சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

சமுதாய மறுமலர்ச்சி
இலக்கியங்கள்




தவத்திரு குன்றக்குடி அடிகளார்




கலைவாணி புத்தகாலயம்
நல்ல நூல் வெளியீட்டாளர்கள்
16/2, ராஜாபாதர் தெரு, பாண்டிபஜார்,
தியாகராயநகர். சென்னை-600 017.

கலைவாணி வெளியீடு K 483

முதற்பதிப்பு : டிசம்பர், 1993



விலை: ரூ. 25.00




PRICE : Rs. ரூ 25.00

SAMUTHAYA MARUMALARCH ILAKKHIANGAL– A collection of essays in literature on improvement of social reforms by Thavathiru KUNDRAKUDI ADIGALAR

First Edition : December, 1993. Published by : KAVINGER SEENI. THRUNAAVUKKARASU, KALAIVAANI PUTHAKALAYAM, 16/2, Rajabathar street, Pondy Bazaar, T.Nagar, Madras - 600 017.
 
Printed at: ALEX Printers, Madras - 600 094.

முன்னுரை

மனித சமுதாயம் வளர்ச்சிக்குரியது; மாற்றத்திற்குரியது. வளர்ச்சி. மாற்றத்திற்கு அடிப்படை. மாற்றம். வளர்ச்சியின் அளவுகோல். ஒரே வழி வளர்ச்சி இல்லாத மாற்றங்களும் நிகழ்வதுண்டு. இவை, புற நிலை மாற்றங்களேயாம் ; அகநிலை மாற்றங்கள் அல்ல.

மானுடத்தின் வாழ்நிலையில், அகநிலையில் ஏற்படும் மாற்றங்களே மானுடத்தின் குறிக்கோள்களை இனம் காட்டும்; நாகரிகத்தை நல்கும்; பண்பாட்டைத் தோற்றுவிக்கும்.

தமிழினம் காலந்தோறும் வளர்ந்து வந்துள்ள இனம். தமிழிலக்கியங்கள் காலந்தோறும் தமிழினத்திற்குச் சிறந்த குறிக்கோள்களை வழங்கி வந்துள்ளன. தமிழினம் ஓரினமாக வாழ்ந்து வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

தமிழினத்தில் இனமானம், குடிசெயற்பண்பு மிகவும் குறைவு என்பதைத் திருக்குறள் வாயிலாக அறிய முடிகிறது. ஆதலால், தமிழினம் சமுதாயக் கூட்டு வாழ்வில் சாதனைகள் செய்ய இயலாது போனாலும் தனிமனித வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் தமிழினம் சிறந்து விளங்கியது; விளங்கிக் கொண்டிருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை. 

ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இனமான உணர்வு தலையெடுத்து வளர்ந்தது; சங்க காலத்தில்:

“ஒரு வீரர் தோற்பினும் தோற்பதுங் குடியே!” என்று கோவூர் கிழார் இன உணர்வை அறிமுகப்படுத்தினார். அடுத்து, காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் சோழனும் பாண்டியனும் ஒருங்கிருந்த காட்சியைக் கண்டு பெருமிதமுற்று’

“இன்றே போல்க, நும் புணர்ச்சி!”

என்று வாழ்த்தினார். தமிழ்ச் சமுதாயக் கட்டமைப்புக்குத் தடையாக இருந்த சாதி, குல, வேற்றுமைகளை அப்பரடிகள் சாடினார். ஒருகுலம் காண முயன்றார். இங்ஙனம் முறையாக வளர்ந்து வந்த சமுதாய உணர்வு தலைவர் பெரியார் காலத்தில் எழுச்சி பெற்றது.

இந்த வரிசையில் நமது தலைமுறையில் வாழும் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கவிஞர்களின் படைப்புகளைப் பற்றி எழுதப்பெற்ற நூல் இது.

நம்மிடம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய கவிஞர் குலோத்துங்கன், தொ.மு.சி.ரகுநாதன் புரட்சிக்கவி பாரதி, முற்போக்குச் சிந்தனையாளர் ஜெயகாந்தன் ஆகியோரின் படைப்புக்களைப் படித்த அனுபவத்தின் விளைவு இந்த நூல்.

இவர்களுடைய முற்போக்குச் சிந்தனைகளைத் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வத் துடிப்புடன் எழுந்தது இந்நூல். 

ஆயிரம்தான், முற்போக்குச் சிந்தனை இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் தமிழினத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் இனமான உணர்வு தேவை என்பதையும் உணர்ந்து பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் பற்றியும் எழுதப் பெற்றுள்ளது.

பேரறிஞர் அண்ணா காலத்தில் தமிழர்களுக்கிடையில் இன உணர்வு வளர்ந்தது; உறுதிப்பட்டது. பேரறிஞர் அண்ணாவைப் போல் தமிழின உணர்வுக்குத் தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னும் யாரும் இல்லை. இனிமேலும் தோன்றுவார்களா என்பது ஐயப்பாடே! இங்ஙனம் தமிழ்ச் சமுதாய அமைப்புக்கு உரமூட்டும் வகையில் எழுதப்பெற்றுள்ளது.

