எனது நாடக வாழ்க்கை/பெரியண்ணா திருமணம்

விக்கிமூலம் இலிருந்து
பெரியண்ணா திருமணம்

கல்லிடைக்குறிச்சியில் இருந்தபோது பெரியண்ணாவுக்குத் திருமண ஏற்பாடு நடைபெற்றது. நாடகம் முடிந்தபின் சாமான்களையெல்லாம் கொல்லத்திற்கு அனுப்பிவிட்டு எல்லோருமாக நாகர்கோயில் போய்ச் சேர்ந்தோம். கவிமணி தேசிக விநாயகனாரின் ஊராகிய புத்தேரியைச் சார்ந்த திருமதி பேச்சியம்மை அவர்களுக்கும் பெரியண்ணா டி. கே. சங்கரன் அவர்களுக்கும் 1929 நவம்பர் 21 இல் புத்தேரியில் திருமணம நடந்தேறியது. இதுவே எங்களுக்குத் தெரிந்து, குடும்பத்தில் நடந்த முதல் திருமணம், நாங்களெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம். ஆனால், பெரியண்ணாவுக்கு மட்டும் , திருமணம் மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை.

திருமணத்திற்காக நாங்கள் எல்லோரும் நாகர்கோவில் ஒழுகினசேரியில் ஒரு இல்லத்தில் தங்கியிருந்தோம். திருமணம் முடிந்த இரண்டாம் நாள் இரவு, சிற்றப்பாவுக்கும், என். எஸ். கிருஷ்ணனுக்கும் சிறு தகராறு ஏற்பட்டது. சிற்றப்பா என். எஸ். சிருஷ்ணனை வாயில் வந்தபடி திட்டிவிட்டார். என். எஸ் கிருஷ்ணன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, திடீரென்று அன்றிரவே மதுரைக்குப் புறப்பட்டுப் போய், ஜெகன்னாதைய்யரின் பால மீன ரஞ்சனி சங்கீத சபையில் சேர்ந்துகொண்டார். விபரம் அறிந்த நாங்கள் வருந்தினோம். பெரியண்ணாவுக்கு ஏற்கனவே மண வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டிருந்த நிலையில் என். எஸ். கிருஷ்ணன் ஒடிப்போன செய்தி மேலும் வேதனையை வளர்த்தது.

கலைவாணரின் நல்லுணர்வு

நாங்கள் கொல்லம் நாடகம் முடிந்து, ஆலப்புழையில் நடித்துக் கொண்டிருந்தோம். ஜெகன்னாதய்யர் கம்பெனியி லிருந்து அப்போது தான் நவாப் ராஜமாணிக்கம், காமடியன் சாரங்கபாணி, ஏ. எம். மருதப்பா, சிதம்பரம் ஜெயராமன் முதலியோர் விலகி, அவர்களுக்கும் ஜெகன்னதய்யருக்கும் வழக்கு நடந்து கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் என். எஸ். கிருஷ்ணன் தமது கம்பெனிக்கு வந்ததும் ஐயர் மிகவும் சந்தோஷப்பட்டு, சாரங்கபாணி போட்டு வந்த வேடங்களை யெல்லாம் கிருஷ்ணனுக்குக் கொடுத்துக் கெளரவத்தோடு நடத்தி வந்தார்.

ஜெகன்னாதய்யரிடம் செல்வாக்கோடு இருந்து வந்த அந்த நிலையிலும், என். எஸ். கிருஷ்ணனுக்கு எங்கள் குழுவின் மீதே பற்றுதல் இருந்து வந்தது. இரவில் உறக்கம் பிடிக்கவில்லை. அவசரத்தில் ஐயருக்கு ஒப்பந்தமும் எழுதிக் கொடுத்திருந்தார். ஒரு நாள் திடீரென்று புறப்பட்டு, நேராக ஆலப்புழைக்கே வந்து விட்டார். தம்மால் அங்கிருக்க முடியவில்லையென்றும், பயிற்சி பெற்ற இடத்திலேயே இறுதிவரை இருக்க வேண்டுமென்று தமது நல்லுணர்வு தூண்டியதாகவும் கூறினார். நாங்கள் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தோம்.

