குறட்செல்வம்/அறிவிற்குப் பயன்

விக்கிமூலம் இலிருந்து

38. அறிவிற்குப் பயன்

மனித வாழ்வுக்கு அறிவு இன்றியமையாத ஒன்று, வாழ்க்கையை நல்வழிப்படுத்துவது அறிவு. குழப்பத்தி னின்றும் தெளிவு தருவது அறிவு. வாழ்வுக்கு ஆக்கம் தருவது அறிவு. வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டுவது அறிவு. - -

அதனாலன்றோ திருவள்ளுவர் 'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று கூறினார். திருவள்ளுவர் அறிவு பெறும் முயற்சிகளை, பலபடக் கூறுகின்றார். கற்ஈ வேண்டுமென்று வற்புறுத்துகின்றார். கற்க வாய்ப்பில்லாதவர்களுக்குக் கற்றிலராயினும் கேட்க வென்று அறிவுறுத்துகின்றார்.

இத்தகு அறிவு முயற்சி மானிட சாதியில் வளர்த்து வந்திருக்கின்றது. இன்னமும் வளரும். இங்ங்னமெல்லாம் மானிடர் அறிவில் முயன்று அறிவு பெறுவது எதற்காக? ஏன்? என்ற கேள்விகள் கேட்கப்படாமலில்லை. அறிவு ஆராய்ச்சிக்காக மட்டும்தான்ா? -

அதிலும். விவாதத்திற்காகத்தான்ா? அல்லது. புலமைக் காச்சலில் சிக்கித்தவிப்பதற்காகவா? அல்லது குறைந்த நேரத்தில் எவ்வளவு அதிகப்படியான மக்களைக் கொன்று குவிக்கலாம் என்ற ஆராய்ச்சிக்காகவா? என் றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. -

ஆம். இன்றைய உலகப்போக்கைக் கவனிக்குமிடத்து வேறு என்ன கசால்லமுடியும்? ஆனால் பண்பம்ட அறிவு பகைமைக்கு அப்பாற் பட்டது. விவாதத்திற்குட்பட்டதல்ல. விளங்கவைக்கும் தகைமை உடையது. தண்ணளிமிக்கது. அறிவுடைமையை பற்றிப் பேசிய திருவள்ளுவர் அறிவினால் பெறும் பயன் பற்றியும் கூறுகின்றார். பிறருக்குப் பயன்பட வாழ்தலே சிறப்புடையதொன்று.

பொருள் வேறு பயன் வேறு. அறிவுடைமை வேறு. அதன் பயன் வேறு. இந்தத் தத்துவம் தெளிவாக விளங்கிக்கொள்ளப் பெறுதல் வேண்டும்.

இந்திய அரசின் உறுதி முத்திரையிட்ட நாணயத் திற்குத் தனியே ஒரு மதிப்பில்லை. அந்த நாணயத்தைக் கொடுத்து அதற்கு மாறாகப் பெறக்கூடிய பொருளை வைத்துத்தான்் (பண்டங்களை) நாணயத்துக்கு மதிப்பு.

அதுபோலவே அறிவுக்கும் அறிவுடைமையின் பயனாகத் திருவள்ளுவர் காட்டுவது கருணையேயாகும்.

பழனிமலை மீது வீற்றிருந்தருளும் இறைவனை வழிபட ஒரு பக்தர் போகின்றார். அவர் செல்வமுடையவர் அவர் மலைமீது ஏறிச் செல்லும்போது படிகளின் ஓரத்தில் இருக்கும் நோய்வாய்ப்பட்டு அவதி உறுவோருக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டு போகின்றார்.

திருவள்ளுவர் இந்தக் காட்சியைப் பார்க்கின்றார். தாம் எல்லாம் நினைக்கின்றோம், இந்தச் செல்வ பெருமகனை வள்ளுவர் பாராட்டுவார் என்று. ஆனால் வள்ளுவர் பாராட்டவில்லை.

அச் കൊ பெருமான் நோயாளிகளுக்கு அள்ளிக் கொடுத்ததை வள்ளுவர் சடங்காகக் கருதுகிறார். செல்வத்தின் எக்களிப்பு என்று கருதுகின்றார். அல்லது பழக்கத்தின் வழிப்பட்ட செயல் மட்டுமே என்று கருது கின்றார். அள்ளிக் கொடுத்த செயலுக்கும் நெஞ்சுக்கும் தொடர்பில்லை என்று வள்ளுவர் கருதுகின்றார்.

அங்ங்ணம் அள்ளிக் கொடுப்பதைவிட அந்த ேநாயாளி களின் நோயின் வழிப்பட்ட துன்ப அனுபவத்தை, தமதாக எண்ணி அனுபவித்து அவதிப்படுவோனை அன்பால் முழுக்காட்டுவதையே அறிவுடைமைக்கு ஏற்ற பயன்படு செயலென்று வள்ளுவர் கருதுகின்றார். இதனை,

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தங்கோய்போல் போற்றாக் கடை.

என்று திருக்குறள் விளக்குகிறது.