ஒப்பிலாமணிப் புலவர் பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:
ஒப்பிலாமணிப் புலவர் பாடல்கள்
பாடல்கள் 27
நூலில் பக்கம் 71 முதல் 75
***
குறிப்புரை - செங்கைப் பொதுவன்



1-3[தொகு]

அகவல்

ஆடெரி படர்ந்த கோடுயர் அடுப்பில்
ஆம்பி பூப்பத் தீம்பசி உழல
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைதொறும் சுவைதொறும் பால்காணாமற்
குழவி தாய்முகம் நோக்க
மனைவி என்முகம் நோக்க யாமும்
நின்முகம் நோக்கி வந்தனம் குமுணா. (1)

குமுணராசன்

அந்தநாள் வந்திலை அருங்கவிப் புலவோய்
இந்தநாள் வந்துநீ நொந்தெனை அடைந்தாய்
தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்ததன்
விலைதனைப் பெற்றுன் வறுமைநோய் களையே. (2)
மாந்தையிலே வாழு மகுடத் தியாகியுனக்
கேந்து தழும்போ இரண்டுளதே- வேந்தர்
முடித் தழும்புன் காலிலே முத்தமிழோர்க் கீயும்
படித் தழும்புன் கையிலே பார். (3)

4-6[தொகு]

வெம்புங் காலை வெதும்பி விழுஞ்சிரம்
செம்பொன் கோடிவிலை யெனச் சிந்தித்தான்
உம்பர் நாடும் உலகினும் தேடினும்
எம்பிபோல் எமக்குயாவர் உரியரே. (4)
ஆறுபெருக்கற் றருந்திடர் தான் பட்டாலும்
ஊறலமை யாதோ உலகாற்றத்- தேற
வறியையே யானாலும் என்கலியை மாற்றச்
சிறியையோ சீர்க்குமுணா செப்பு. (5)
வில்லை வளையாதே மீசை முறுக்கிச் சினத்து
முல்லை மலரம்பை யென்மேன் மோதாதே- நில்லடா
வந்தாரடா முருகர் வந்து கடப்பந் தாரைத்
தந்தாரடா மன்மதா. (6)

7-9[தொகு]

செந்திற் குமாரன் திருவழகைக் கண்டவுடன்
வந்திக் குமாரன் வதைக்கிறான்- அந்திக்கு
முன்னமே சென்றெனது மோகமெலாஞ் சொல்லி வந்தால்
அன்னமே கும்பிடுவேன் யான். (7)
தங்கடன மிருக்கத் தார்வேந்த ரெல்லோரும்
எங்க டனத்துக்கே யிச்சிப்பார்- எங்கடனம்
கச்சிருக்கும் பாலிருக்கும் காமபாணங்கள் பட்டுப்
பிச்சிருக்கும் வேண்டாம் பிளாய். (8)
இடுவோர் சிறிதிங்கு இரப்போர் பெரிது
கெடுவாய் நமனே கெடுவாய்- படுபாவி
கூவத்து நாரணனைக் கொன்றாயே கற்பகப்பூங்
காவெட்ட லாமோ கரிக்கு. (9)

10-12[தொகு]

மையூரும் கண்ணார் மயங்கப் பொருகரும்பு
கையூரும் காமாவுன் கண்ணானை- செய்யூர்
வளவனை யினான் பிரிந்த வாறுனக்குச் சொன்ன
உளவனை யினானென் றுரை. (10)
ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ யான்வளர்த்த
கோழிவாய் மண்கூறு கொண்டதோ- ஊழி
திரண்டதோ கங்குறின கரனுந் தேரும்
உருண்டதோ பாதாளத் துள். (11)
அரவங் கரந்ததோ அச்சுமரம் இற்றுப்
புரவிக் கயிறுருவிப் போச்சோ- இரவிதான்
செத்தானோ இல்லையோ தீவினையோ பாங்கியெனக்
கெத்தால் விடியும் இரா. (12)

13-15-[தொகு]

முலையுங் குழலும் முளைப்பதற்கு முன்னே
கலையும் வளையும் கழன்றாள்- மலையில்
சிராப்பளியா னேறிவரும் செவிமணி யோசைக்
கிராப்பளியும் கொள்ளா ளிவள். (13)
பாண்டியன் றாரானேன் பசலைமுலைப் பாலானேன்
ஆண்டிகையில் ஏந்திய தொன்றானேனே- வேண்டியபோ
துள்ளங்கைத் தேனானேன் ஓர்மதலை பூத்தபின்
புள்ளங்கைத் தேனா னுனக்கு. (14)
முட்டத்துப் பன்றி முளரித் திருப்பதத்தைக்
கிட்டத்துப் பன்றிக் கிடந்தேனே- தொட்டு
மருங்கிலேசங் கெடுத்த மாலே யெனக்கு
வருங்கிலேசங் கெடுக்க வா. (15)