கலைவாணருக்கு நெருக்கடி

சில நாட்கள் சென்றன. ஒருநாள் எல்லோரும் ‘பாட் மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தோம். யாரோ ஒருவர் வந்து, என். எஸ். கிருஷ்ணனைப் பார்க்கவேண்டுமென்று கூறினார். நாங்கள் கிருஷ்ணனைக்காட்டினோம், வந்தவர் ரகசியப்போலீசைச் சேர்ந்தவர். அவர் உடனே என். எஸ். கிருஷ்ணனைக் கைது செய்து அழைத்துச் சென்றார். எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சி! ஜெகன்னாதய்யர், என். எஸ். கிருஷ்ணனைத் திருட்டு வழக்கில் சம்பந்தப்படுத்தி, வழக்குத் தொடர்ந்திருந்தார். *அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள், மானேஜர் காமேஸ்வர ஐயரும், சிற்றப்பாவும், போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று ஏதேதோ செய்து பார்த்தார்கள். ஜாமீனில் விடுவிக்க முயற்சி செய்யப்பட்டது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் ‘பிரிட்டிஷ் ரெசிடெண்ட்’ கட்டளைப்படி கைது செய்யப்பட்டதால் எதுவும் செய்ய இயலவில்லை. மதுரைக்குப் போய்த்தான் ஜாமீனில் விடுதலைக்கு முயற்சிக்க வேண்டுமென்று திருவாங்கூர் போலீசார் கூறிவிட்டார்கள். கைதியைப்போல் கையில் விலங்கு பூட்டப்பட்டுக் கலைவாணர் கால்நடையாகவே கொல்லம்வரை அழைத்துச் செல்லப்பட்டதாக அறிந்து எல்லோரும் வேதனைப்பட்டோம். வேறு முயற்சிகள் எடுத்துக் கொள்ளக்கூடிய வசதிகள் ஏதுமில்லாததால் சக்தியற்ற நிலையில் புலம்பிக் கொண்டிருந்தோம். பெரியண்ணா மீதும், சிற்றப்பா மீதும் எங்களுக்கெல்லாம் வருத்தம் ஏற்பட்டது. மதுரையில் ஏதோ செய்யப் போவதாக எண்ணியிருந்தோம். மதுரையி லிருந்த எங்கள் நண்பர்கள் வீரமணி ஐயருக்கும் கிட்டு ராஜு விக்கும் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டது. ஜெகன்னதய்யரின் சூழ்ச்சியின் முன், அவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் என். எஸ். கிருஷ்ணனின் தந்தையார் மதுரைக்குச் சென்று, கிருஷ்ணனை ஐயர் கம்பெனியிலேயே இருக்கச் செய்த பிறகுதான் திருட்டு வழக்கு வாபஸாயிற்று. கம்பெனியிலிருந்து விலகிச் செல்லும் நடிகர்கள்மீது இவ்வாறு திருட்டுக் குற்றம் சுமத்துவதும், போலீஸாரைக் கையில் போட்டுக் கொண்டு தொல்லைகள் கொடுப்பதும், விடுபட இயலாத சூழ்நிலையை உண்டாக்கி அவர்களை மீண்டும் தங்கள் கம்பெனியில் சேர வைப்பதும் அன்று சில குறிப்பிட்ட நாடக முதலாளிகளின் வழக்கமாக இருந்து வந்தது.

