அறிவுக்கு உணவு/சிந்தனைச் செல்வம்

விக்கிமூலம் இலிருந்து
அறிவுக்கு உணவு


சிந்தனைச் செல்வம்


ஓயாது பேசிக்கொண்டிருப்பவன் தன் உள்ளத்தில் ஒன்றும் இல்லையென்பதைக் காட்டிக் கொள்ளுகிறான்.

ஒன்றுமே பேசாதிருப்பவன் தன்னுள்ளத்தில் எதையோ மறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் காட்டி விடுகின்றான்.

முன்னவனை ஒட்டைவாயன் என்றும் பின்னவனை அறிஞன் என்றும் கூறுகிறவன், தன் அவசர புத்தியைக் காட்டிக் கொள்ளுகிறான்.

முன்னவனை நல்லவன் என்றும், பின்னவனை வஞ்சகன் என்றும் கூறுகிறவன், தான் அவனைவிட அவசரக்காரன் என்பதைக் காட்டிக்கொள்ளுகிறான்.

இந்நால்வரும் சிந்தனைச் செல்வத்தை இழந்துவிட்டவர் என்பது அறிஞரின் முடிவு.