16-18[தொகு]

மாதர்க்கி தங்கவி வாணர்க்குச் சால வணக்கங்குரு
நாதர்க்கு நீதியோ டாசார நண்பின் நயந்தவர்க்குக்
கோதற்ற வாசகம் பொய்க்குப் பொய் கோளுக்குக் கோளறிவி
லாதர்க்கு இரட்டி யறிவுடையோர் செய்யும் ஆண்மைகளே. (16)
குழற்கால் அரவிந்தம் கூம்பக் குமுதம் முகையவிழ
நிழற்கான் மதியமன்றோ நின்திருக்குலம் நீயவன்றன்
அழற்கால் அவிர்சடை மீதேயிருந்தும் அவ்வந்தி வண்ணன்
சுழற்கால் வணங்குதியோ வணங்காமுடிக் கைதவனே. (17)
பாட்டானதை வண்டுபாடுங் குழல் சணபக வல்லிதன்
றாட்டா மறையைத் தொழுதேன் இனியென் தலையில்விதி
தீட்டான் கருமுகில் போலே வருமந்தச் சளட்டெருமை
மாட்டான் இனிவரமாட்டான் வந்தாலும் வணங்குவனே. (18)

19-21[தொகு]

சீமானு நாமகள் கோமானும் ஏத்தித்தினம் பணிந்து
பூமாலை சாத்திய ரத்னசபாபதி பொன்னடிக்குப்
பாமாலை சாத்தி நின்றேன் அவனான் மிகப்பாடு பட்ட
ஏமாவுன்னா லினியாமா வென்பாலினி யெய்துதற்கே. (19)
தடங்கொண்ட கல்லின் மெல்லெனப் பூட்டித் தமதுரத்தில்
வடங்கொண்டு சாத்தி விடங்கொண்டு பார்த்து மணிகிளரும்
படங்கொண்ட பாம்பிற் பழகியபின் மலைப்பாவை தன்னை
இடங்கொண்ட வொற்றித் தியாகேசர் புற்றினிடங் கொண்டதே. (20)
விடங்காட்டிக் கண்டத்திற் றோலுரிகாட்டித் தன்மெய்யினைப் புற்
றிடங்காட்டி வாலையொரு புறங்காட்டி வண்டேறு மலர்த்
தடங்காட்டிய பொழிலாரூர்த் தியாகர் தமதுபொற்றாள்
படங்காட்டி ஆடிநின்றார் உலகேழும் பணியென்னவே. (21)

22-24[தொகு]

புரந்தரனை மாலைச் சதுரான னத்தனைப் போகியைம்ப்
புரந்தரனை சாதித் திமையாத நாட்டப்புலோ மசைவாழ்
புரந்தரனை மானுந் திருவொற்றி யூரநின் பொன்மணிக்கோ
புரந்தரனைக் கண்டனன் காணேன் உதிக்கும் புரந்தனையே. (22)

வெண்பா

நலம்புலி யணிந்தோன் ஆளதனுக் கெட்டாநாள்
வில்லம்புடன் கூடி விட்டாலும்-வல்லி
இடையாளே ம்ன்னுலகம் ஏழளந்தோன் மைந்தன்
குடையான தன்றோ கொடிது. (23)
வாழ்நிலைசேர் பொன்னுலகம் வண்களந்தைக் கோபுரத்தின்
ஏழ்நிலைமேல் ஏறிடினும் ஏறலாம்- பாழ்மனமே
அனபுன்னைக் காட்டவரன் அறிவதே யருமை
தென்புன்னைக் காட்டன் அடிசேர். (24)

25-27[தொகு]

கஞ்சிகுடியாளே கம்பஞ்சோ றுண்ணாளே
வெஞ்சினங்கள் என்றும் விரும்பாளே-நெஞ்சதனில்
அஞ்சுதலை யாவாருக் காறுதலை யாவாளே
கஞ்சமுகக் காமாட்சி காண். (25)
சீதாரவிந்தை புயன் தென்னவன் தன்றிண் சிலம்பிற்
போதாலும் கண்ணாலும் போர்செய்வோர்க்-கோதும்
கொடியிடை யார்தம்மாற் குணமாமோ இந்தத்
துடியிடையார் கொண்ட துயர். (26)
அப்பிலே தோய்த்திட் டடுத்தடுத்து நாமதனைத்
தப்பினா னம்மையது தப்பாதோ- இப்புவியில்
இக்கலிங்கம் போனாலென்னே கலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கந் தானிருக்கச் சொல். (27)