இரு சகோதரர்கள்

பெரியண்ணாவுக்குத் திருமணம் முடிந்து புறப்பட்டபோது இரு சகோதரர்கள் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார்கள். மூத்தவர் என். எஸ். பாலகிருஷ்ணன். இளையவர் என். எஸ். வேலப்பன். இருவரும் வெகு விரைவில் முன்னுக்கு வந்தார்கள். என். எஸ். பாலகிருஷ்ணன் கம்பெனியின் முக்கிய பெண் வேடதாரியாக விளங்கினார். வேலப்பனும் மாயா சூர்ப்பனகை போன்ற பாத் திரங்களில் மக்களின் புகழ்ச்சிக்குப் பாத்திரமானார். பால கிருஷ்ணன் சிறந்த முறையில் நடித்து வந்ததோடு, ஒய்வு நேரங் களில் ஆர்மோனியமும் பயின்று வந்தார். எதிர்காலத்தில் அவர் ஒருசங்கீத டைரக்டராகத் திகழுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆம்; பிற்காலத்தில் பிரபலத் திரைப்படப் பின்னணி சங்கீத இயக்குநராகவும், எம். ஜி. ஆர். குழுவின் சங்கீத டைரக்ட ராகவும் விளங்கிய என். எஸ். பாலகிருஷ்ணனைத்தான் குறிப்பிடு கிறேன். என். எஸ். கிருஷ்ணன் திரைப்படத் துறையில் புகுந்த பின் அவர் பாலகிருஷ்ணனுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்ததாலும், தமது இடைவிடா முயற்சியிலுைம் இவர் ஒரு சிறந்த சங்கீத டைரக்டராக விளங்கினார்.

சங்கரமேனன்

கேரளப் பகுதிக்கு நாங்கள் சென்றபோது சங்கரமேனன் எங்கள்கம்பெனியில் சேர்ந்தார்.இவர் மிகநன்றாக ஆர்மோனியம் வாசிப்பார். ஏற்கனவே ஜெகன்னுதையர் கம்பெனியில் நீண்ட காலம் இருந்தவர். இவர் கம்பெனியில் சேர்ந்தபின் நடிகர்கள் எல்லோருக்கும் முறையாக சங்கீதப் பயிற்சி அளிக்கப்பட்டது. கே. ஆர். ராமசாமி, டி. கே. பகவதி, நான், சின்னண்ணா அனைவரும் இவரிடம் இசை பயின்றுவத்தோம். ஜண்டை வரிசை யிலிருந்து தொடங்கி, வர்ணம் வரை எல்லா நடிகர்களும் கர்நாடக இசையை இவரிடம் பயின்றார்கள். தியாகையர், திட்சிதர், சாமா சாஸ்திரி, பட்டினம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் தெலுங்கு வடமொழிக் கீர்த்தனைகளை இவர் நன்கு பயிற்றுவித்தார். ஏற்கனவே நல்ல இசைத் திறமையுள்ள நடிகர்கள், இவர் அளித்த பயிற்சியால் மேலும் தேர்ச்சிப் பெற்று விளங்கினார். சிலர் பிற்காலத்தில் இசைப்புலவர்களாகவே விளங்கு வதற்கு இவர் அளித்த பயிற்சியே பயன்பட்டதென்று சொல்ல வேண்டும். இவரை சங்கர பாகவதர் என்றே நாங்கள் அழைத்து வந்தோம். -

பெரியண்ணாவின் உறுதி

கம்பெனி தொடர்ந்து நடைபெற்று வந்தது. பெரியண்ணா வின் திருமணத்திற்குப்பின் நாங்கள் மதினியோடும், தாயோடும் தனியே வசித்து வந்தோம்; பெரியண்ணா வீட்டிற்கு வருவதே இல்லை. அம்மாவுக்கு இதனால் ஏற்பட்ட மன வருத்தம் சொல்லி முடியாது. பெரியண்ணாவுக்கு இரண்டாந் தாரமாக மற்றொரு அழகிய பெண்ணே மணம்செய்து வைக்க எவ்வளவோ முயன்றார், பெரியண்ணா மனைவியுடன் மனமொத்த வாழ்க்கை நடத்தவில்லை யென்றாலும், மறுதாரம் செய்து கொள்ளப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். அம்மாவுக்கு இதுவே பெரிய கவலையாகப் போய்விட்டது. அடிக்கடி ஏதாவது நோய் வந்து தொல்லே கொடுக்க ஆரம்பித்தது.