வழக்கம்போல் நமது நூல்களை வெளியிடுவதில் குடும்பப் பாங்குணர்வுடன் நோன்பெனக் கருதிச் செய்யும் இனிய அன்பர் கலைவாணி புத்தகாலய உரிமையாளர் கவிஞர், கெழுதகை நட்புக்குரிய திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றி பாராட்டு வாழ்த்துக்கள்!

பலரும் புத்தகத்தை வாங்கிப் படிப்பார்கள், பயனடைவார்கள். தமிழினம் ஓரினமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அடிகளார்.

குன்றக்குடி
27-12-93

அணிந்துரை

கலைமாமணி, தமிழ்மறைக் காவலர்,
திருக்குறளார், வீ. முனிசாமி,

தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் வானொலியில் ஆற்றிய இலக்கியப் பேருரைகளே “சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்” என்னும் அழகான நூலாக கலைவாணி வெளியிட்டுள்ளது.

சமுதாய மறுமலர்ச்சி என்றால் என்ன என்பதை தவத்திரு. அடிகளார் அவர்கள். சங்கப் பாடல்களையும், திருக்குறளையும் எடுத்துக்காட்டி விளக்கும் திறன் மிகவும் அருமையானது.

திருக்குறள் முழுக்க முழுக்க மறுமலர்ச்சி இயக்க படைப்புக் கருவியாகும் (பக் 12) அடிகளார் அவர்களின் எண்ணவோட்டம் பாராட்டத்தக்கது. சமுதாய மறுமலர்ச்சிக்குப் பாடுபட்ட, கவிஞர்கள், புதின ஆசிரியர்கள் சிலரை நினைவு கூர்ந்து விளக்கும் திறன், பரந்து விரிந்த நூலறிவாற்றலை தெற்றென காட்டுகிறது.

ஆன்மிகம், சமுதாயம், இலக்கியம், அரசியல் இன்ன பிற துறைகளிளெல்லாம் புரட்சிகரமான அறிவியல் கருத்துக்கள் பயன் தரும் வகையில் செயலாற்றி அருளும் தமிழ் மாமுனிவர் தவந்திரு. குன்றகுடி அடிகளார் அவர்களுக்கு மக்கட் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.

பாரத ஒருமைப்பாட்டிற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் புகழ்சேர்க்கும் படைப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் நமது நண்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்கள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இலக்கணமாகத் திகழும் தவத்திரு அடிகளார் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

திருக்குறளார்.

சென்னை.
28-32-93


பதிப்புரை

உலக வரலாற்றின் மாற்றங்களுக்கும், மேன்மைகளுக்கும் வழிகாட்டுவன சமுதாய மறுலர்ச்சி இலக்கியங்களே. போர்வாளினும் வலிமை மிக்கது பேனா மன்னர்கள் இயற்றிய சிறந்த இலக்கியங்கள்.

உலக ஒருமைப்பாட்டிற்கும். பண்பாட்டிற்கும் புகழ் சேர்ப்பன, தீர்க்கதரிசனமாக மகான்களும் அறிஞர்களும் அருளிய இலக்கியங்களே. உலக மக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழவும், வழிகாட்டுவன.

அறிவியல் முன்னேற்றத்திற்கும். சமுதாய மறுமலர்ச்சிக்கும் இலக்கியங்கள் வழிநடத்தும் தன்மைகளை, தவத்திரு அடிகளார் அவர்கள் விளக்கி செயலாற்றும் பாங்கினை எண்ணிஎண்ணி மகிழ்கிறேன்.

உலகம் போற்றும் குன்றக்குடி பசுமைப் புரட்சி திட்டத்தை உருவ்ரிக்கி வெற்றிகர்மாக செயலாற்றி அருள்வதும் தமிழகத்தின் தவப்பியனே யாகும்.

அறிவியல் துறையில் பல முன்னேற்றங்களை கொண்டுள்ள நாம், ஆன்ம நேய ஒருமைப்பாட்டிலும், பண்பாட்டிலும், போதிய கவனம் செலுத்தின், உலகம் முழுவதும் சமுதாய மறுமலர்ச்சியைக் கண்டு மகிழலாம்.

தவத்திரு, அடிகளார். அவர்களின் சமுதாயப்பணி நாளும் சிறந்த பயனளித்து வருவது கண்கூடு, தவத்திரு. அடிகளார் அவர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு, திருக்குறள் நெறிவழி சமுதாயும் தழைக்க இலக்கியங்கள் காட்டும் நெறிவழி ஒழுகி மகிழ்வதே.

அணியென அணிந்துரை அளித்தருளும் கலைமாமணி, திருக்குறளார் அவர்களுக்கும் உழுவலன்புக் கவிஞர். மரு. பரமகுரு அவர்களுக்கும் அரும் பணியாற்றும் அன்பர்களுக்கும் இதய நன்றி.

அனைவருக்கும் இந்நூல் பயன் கூட்டிட கலைவாணியின் திருவருளை வேண்டுகிறேன்.

சீனி. திருநாவுக்கரசு
பதிப்பாசிரியர்.

சென்னை 17
28-12-1993