உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/ஓநாயின் கேள்வி

விக்கிமூலம் இலிருந்து

ஆட்டை வெட்டி இடையர்கள்

ஆசை யோடு கூடியே

வீட்டில் உண்ண லாயினர்;

‘விருந்து’ என்று கூறினர்.

‘கோனார் ஐயா!’ என்றதும்,

குரலைக் கேட்டுத் திரும்பினர்.

ஓநாய் ஒன்று அவ்விடம்

உரைத்த வார்த்தை கேட்டனர்.

‘வளர்த்த ஆட்டை நீங்களே

வதைத்துக் கொன்று தின்கிறீர்.

உளத்தில் மகிழ்ச்சி பொங்கவே

உண்டு ஏப்பம் விடுகிறீர்.

ஆட்டில் ஒன்றை நானுமே
அடித்துக் கொல்ல வந்திடின்,
வேட்டை நாயை ஏவுவீர்;
வேங்கை போலச் சீறுவீர்.

என்னை விரட்டி விட்டபின்
ஏதும் போட்டி யின்றியே,
கொன்று ஆட்டைத் தின்கிறீர்,
கொடிய மனிதர் நீங்களே!’