கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/19. நியூட்டன் கண்டு பிடித்தபுவியீர்ப்புப் புரட்சி

விக்கிமூலம் இலிருந்து

19. நியூட்டன் கண்டு பிடித்தபுவியீர்ப்புப் புரட்சி

கலீலியோவுக்கு பிறகு பிறந்த ஆங்கிலப் பெருமகன் ஐசக் நியூட்டன், கோப்பர் நீக்கசின் உலகக் கோளம் என்ற தத்துவத்தை மேலும் ஆராய்ந்தனர்.

விஞ்ஞான அறிஞர்கள் ஆகியோரைக் கொண்ட ராயல் சொசைட்டி என்ற சங்கத்தை இரண்டாம் சார்லஸ் மன்னனின் காலத்தில் அவரின் உதவியோடு சர் ஐசக் நியூடன் துவக்கினார்!

மிகப்பெரிய கணித வித்தகரான நியூடன் அந்தச் சங்கததைக் காத்தார், வளர்த்தார்! ஏன்? அவரது விஞ்ஞான ஆய்வுக்கு இந்தச் சங்கம் போதிய பாதுகாப்பாகவும் இருந்தது எனலாம்!

★ 'எல்லா கிரகங்களும் வானவெளியில் அதனதன் பாதையிலே ஒழுங்காகப் பறந்து செல்கின்றன. வான வெளியில் அவை நிலைகுலைந்து தாறுமாறாகப் பறந்து செல்லாமல் தடுக்கும் சக்தி எது?’’

என்ற கேள்வியை நியூட்டன் தனக்குத்தானே எழுப்பிக்கொண்டு அவர் அதற்குரிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்! வெற்றி பெற்று தனது கோட்பாட்டை நிலை நிறுத்தினார்!

★ ஒருநாள், அவர் அமர்ந்திருந்த தோட்டத்தின் மரத்திலே இருந்து ஓர் ஆப்பிள் பழம் கீழே விழுந்தது! அதைக் கண்ட நியூடன், இந்தப் பழம் மேலே போகாமல் கீழே வந்தது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியபடியே மேலும் ஆராய்ந்தார்.

★ அந்த பழம் வீழ்ந்த விந்தைக்கு கணிதக் கணக்கு மூலம் விடை கண்டு, ஆகர்ஷ்ண சக்தி என்ற கண்டு பிடிப்பைக் கண்டறிந்தார்! புவிஈர்ப்பு சக்தி என்று பிறகு அதை இந்தப் புவி புகழ்ந்தது ஆங்கில உலகம், அதை Gravitation அதாவது நிலவுலக மைய ஈர்ப்பாற்றல் என்று பெருமைபடுத்தியது.

★ கிரகங்களுக்கும் ஆகர்ஷ்ண சக்தி இருப்பதால் தான், அவை வானவெளியில் பறந்து போகாமல், சூரியனைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட ஓடுபாதையிலேயே ஓடுகின்றன என்பதை நியூடன் கண்டு பிடித்தார். இதற்கு ஆகர்ஷண சக்தி என்று பெயரிட்டார். புவியீர்ப்பு சக்தி என்றும் குறிப்பிட்டார்.

★ சந்திரனின் ஆகர்ஷண சக்தி கூடுவதாலும், குறைவதாலும்-கடல் அலைகளின் ஏற்றமும்-தாழ்வும் உருவாகின்றன என்பதையும், அதே அவரது ஆகர்ஷண சக்தி விளக்கி விடை கூறியுள்ளது.

உலக வடிவத்தின் தத்துவ உண்மைகளுக்கு உகந்தவாறு வாழ்ந்து காட்டிய முதல் மகாமேதைகள், மூவரில் சர்ஐசக் நியூட்டனும் ஒருவராகத் திகழ்ந்தார்! அவரை உலகம் முதலாவது நவீன கால மனிதன் என்று பாராட்டிப் போற்றியது.

மேதைகள் கோப்பர்நிக்கசுக்கும் சர்ஐசக் நியூட்டனுக்கும் இடைக் காலத்திலே வாழ்ந்த கலீலியோ கலீலி என்ற மாமனிதன் தூரதரிசினி என்ற பார்வைக் குழாயைக் அவருக்குப் பின் வாழ்ந்து மறைந்த எண்ணற்ற விஞ்ஞானிகள் கலீலியோ கருவிகனைப் பயன்படுத்திப் பற்றபல விஞ்ஞானப் புதுமைகளைச் செய்து காட்டியுள்ளார்கள்.

அந்த தூரதரிசினி மட்டும் இல்லாவிட்டால் கீழ்க்கண்ட புதுமைக் கருவிகள் தோன்றியிரா என்பது விஞ்ஞானத்துறை நூற்றுக்கு நூறு தலைவணங்கி ஏற்கவேண்டிய அற்புதமாகும். அதன் விவரம் இதோ படியுங்கள்.