீரர்களின் பட்டியல் ஒன்று புழுதி அடைந்து ஆவணக் காப்பகத்தில் கிடந்தது. அதை எடுத்து அந்தச் செயலாளரிடம் கொடுத்து, அதற்கு நான்கு பிரதிகள் டைப்செய்து கொண்டு வரும்படி கூறினார் இயக்குநர்.

அதன்பின் அவரும் மூன்றுமாதங்கள் உல்லாசப் பயணம் சென்று விட்டார்.

பட்டியல்களின் பிரதிகள் தயாராகி விட்டன. வரப்போகும் தேர்தல் பற்றிய பேச்சு அந்தச் சமயத்தில் தீவிரமாக எழுந்தது.

பட்டியலின் பிரதி ஒன்றை குடியரசுக் கட்சிக்கு 350 டாலருக்கு விற்றார்.

பாரபட்சம் இல்லாமல் ஜனநாயகக் கட்சிக்கும் பட்டியலின் ஒரு பிரதியை 500 டாலருக்கு விற்றார்.

மீதி இரண்டு பிரதிகளையும் ஒரு வண்டியில் போட்டு, அரசு ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி விட்டார் இயக்குநர்.

“இன்னும் அவை அங்கேதான் இருக்கும். யார் கேட்டாலும் விலைக்குக் கிடைக்கும். இலக்கியச் சங்கத்தாருக்கு விருப்பமானால் வாங்கிக் கொள்ளலாமே” என்றார் அந்த இயக்குநர்.