அறிவுக்கு உணவு/நாட்டிற்கு ஆபத்து

விக்கிமூலம் இலிருந்து

நாட்டிற்கு ஆபத்து

ஒரு நாட்டிலுள்ள மக்களுள் சிலர் மூடராயிருப்பதால் ஒன்றும் துன்பம் வந்துவிடுவதில்லை. அவர்கள் தங்களை அறிஞர்கள் எனக் கருதிக்கொண்டு செயலாற்றத் தொடங்கும் பொழுதுதான் துன்பமும் விளையத் தொடங்குகின்றன.

ஒரு நாட்டிலுள்ள மக்களுள் சிலர் அறிஞராய் இருப்பதால் ஒரு பயனும் உண்டாவதில்லை. ஆனால் அவர்கள் “நம்மால் எதுவும் செய்ய இயலாது.” என்று நினைக்கும்பொழுதுதான், அந்நாட்டிற்கு ஆபத்து விளையத் தொடங்குகிறது.