மனநோய்க்கு மருந்தேது? அன்னையார் எப்போதும் இதே நினைவில் இருந்து மனம் வெதும்பினார். மூத்த புதல்வரின் வாழ்க்கையைப் பாழ்படுத்தி விட்டோமே என்ற உணர்ச்சி அவரை உருக்குலைத்து விட்டது.பெரியண்ணா வீட்டிற்கு வருவதே இல்லை. உணவு, உறக்கம் எல்லாம் கம்பெனி வீட்டிலேயே நடந்துவந்தன. மதினியாரின் நிலை மிகவும் பரிதபிக்கத் தக்கதாய் இருந்தது. பாவம்! பெண்ணல்லவா? அவர் தமது மன உணர்ச்சிகளையெல் லாம் அடக்கிக்கொண்டு ஒரு உத்தமமான குடும்பத் தலைவிக் குரிய முறையில் எல்லோரிடமும் அன்போடும், பண்போடும் பழகினார். நானும் சின்னண்ணாவும் மதினியாரின் நிலையை எண்ணியெண்ணி வருந்தினோம். முக அழகு குறைந்துவிட்டால்: என்ன? வேறு எவரிடமும் காண்பதற்கரிதான அக அழகு. அண்ணியாரிடம் நிறைவு பெற்றிருந்தது. அதுவே அவரது: வாழ்க்கையை உயிர்ப்பித்தது என்றும் சொல்லலாம்.

உத்தமமான மனிதர்

இந்தச் சமயத்தில் ஆலப்புழையில் என் சிறு தவருல் நேர இருந்த ஒரு பேரிழப்பு என் நினைவிற்கு வருகிறது. நாங்கள் எங்களுடைய பரிசுப் பொருட்கள் அனைத்தையும் ஒரு சிறு பெட்டி யில் வைத்து, நாடகத்திற்குப் போகும்போது கையில் கொண்டு. செல்வதும் திரும்பும்போது பத்திரமாகக் கொண்டு வருவதும். வழக்கம். அப்பெட்டியில் இருந்த பொருட்களின் மொத்த மதிப்பு அந்த நாள் கணக்குப்படி பத்தாயிரம் ரூபாய்வரை இருக்கலாம். ஒருநாள், நாடகம் முடிந்து திரும்பியபோது மிகுந்த அசதியாக இருந்தது. இரவு இரண்டு மணிக்கு வந்து, வீட்டுக் கதவைத் தட்டினோம். கதவைத் திறக்கச் சற்று நேரமானதால் பெட்டியை வைத்துவிட்டு முன் திண்ணையில் உட்கார்ந்தோம். சற்று நேரத். தில் கதவு திறக்கப்பட்டது. என்ைேடு வந்த சின்னண்ணாவும், பகவதியும், சிற்றப்பாவும் உள்ளே சென்றார்கள். நானும் மறதி யால் பெட்டியை எடுக்காது அவர்களைப் பின் தொடர்ந்தேன். பெட்டியைப் பற்றிய நினைவே எனக்கில்லை. வரல்லை. வழக்கம் போல் உறக்கத்தில் ஈடுபட்டோம். பொழுது விடிந்தது. அப்போது பெட்டியைப் பற்றிய நினைவு வரவில்லை.வெளியில் யாரோ அழைப்பதாக ஒரு பையன் சிற்றப்பாவைக் கூப்பிட்டான். அழைத்தவரின் பெயரைக் கேட்டதும் சிற்றப்பா விரைவாகச் சென்றார், ஒருமணி நேரத்திற்குப்பின் முன்னால் இரவு தவற விட்ட பெட்டியோடு திரும்பி வந்த அவரைக் கண்டதும் எனக்கு ‘பகீர்’ என்றது. இரவு திண்ணையில் வைத்த பெட்டியை உள்ளே எடுத்துவர மறந்தது அப்போதுதான் நினைவு வந்தது.

