அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/மற்றொருவர் எங்கே?

விக்கிமூலம் இலிருந்து


(86) ற்றொருவர் ங்கே?



பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒரு நாள் குதிரைப் பந்தயத்துக்குப் போயிருந்தார். .

அங்கே அவருடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தார். நண்பர் அவரைப் பார்த்ததும், பரபரப்போடு, “கையில் இருந்ததையெல்லாம் தோற்றுவிட்டேன். ஊருக்குத் திரும்பிப் போக ஒரு டிக்கெட் வாங்கித் தர இயலுமா?” என்று கேட்டார்.

"நான் கூடத்தான் இன்று எவ்வளவோ தோற்று விட்டேன். எனக்கும் உனக்குமாக இரண்டு டிக்கெட் வாங்க இயலாது. ஒன்று செய்யலாம். நான் உட்கார்ந்திருக்கும் இடத்துக்குக் கீழே நீ மறைந்து கொள்; என் காலால் உன்னை

மறைத்துக் கொள்கிறேன். சம்மதமா?” என்றார் மார்க் ட்வைன்.

நண்பர் அதற்கு இணங்கினார். அவருக்குத் தெரியாமல் மார்க் ட்வைன் ரயில் நிலையத்துக்குப்போய், இரண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டார். -

ரயில் வந்தது. நண்பர் மார்க் ட்வைன் இருக்கைக்குக் கீழே புகுந்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து, டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

மார்க் ட்வைன் அவரிடம் இரண்டு டிக்கெட்டுகளைக் காண்பித்தார்.

'இன்னொருவர் எங்கே?" என்று கேட்டார் பரிசோதகர்.

மார்க் ட்வைன் தலையை அசைத்தவாறு, "இது என் நண்பருடைய டிக்கெட்! அவர் கொஞ்சம் ஒரு மாதிரி! இருக்கைக்கு அடியில் உட்கார்ந்து வருவதே அவர் வழக்கம்” என்று கிண்டலாகக் கூறினார்.