சிந்தனை துளிகள்/1501-1600

விக்கிமூலம் இலிருந்து

1501. “ஒருவர் செய்யும் தவறை அவருடைய சமுதாயத்தின் மேல் ஏற்றிக் கூறுதல் ஆகாது. நல்லதல்ல.”

1502. “இந்தியர் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டாலே-இந்தியா வளரும்.”

1503. “தகுதியில்லாதன்வற்றிற்கு ஆசைப்பட்டு அல்லல்படுதல் அறியாமை.”

1504. “மற்றவர் துன்பம் அறியாதார் மோசமான மனிதர்கள்.”

1505. “இந்திரா படுகொலையில் திட்டமிட்டவன் வெற்றி பெற்றதற்குக் காரணம் திட்டமிட்டவனின் புத்திசாலித்தனமல்ல. மற்றவர்களின் கடமையில் காட்டிய அலட்சியமே காரணமாகும்.”

1506. “நமது அரசாங்கத்திற்கு சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பதும் ஒருகுறை.”

1507. “காரண காரியங்களை ஆராயாமல் பேசுவது பைத்தியக்காரத்தன்ம்.”

1508. “ஒன்றைச் செய்து முடிப்பதில் உள்ள தொல்லைகளை-மற்றவர்கள் உணர்வதில்லை.”

1509. “அவசர உணர்ச்சி அறிவைக் கொன்று விடுகிறது.”

1510. “புகை வண்டிப் பெட்டியின் மீது ஏறி இருந்துகொண்ட குருவி, புகைவண்டி போகும்போது தான் யாத்திரை செய்ததாகக் கூற இயலாது. குருவிக்கு ஏது அனுபவம்?

1511. “உயிரின் உணர்வுகளை, வாழ்க்கையின் இலக்குகளை நோக்கி எடுத்துச் செல்லும் கருவியே இலக்கியம்.”

1512. “உணவுக்கு உப்புப் போல இலக்கிய அனுபவத்திற்கு ரசனை.”

1513. “நுண்மைத் தன்மையுடைய உணர்வு நிலையில் அமைந்த அனுபவங்கள் இப்போது இல்லை.”

1514. “பகுப்பொருளிலிருந்து நுண்பொருளுக்கும் செய்திகளிலிருந்து சிந்தனைக்கும் செல்லும் பயிற்சி இப்போது இல்லை.”

1515. “நமது சமய நிறுவனங்களில் பணி செய்பவர்கள், சேக்கிழார் படைத்துக் காட்டும் குடும்பங்களைப்போல வாழ்ந்தாலே போதும். மிகுதியும் பயன் விளையும்.”

1516. “இருப்பதில் அமைதிபெறும்-சமாளிக்கும் இயல்பு இயலாமையின் விளைவேயாம். சமாளித்தலை விட-சாதித்தலே சிறந்தது.”

1517. “சகிப்புத் தன்மை என்பது ஒருவகைக் கோழைத்தனமேயாம்.”

1518. “நுகர்தல் வாழ்க்கையின் கடப்பாடுகளில் ஒன்று; உரிய விலை கொடுக்காமல் நுகர்தல் ஒழுக்கக் கேடு.”

1519. “மற்ற சமயங்களுக்கு வாய்த்திருப்பது போல, அயல் மூலதனங்கள் நமக்கு இல்லை. நமது மூலதனமும்கூட சுரண்டப்படுகிறதே தவிர-வளர்க்கப் பெறவில்லை.”

1520. “உழைக்காமல்- சமூக உழைப்பு இல்லாமல் வாழ்பவர்களும்கூட ஒருவகையில் சுரண்டல் செய்பவர்களேயாவர்.”

1521. “பூரணத்துவமான உழைப்பு தோன்றாத வரையில் வையகத்தை வறுமையிலிருந்து மீட்க முடியாது.”

1522. “கவனமாக - தொடர்ச்சியாகச் செய்யப் பெறும் பணிகளே பயன்தரும்.”

