அறிவுக்கு உணவு/எப்படி மக்கள்?

விக்கிமூலம் இலிருந்து

எப்படி மக்கள்?

ஒருவன் பாதையில் சென்று கொண்டிருந்தான். அவன் துணியில் ஒரு ரூபாயை முடிந்திருந்தான். அவனை அடுத்துச் சென்ற ஒருவன் அதை அவிழ்த்தான் ரூபாய் மண்ணில் விழுந்தது. அவிழ்த்தவன் அதைக் கையால் எடுக்க முயன்றான். அதைப் பார்த்த வேறொருவன், அவன் கைம்மேல் தன்கையை வைத்து அழுத்தி, “ரூபாய் என்னுடையது” என்று வாதாடினான். எட்டியிருந்த ஒருவன் வந்து இருவருக்கும் இரண்டு அடிகள் கொடுத்துவிட்டு, ரூபாயை எடுத்துக்கொண்டு போனான். எல்லாவற்றையும் பார்த்திருந்த ஒருவன் ரூபாயைப் பறி கொடுத்த ஆளைக் கூப்பிட்டு உன் ரூபாய் எங்கே? எனக் கேட்டான். “ஆம் ஐயா! கீழே விழுந்து விட்டது கொடுத்து விடுங்கள்” என அவனையே கேட்டான் அவன் என்ன சொல்லியும் நம்பவில்லை. எப்படி மக்கள்? .