ஆலப்புழையில் திரு. ராஜப்ப ரெட்டியார் என்பவர் பெரிய வணிகர். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே அவரது வீடு இருந்தது. வழக்கம்போல் அதிகாலையில் உலாவப் புறப்பட்ட அவர், கருக்கிருட்டில் திண்ணையில் ஒரு பெட்டியிருப்பதைக்கண்டு சுற்றுமுற்றும் பார்த்திருக்கிறார், எங்கும் யாரையும் காணவில்லை. சற்றுநேரம் நின்று பார்த்துவிட்டு, பெட்டியை அவரே எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். வீட்டுக்குச் சென்று பெட்டியைத் திறந்து பார்த்ததும் அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது. மெடல்களிலிருந்த பெயர்களைப் பார்த்ததும் அவருக்கு உண்மை விளங்கி விட்டது. உடனே சிற்றப்பாவுக்கு ஆளனுப்பியிருக்கிறார், *சின்னப்பிள்ளைகள் மறந்தாலும், “பெரியவராகிய நீரல்லவா பெட்டியைப் பத்திரமாகக் கொண்டு போயிருக்க வேண்டும்!” என்று சிற்றப்பாவையும் கடிந்துகொண்டார் அவர். எங்களுக்குப் பொருளாதார நெருக்கடி அதிகமாயிருந்த அந்த நேரத்தில், ! நாங்கள் அப்பெட்டியை இழந்திருந்தால் என்ன ஆயிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோது எங்களுக்கு உண்மையிலேயே அழுகை வந்துவிட்டது. பெட்டி ஒரு உத்தமமான மனிதரின் கையில் கிடைத்ததற்காக இறைவனுக்கு வணக்கம் செலுத்தினோம். 1931-இல் கம்பெனிக்கு மிகப்பெரிய கஷ்டம் வந்த காலத்தில் இந்தப் பெட்டியிலிருந்த விலையுயர்ந்த பொருட்கள் தான் எங்களுக்கு உதவின என்பதை எண்ணிப்பார்க்கும்போது இப்போதும் அந்த உத்தமமான மனிதரை நினைத்துக் கொள்கிறோம்.

மீண்டும் கலைவாணர் வந்தார்

ஆலப்புழைக்குப் பிறகு கோட்டயம், கொச்சி, திருச்சூர், பொள்ளாச்சி முதலிய பல ஊர்களுக்குச் சென்றோம். எங்கும். வருவாய் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டோம். சிலமாதங்களுக்குப் பின் கரூர் வந்து சேர்ந்தோம். திடீரென்று ஒரு நாள் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. என். எஸ். கிருஷ்ணன் எழுதியிருந்தார். ஜெகன்னதையர் கம்பெனி யாழ்ப் பாணத்தில் கலைந்துவிடக் கூடிய நிலையில் இருப்பதாகவும், அப்படி ஏற்படுமானல் மீண்டும் எங்கள் கம்பெனிக்கே வந்து விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தச் செய்தி எங்களுக்குப் பெரு, மகிழ்ச்சி அளித்தது. ஒரு வாரத்திற்குப்பின் என். எஸ். கிருஷ்ணன் தந்தி கொடுத்திருந்தார். ஐயர் கம்பெனி கலைந்து விட்டதாகவும், உடனே பணம் அனுப்பும்படியாகவும் வந்த தந்தியைக் கண்டதும், பெரியண்ணா மகிழ்ந்து தந்தி மணியார்டர் அனுப்பினார். கிருஷ்ணன் மூன்று நாட்களில் கரூருக்கு வந்துசேர்ந்தார். ஜெகன்னதையர் கம்பெனிச் செய்திகளையெல்லாம் கதை. கதையாகச் சொன்னார். ஒரு வார காலம் அவர் கூறிய சுவையான கதைகளைக் கேட்பதிலேயே பொழுதைப் போக்கினோம்.