1523. “சுதந்தரம்-பலர் வாழ்க்கையில் ஒளியைப் பரப்பவில்லை.”

1524. “மனிதகுலம் வாழத் தெரிந்து கொண்டால் பருவ காலமும் ஏவல் செய்யும்.”

1525. “குழந்தையின் அருமையையும், பொறுப்பையும் உணர்பவர்கள்-குடும்பத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திக் கொள்வர்.”

1526. “இன்பம் என்பது கலவியொன்றில்தான் என்று வாழும் வாழ்க்கை மிருக வாழ்க்கை.”

1527. “ஒரு பெருங்கொலைக்குப் பிறகு கூட ஒரு இளைஞனைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார்கள்-இங்கு மருத்துவமனையில்தான் தலைவர் உள்ளார்-அதற்குள் சிண்டுபிடிச்சண்டை!”

1528. “ஒருமைப்பாட்டில் வடபுலத்தார் வளர்ந்திருப்பதைப் போல் தமிழர்கள் வளரவில்லை.”

1529. “இந்தியாவில் மதத்தின் பெயரால் நிகழும் நிகழ்ச்சிகள்-மத நம்பிக்கையைப் பொய்த்துப் போகச் செய்கின்றன.”

1530. “உரிமைகள் பெறுவதற்கு பிரிவினை வேண்டும் என்பது பொருளற்றது.”

1531. “வாழ ஆசைப்படுகின்றனர்; ஆனால் முயற்சிதான் இல்லை.”

1532. “நன்றாக வாழ்தலுக்குத் தாய் அறிவறிந்த ஆள்வினைவே.”

1533. “ஒருவர் மீது பற்று என்பது அவர்களைப் பொறுத்தது இல்லை. அவர்களுடைய கொள்கைகளைப் பொறுத்ததாக அமைதல் பயன்தரும்.”

1534. “இன்றைய அரசியலில் கொல் குறுப்புக் காரர்களே மேவி வருகின்றனர்.”

1535. “செயலின்மை நோக்கி வெட்கப்பட்டு வருந்தாதார்-ஒருபொழுதும் செயல் திறனுக்கு உரியவர் ஆகார்.”

1536. “நேற்றைய தவறுகளே அழிந்துவிடாது. இன்று அந்தத் தவறுகளை நியாயப்படுத்தும் முயற்சியிலேயே அழிவு தொடங்குகிறது.”

1537. “திறம்படச் செய்யாதார்-எதற்கு? வையகத்திற்குப் பொறையாக!”

1538. “பரிந்துரைச் செய்யும் உரிமை-காற்று போலப் பயன்படுவதற்கல்ல; மருந்தெனப் பயன் படுதலுக்கேயாம்,”

1539. “செல்வத்தை செலவழித்தலைவிட - செல்வாக்கை செலவழிப்பதில் கவனமும்-சிக்கனமும் தேவை.”

1540. “மனம்போன போக்கில் நிர்வாக இயந்திரத்தை இயக்கினால் விபத்துக்கள் தவிர்க்க இயலாதன வாகிவிடும்.”

1541. “சிலர் சில காரியத்தை காரியமாகக் கருதிச் செய்வதில்லை. விளம்பரத்துக்காகவே செய்கின்றனர்.”

1542. “ஆற்றொழுக்குப் போல-பழக்கங்களை நடைமுறைப் படுத்தினால் மக்கள் தெளிவடைவர்.”

1543. “லாபநோக்கும் மனித உலகத்தை மிருக மாக்கி விட்டது.”

1544. “செய்ய வேண்டிய வேலைகள் கண்ணுக்கு எதிரே இல்லை தேடிப் பிடித்துே செய்யவேண்டும்.”

1545. “உடல்-உயிரைப் புத்திரமாக வைத்திருப்பதுபோல கடமைகளைப் பத்திரமாக-கவனமாக செய்பவர்கள் நல்ல பணியாளர்கள்.”

