ஆசிரியர்:டாக்டர் வ. சுப. மாணிக்கம்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: மா | மாணிக்கம் வ. சுப. (1917–1989) |
தமிழறிஞர். டாக்டர் வ. சுப. மாணிக்கம் (ஏப்ரல் 17.1917 – ஏப்ரல் 25.1989) (வ.சுப. மா) தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த மூதறிஞர். தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் தமிழ் இமயம் என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மா. பன்முக ஆற்றல் உடையவர். மிகச் சிறந்த சிந்தனையாளரான இவர் எழுதிய நூல்கள் இவரைச் சிறந்த கவிஞராகவும், உரைநடை ஆசிரியராகவும், உரையாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், ஆய்வாளராகவும் நமக்குச் சுட்டிக் காட்டும் தன்மை உடையன. |
படைப்புகள்[தொகு]
- மனைவியின் உரிமை,1947
- கொடைவிளக்கு,1957
- இரட்டைக் காப்பியங்கள்,1958
- நகரத்தார் அறப்பட்டயங்கள்,1961
- தமிழ்க்காதல்,1962
- நெல்லிக்கனி,1962
- தலைவர்களுக்கு,1965
- உப்பங்கழி, 1972
- ஒருநொடியில்,1972
- மாமலர்கள்,1978
- வள்ளுவம்,1983
- ஒப்பியல்நோக்கு,1984
- தொல்காப்பியக்கடல்,1987
- சங்கநெறி,1987
- திருக்குறட்சுடர்,1987
- காப்பியப் பார்வை,1987
- இலக்கியச்சாறு,1987
- கம்பர்,1987
- தொல்காப்பியம் -எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை,1989
- திருக்குறள் தெளிவுரை,1991
- நீதிநூல்கள்,1991
- The Tamil Concept of Love
- A Study of Tamil Verbs
- Collected Papers
- Tamilology
![]() |
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
|
![]() |