அறிவுக்கு உணவு/புலவர் பெருமக்களுக்கு

விக்கிமூலம் இலிருந்து

புலவர் பெருமக்களுக்கு

‘கற்று, உணர்ந்து, அடங்கு’ என்பதையே தமிழ்ப் புலவர்கள் படித்தார்கள்; அதையே தாங்களும் கையாண்டார்கள்; அதையே மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தார்கள். அதன் பலனாகத்தான் தமிழ்நாடு இன்று இவ்வாறு காட்சியளிக்கிறது.

இனிச் சிறிது காலத்திற்காவது புலவர் பெருமக்கள் அதை மாற்றி “கற்று, உணர்த்து, கிளம்பு” என்று சொல்லிக் கொடுப்பது நல்லது.