புதிய இளைஞர்

கரூரில் புதிய இளைஞர் ஒருவர் எங்கள் குழுவில் சேர்ந்தார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். அங்குள்ள பிள்ளையார் கோயிலில் அர்ச்சகராக இருந்தவர். வைதீகப் பிராமணர்போல் குடுமி வைத்திருந்தார். சுமாராகப் பிடில் வாசிக்கக் கூடியவர். தம்மோடு ஒரு பிடிலையும் கொண்டு வந்திருந்தார். சின்னண்ணாவும் பிடில் வாசிக்கக் கூடியவரானதால் அவரும் புதிய இளைஞரும் அடிக்கடி பிடில் வாசித்து வந்தார்கள். இளைஞருக்கு நல்ல வாட்டசாட்டமான சரீரம். சாரீரமும் அதற்கேற்றபடி அமைந்திருந்தது. அப்போதெல்லாம் இரணியன், எமதருமன், கடோற்கஜன் முதலிய பாத்திரங்களை எல்லாம் எங்கள் பெரியண்ணா டி. கே. சங்கரன் தாம் ஏற்று நடிப்பது வழக்கம். அவர் தம் வேடங்களை ஒவ்வொன்றாகக் குறைத்துக் கொண்டு வந்தார். புதிதாக வந்த இளைஞர் இரண்டொரு நாடகங்களில் சில்லரை வேடங்களில் நடித்துப் பழகினார். பிறகு அவருக்கு அபிமன்யு சுந்தரியில் கடோற்கஜன் கொடுக்கப்பட்டது.

அபிமன்யு கதை

சங்கரதாஸ் சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகக் கதை உங்களுக்குத் தெரியுமல்லவா? ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, தமது புதல்வி சுந்தரியைத் துரியோதனன் மகன் இலக்கணனுக்குக் கொடுக்க முடிவு செய்து விடுகிறார். இந்தச் செய்தியறிந்த சுந்தரி தன் அத்தை மகன் அபிமன்யுவுக்கு ஒலை அனுப்புகிறாள். வீரன் அபிமன்யு அந்தத் திருமணத்தைத் தடுத்துச் சுந்தரியை மீட்க வீராவேசத்தோடு புறப்படுகிறான்; வழியில் பீமன் மகன் கடோற் கஜனச் சந்திக்கிறான். இன்னாரென்று தெரியாமல் இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கடைசியில் உண்மை யறிந்து உறவாடி இருவருமாகப் புறப்படுகிறார்கள். அதன் பின் அர்ஜூனனின் மற்றொரு மகன் அரவானைச் சந்திக்கிறார்கள். அங்கேயும் ஆள் தெரியாமல் போர் நடக்கிறது. இறுதியில் சகா தேவன் மகன் தொந்திசெட்டி குறுக்கிடுகிறான். அங்கேயும் சண்டை நடக்கிறது. பிறகு சமாதானம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நால்வரும் துவாரகைக்குச் செல்லுகிறார்கள். துரியோ தளுதியரை முறியடித்து வெற்றி பெறுகிறார்கள். அபிமன்யுவுக்கும் சுந்தரிக்கும் திருமணம் இனிது நடைபெறுகிறது. இது தான் நாடகக் கதை.

தொந்திசெட்டி ஒரு நகைசுவைப் பாத்திரம். சகோதரர் மூவரோடும் அவர் சண்டை போடுகிற காட்சி மிகவேடிக்கையாக இருக்கும். கடோற்கஜனும், தொந்திசெட்டியும் மற்போர் புரிவது, சபையோரிடையே பெரும் ஆரவாரத்தையெழுப்பும். இறுதியில் தொந்திசெட்டியே தோல்வியடைய வேண்டும். புதிய இளைஞர் கடோற்கஜன் வேடம் தாங்கி மிக நன்றாக நடித்தார். தோற்றமே கடோற்கஜனுக்குப் பொருத்தமாக இருந்ததால் விரைவில் சபையோரின் பாராட்டைப் பெற்றார். தொந்தி செட்டியோடு நாங்கள் சண்டை போடும் காட்சி வந்தது. என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் ஒத்திகையில் அவருக்குத் தெளிவாகச் சொல்லியிருந்தோம். அந்தக் கடோற் கஜன், தம் உடல் வலிமையில் நம்பிக்கை வைத்து, ஹாஸ்ய நடிகரான தொந்தி செட்டியை அலாக்காக மேலே தூக்கிக் கீழே போட்டு உருட்ட எண்ணினார். அதற்கு முன் கடோற்கஜனுக நடித்தவர்கள் யாரும் அப்படிச் செய்ததில்லை. அந்தக் காட்சியில் மேடைக்கு வரும்போது கடோற்கஜன் என்னிடம் இந்த ஆசையை வெளியிட்டார். நான் சிரித்துக் கொண்டே, “முடிந்தால் செய்யுங்கள். அதிலொன்றும் தவறில்லை. வேடிக்கையாகத் தானிருக்கும்” என்று கூறினேன்.

