சத்திமுத்தப் புலவர் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
சத்தி முத்தப் புலவர் தனிப்பாடல்கள்
பாடல்கள் இரண்டு
பக்கம் 79
குறிப்புரை - செங்கைப் பொதுவன்
நாராய் நாராய் செங்கானாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தென்ன
பவளக் கூர்வாய்ச் செங்கானாராய்
நீயுநின் மனைவியுந் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரல் பல்லி
பாடுபார்த் திருக்கும் எம்மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே. (1)
வெறும்புற் கையுமரிதாங் கிள்ளைசோறும் என்வீட்டில் வரும்
எறும்புக்கு மாற்பதமில்லை முன்னாளென் னிருங்கலியாம்
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச் சென்று கூடியபின்
தெறும்புற் கொல்யானை கவளம் கொள்ளாமற் றெவுட்டியதே. (2)