கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/1. உலக வரை படத்தை முதன் முதல் வரைந்தவர்!

விக்கிமூலம் இலிருந்து



கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

1. உலக வரை படத்தை முதன் முதல் வரைந்தவர்!

கிரேக்க நாட்டின் அறிஞர்களில் ஒருவரான இராடோஸ்தனீஸ் என்பவர்தான், உலகத்தின் வரைபடத்தை முதன் முதலில் வரைந்தவர்.

இவர் கி.மு. 200-ம் ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்து நாட்டிலுள்ள அலெக்சாண்டிரியா என்ற நகரில் வாழ்ந்தவர்.

உலக வடிவம் என்பது ஆழ்கடல் சூழ்ந்த ஆடக்கமான, இன்பமயமான ஒரு தீவு என்று அவர் கற்பனை செய்து, அவ்வாறே அந்தப் படத்தை வரைந்தார்.

அல் வரைந்த உலக உருவப் படத்துடன், தற்போது வரையப்பட்டுள்ள படத்தையும் பார்க்கும் போது, அவரது கற்பனை அதிகம் தவறு என்று கூறமுடியாது

அதே நேரத்தில் இந்தியாவில் வாழ்ந்த சில அறிஞர்கள் கற்பனை செய்த உலகத்தின் வடிவத்தை விட, அவர் கற்பனை செய்த வரைபட உண்மையைப் பார்த்தால், இது ஒருபடி முன் செல்வதாகவே இருந்தது.

இந்திய ஞானிகள் கற்பனையில், மிகப் பெரிய ராட்சத ஆமை ஒன்று கரையில்லாத கடலில் நீத்திக் கொண்டு இருந்தது.

அந்த ராட்சத ஆமையின் முதுகு ஓட்டின் மீது மிகப் பெரிய யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த யானையின் முதுகு மீது கட்டப்பட்ட ஓர் அரண்மனை போல பூமி அமைந்துள்ளது என்று கற்பனை செய்யப்பட்டது.

அந்தக் காலத்தில் உலக வடிவத்தைக் கற்பனை செய்து பார்ப்பதே ஒரு புதிர் போல இருந்திருக்க வேண்டும் என் பதில் சந்தேகம் இல்லை.

இன்றைய உலக வடிவப் படம். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு தான், சரியான உலக உருவம் என்று மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.

நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தான் புதிய புதிய உலக உருவக் கண்டு பிடிப்பாளர்கள் புதுப்புது நாடுகளைக் கண்டு பிடிப்பதற்காக, உலகத்தைச் சுற்றிச் சுற்றிப் பயணம் செய்துள்ளார்கள்.

அவர்களது கண்டு பிடிப்புகளுக்குப் பிறகுதான், உலகம் பந்து போல் உருண்டை வடிவமாக இருக்கிறது என்பதும், இடை வெளியற்றக் கடல்கள் இருக்கின்றன என்பதையும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்.

முக்கியமான நிலப்பரப்புகள் ஆல்லது கண்டங்கள் என்று சொல்லப்பட்ட பூமி, கடலில் இங்குமங்குமாக இருக்கிறது என்பதும், அவை தீவுகளைப்போல அமைந்துள்ளது என்றும் தெரிய வந்தது.

பூமி உருண்டையானது என்று இராடோஸ் தனீஸ் என்பவர் கற்பனை செய்தது உண்மையானதே என்றாலும், அவரதது வரைபட எல்லைகளுக்கு அப்பால் நிலப்பரப்பு இருக்கிறதா என்று அவருக்கே தெரியாமல் இருந்தது.

ஆனால், பூகோள ரீதிகாகப் பார்க்கும் போது, உலகம் தனித்து இருக்கக் கூடிய ஒரு பகுதி என்பதை முதன் முதல் அவர் தான் தெளிவாகத் தெரிவித்தார். அப்போது அது ஒரு புரட்சிகரமான முதல் கண்டு பிடிப்பாக இருந்தது.

அவரது கண்டு பிடிப்பில், புது உலகம் என்று இன்று தாம் கூறும் நிலப்பரப்பு காணப்படவில்லை. கொலம்பஸ் என்ற நிலப்பரப்பு கண்டு பிடிப்பாளரது முயற்சிக்குப்பிறகே புது கண்டங்கள் சில இருப்பது உலகுக்குத் தெரிந்தது.

ஆனால், அவரது வரை படத்தில், ஐரோப்பா, எகிப்து இந்தியா போன்ற இடங்கள் எல்லாம் காணப்பட்டன. மக்களுக்குப் பாதுகாப்பாகப் பெரும் கடல்கள் உலகைச் சூழ்ந்துள்ளன என்பது மட்டும் தெரிந்துள்ளது.

கொலம்பஸ் என்ற மேதையின் கடல் பயணத்துக்கு முன்பு உலகம் உருண்டை வடிவமானது என்கதை; சில அறிஞர்கள் உட்பட எவருமே நம்பவில்லை.

ஆனால், உலகம் உருண்டை வடிவமானது என்பதை அப்போது மதவாதிகளும் நம்பவில்லை; மாறாக, அவர் கூறியதைக் கேட்டு அவர்கள் ஆதிர்ச்சியடைந்தார்கள்.

உலகம் தட்டையானது அல்ல; அது பந்து போன்ற ஓர் உருண்டையானது. வாணவெளியில் அது தன்னைத்தானே கற்றி வருகிறது என்ற செய்தி உலகம் முழுவதும் தெரிந்திடப் பலநூறு ஆண்டுகள் ஆயின.

அதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாக மதவாதிகளும். மக்களும் அவர்கள் நம்பியிருந்த நம்பிக்கையை அவர்கள் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

மிகப் பெரிய அண்டவெளியில் ஒரு சின்னஞ் சிறு கோளத்தில் நாம் வாழ்கின்றோம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள அவர்கள் மறுத்து வந்தார்கள்.

இந்த உன்மையை உணர்ந்தவர்கள் உலகுக்கு அதை உரைத்தபோது, அப்போது ஆட்சியிலே இருந்த மதவாதிகளும் மற்ற மன்னர்கள் எனப்படுவோரும், உண்மையைக் கூறியதற்காக, அந்த வான நூல் வல்லார்களைக் கழுமரத்தில் ஏற்றிக் கொன்றுவிட்டார்கள், எரி நெருப்பிலே தள்ளிச் சித்திரவதை செய்துக் கொலை செய்தார்கள்!

இந்த மனித உயிர்க் கொலை நீண்ட காலமாகவே நீடித்தது. ஆனாலும், உண்மை விளம்பிகள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மக்களுக்குரிய வழிகாட்டிகளாகவே வாழ்ந்துச் செத்தார்கள்!