கடோற்கஜன் வீழ்ந்தார்

காட்சி நடைபெற்றது. சண்டை துவங்கியது. கடோற்கஜன் தொந்தி செட்டியைத் தூக்க முயன்றார். எதிர்பாராத நிலையில் தொந்தி செட்டி லாவகமாக விலகிக் கொண்டார். அத்தோடு நிற்கவில்லை. கடோற்கஜனின் வலது கையைப் பிடித்து அப்படியே அவரை முதுகில் தூக்கித் தடாரென்று கீழே மல்லாந்து விழச் செய்தார். எல்லாம் இமைகொட்டும் நேரத்தில் நடந்து விட்டது. கடோற்கஜன் கீழே பரிதாபமாகக் கிடக்கிறார். தோல்வியடைய வேண்டிய தொந்திசெட்டி, வெற்றிப் பெருமிதத்தோடு, “தொந்திசெட்டியைத் தூக்கவா பார்க்கிறாய்?” என்று கூறி நகைக்கிறார். அபிமன்யுவாக நின்ற எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சபையில் ஒரே கரகோஷம்.

தொந்திசெட்டியாக நடித்தவர் என். எஸ். கிருஷ்ணன். அவர் ஒல்லியான சரீரமுடையவர். ஆனால் கொஞ்சம் குஸ்தி முறைகளெல்லாம் தெரிந்தவர். நல்ல துணிச்சல் பேர்வழி. அவர் மலை போன்ற சரீரத்தைத் தூக்கியடித்தது எல்லோருக்கும் பெரு வியப்பை அளித்தது. மேடையில் நின்ற எனக்கும் அரவானுக்கும் . சிரிப்புத் தாங்கவில்லை. தொந்தி செட்டி தம்மைத் துாக்க முடியுமெனக் கனவிலும் கருதாத புதிய இளைஞர் கடோற்கஜன் அசட்டுச் சிரிப்புடன் எழுந்து நின்றார். அன்று அவ்வாறு திண்டாடித் திணறிய கடோற்கஜன் மலை வேறு யாருமல்ல. நமது புளிமூட்டை ராமசாமியே!

பிள்ளை விளையாட்டு

புளிமூட்டை ராமசாமி நன்றாகப் பாடுவார். கதா காலட் சேபம் செய்வார். வடமொழியில் உள்ள மந்திரங்கள் பலவற்றை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். நாங்கள் எல்லோரும் காலையில் அமராவதி ஆற்றுக்குப் போய் குளிப்பது வழக்கம். போகும்போது நான், என். எஸ். கிருஷ்ணன், புளிமூட்டை ராம சாமி, எஸ். வி. சகஸ்ரநாமம், மற்றொரு நகைச்சுவை நடிகர் சுந்தரம் ஐயர் எல்லோரும் ஒன்றாகக் கையைக் கோர்த்துக் கொண்டு வீதியில் மந்திரங்களை முழக்கிக் கொண்டே போவோம்.

"சன்னோ மித்ரசம் வருணஹ
சன்னை யவத் துரியமாம்
சன்ன இந்த்ரோ
பிருஹஸ் பதிஹி"

என இவ்வாறு நாங்கள் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு போவதை வீதியில் அனைவரும் பார்த்துச் சிரிப்பார்கள். சில பிரா மணர்கள், இதைப் பிள்ளை விளையாட்டாகக் கருதாமல் தங்களைக் கேலி செய்வதாக எண்ணிப் பெரியண்ணாவிடம் புகார் செய்தார் கள். இதன் பிறகு மந்திரங்களை வீதியில் சொல்லக் கூடாதென்று எங்களுக்குத் தடையுத்திரவு போடப்பட்டது.