கலிங்கத்துப் பரணி/இந்திர சாலம்

விக்கிமூலம் இலிருந்து

தீபக்கால் கட்டில்[தொகு]

153

இவ்வண்ணத் திருதிறமுந் தொழுதிருப்ப எலும்பின்மிசைக் குடர்மென் கச்சிற்
செவ்வண்ணக் குருதிதோய் சிறுபூதத் தீபக்கால் கட்டி லிட்டே. 1

பிண மெத்தை[தொகு]

154

பிணமெத்தை யஞ்சடுக்கிப் பேயணையை முறித்திட்டுத் தூய வெள்ளை
நிணமெத்தை விரித்துயர்ந்த நிலாத்திகழும் பஞ்சசய னத்தின் மேலே. 2

கொலு வீற்றிருத்தல்[தொகு]

155

கெடாதபடி கெடுஞ்செழியர் கெடும்பொழுதின் இடும்பிண்டி பால மேந்தி
இடாகினிக ளிருமருங்கு மீச்சோப்பிப் பணிமாற விருந்த போழ்தின். 3

கோயில் நாயகியை கும்பிடுதல்[தொகு]

156

அடல்நாக எலும்பெடுத்து நரம்பிற் கட்டி அடிக்கடியும் பிடித்தமரின் மடிந்த வீரர்
குடர்சூடி நிணச்சட்டை யிட்டு நின்ற கோயில்நா யகிநெடும்பேய் கும்பிட் டாங்கே. 4

காளியிடம் நெடும்பேய் கூறல்[தொகு]

157

சுரகுருவின் தூதாகி யமன்பாற் செல்வோன் துணித்துவைத்த சிரமன்று தின்ற பேயைச்
சிரமரிய வதற்குறவா யொளித்துப் போந்த சிலபேயைத் திருவுள்ளத் தறிதி யன்றே. 5

முதுபேயின் வருகை கூறல்[தொகு]

158

அப்பேயி னொருமுதுபேய் வந்து நின்றிங் கடியேனை விண்ணப்பஞ் செய்க வென்ற
திப்பேயிங் கொருதீங்குஞ் செய்த தில்லை என்கொலோ திருவுள்ள மென்னக் கேட்டே. 6

முதுபேய் மன்னிப்பு கேட்டல்[தொகு]

159

அழைக்க வென்றலும ழைக்க வந்தணுகி அஞ்சி யஞ்சியுன தாணையிற்
பிழைக்க வந்தனம்பொ றுத்தெ மக்கருள்செய் பெண்ண ணங்கெனவ ணங்கவே. 7

காளியின் அருள்மொழி[தொகு]

160

அருத்தி யிற்பிழைநி னைத்த கூளியை யறுத்த வன்தலைய வன்பெறப்
பொருத்தி யப்பிழைபொ றுத்த னம்பிழை பொறாத தில்லையினி யென்னவே. 8

முதுபேய் வேண்டல்[தொகு]

161

உய்ந்து போயினமு வந்தெ மக்கருள ஒன்றொ டொப்பனவொ ராயிரம்
இந்த்ர சாலமுள கற்று வந்தனெ னிருந்து காணென விறைஞ்சியே. 9

கண் கட்டு வித்தைகள்[தொகு]

162

ஏற நின்னிருதி ருக்கண் வைத்தருள்செய் இக்கை யிற்சிலது திக்கைபார்
மாறி இக்கையில ழைக்க மற்றவை மதக்க ரித்தலைக ளானபார். 10

163

இக்க ரித்தலையின் வாயி னின்றுதிர நீர்கு டித்துரு மிடித்தெனக்
கொக்க ரித்தலகை சுற்ற மற்றிவை குறைத்த லைப்பிணம் மிதப்பபார். 11

164

அடக்க மன்றிது கிடக்க வெம்முடைய அம்மை வாழ்கவென வெம்மைபார்
கடக்க மென்றபயன் வென்றி வென்றிகொள் களப் பெரும்பரணி யின்றுபார். 12

165

துஞ்சி வீழ்துரக ராசி பாருடல் துணிந்து வீழ்குறை துடிப்பபார்
அஞ்சி யோடும்மத யானை பாருதிர ஆறு மோடுவன நூறுபார். 13

166

அற்ற தோளிவை யலைப்ப பாருவை யறாத நீள்குடர் மிதப்பபார்
இற்ற தாள்நரி யிழுப்ப பாரடி யிழுக்கும் மூளையில் வழுக்கல்பார். 14

167

நிணங்கள் பார்நிண மணங் கனிந்தன நிலங்கள் பார்நில மடங்கலும்
பிணங்கள் பாரிவை கிடக்க நம்முடைய பேய லாதசில பேய்கள் பார். 15

வித்தை கண்ட பேய்களின் மயக்கம்[தொகு]

168

என்ற போதிலிவை மெய்யெ னாவுட னிருந்த பேய்பதறி யொன்றன்மேல்
ஒன்று கால்முறிய மேல்வி ழுந்தடிசில் உண்ண வெண்ணிவெறும் மண்ணின்மேல். 16

169

விழுந்துகொ ழுங்குரு திப்புன லென்றுவெ றுங்கைமு கந்துமுகந்
தெழுந்து விழுந்தசை யென்று நிலத்தை யிருந்து துழாவிடுமே. 17

170

சுற்ற நிணத்துகில் பெற்றன மென்றுசு லாவுவெ றுங்கையவே
அற்ற குறைத்தலை யென்று விசும்பை யதுக்கு மெயிற்றினவே. 18

171

கயிற்றுறி யொப்பதொர் பேய்வறி தேயுடல் கௌவின தொக்கவிரைந்
தெயிற்றை யதுக்கி நிலத்திடைப் பேய்கள் நிறைத்தன மேல்விழவே. 19

172

முறம்பல போல நகங்கள் முறிந்து முகஞ்சித றாமுதுகுந்
திறம்பலி லாவிறல் யோகினி மாதர் சிரித்துவி லாவிறவே. 20

பேய்கள் வேண்டுதல்[தொகு]

173

அக்கண மாளு மணங்கினை வந்தனை செய்துக ணங்களெலாம்
இக்கண மாளுமி னித்தவிர் விச்சையெ னக்கைவி திர்த்தலுமே. 21

முதுபேயின் வேண்டுகோள்[தொகு]

174

கொற்றவர்கோன் வாளபய னறிய வாழுங்
குவலயத்தோர் கலையனைத்துங் கூற வாங்கே
கற்றுவந்தார் கற்றவவன் காணு மாபோல்
கடைபோகக் கண்டருளென் கல்வி யென்றே. 22

தாயின்மேல் ஆணை[தொகு]

175

வணங்குதலுங் கணங்களெலா மாயப் பாவி
மறித்தெம்மை மறுசூடு சுடுவை யாகில்
அணங்கரசி னாணையென அணங்கு மிப்போ
தவைதவிரெங் கிவைகற்றா யென்ன வாங்கே. 23

முதுபேய் வரலாறு[தொகு]

176

நின்முனிவுஞ் சுரகுருவின் முனிவு மஞ்சி
நிலையரிதென் றிமகிரிபுக் கிருந்தேற் கௌவை
தன்முனிவு மவன்முனிவுந் தவிர்க வென்று
சாதனமந் திரவிச்சை பலவுந் தந்தே. 24

177

உன்னுடைய பழவடியா ரடியாள் தெய்வ
உருத்திரயோ கினியென்பா ளுனக்கு நன்மை
இன்னுமுள கிடைப்பனவிங் கிருக்க வென்ன
யானிருந்தேன் சிலகால மிருந்த நாளில். 25