1546. “பழக்கமாகிவிட வேண்டியவை கூட புதியனவாக இருப்பதின் காரணம் ஈடுபாடின்மையே”

1547. “இன்றைய மனிதனை தோலுரித்துப் பார்த்தால் ஒரு அசல் காட்டு மிருகமாகவே காட்சி அளிப்பான்.”

1548. “தலைமை” என்பது இன்றைய வரலாற்றில் தகுதியற்றது என்ற பொருள் பயக்கும் சொல்லாக உருமாறியுள்ள நிலை ஒர்ந்து உணரத்தக்கது”

1549. “வழிகாட்டுதலும்-வழிநடத்துதலும் தான் தலைமைக்குரியப் பண்புகள்.”

1550. “சிறந்த ஆளுமை வாயிலாகத் தலைமைக்கு வருதல் இயலும்”.

1551. “நம்முடைய ஆற்றல்-நம்மைச் சுற்றியுள்ள பொருள்களின் ஆற்றல்-ஆகிய அனைத்தும் பயன்படுமாறு பெற்ற நிலையே ஆளுமை நிலை”

1552. “வருகைப் பதிவேட்டின் மூலமே வருவாய் வரும் வாழ்க்கையைப் பலர் விரும்புகின்றனர்.”

1553. “உடலின் நலத்திற்கே உடை; ஆனால் இன்றைய நிலை... அதுவல்ல.”

1554. “ஒவ்வொரு கிராமத்திலும் செல்வம் குவிந்து கிடக்கிறது. உழைப்பால் வெளிக் கொணர்வாரைத் தான் காணோம்.”

1555. “எங்கும் வேலை நிறைய இருக்கிறது. ஆனால் செய்வோரைக் காணோம்; ஆனாலும் வேலை தேடி அலைபவர்களும் இருக்கிறார்கள்.”

1556. “இயற்கை-ஆண்-பெண் உணர்வுகளில் வேறுபாட்டைப் படைக்காதபோது; ஏன் ஆணுக்கு ஒரு நீதி-பெண்ணுக்கு ஒரு நீதி?”

1557. “ஆண் மறுமணம் செய்யலாம்-பெண் மறுமணம் செய்யக்கூடாது என்பது-இயற்கை நியதிகளுக்கு முரணானது.”

1558. “நிதியை நிர்வகிப்பதில் கண்டிப்பும், கண்ணோட்டமும் வேண்டற்பாலன.”

1559. “அனைத்தும் இருந்தும், ஒன்றும் இல்லாத நிலை-நிர்வாகத் தாழ்ச்சியையே பறைசாற்றுகிறது.”

1560. “வீடு எப்படி இருக்கிறது என்பதில் அல்ல. வாழ்க்கை-வீட்டில் உள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்ததேயாம்.”

1561. “நம் தலைமுறையில்-புண்ணிய பாரத பூமியில் மதத்தின் பெயரால் இரண்டு படுகொலைகள் நிகழ்ந்துவிட்டன. இது வெட்கப்படவேண்டிய செய்தி.”

1562. “அருளும் தெய்வமே, அடிக்கவும் செய்கிறது. இது தவிர்க்க இயலாதது.”

1563. “திட்டமிட்டுச் செய்தால்; செல்வம் சேர்ந்துவிடும்.”

1564. “பணிகளை நாமே செய்வது நல்லது”

1565. “கால்பந்து விளையாட்டில் பலர்-மிகுதியான உழைப்பில்லாமல்-உருண்டுவரும் பந்தைத் தொட்டு உருட்டி மற்றவர்களுக்குத் தந்துவிடுவர். தாம் முயன்று கோல் போட மாட்டார். அதுபோல பணிகளைக் கடத்தி விடுபவர்கள் பலர்.”

1566. “விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்கள் பந்தைக் கேட்டு வாங்குவார்கள்.”

1567. “தெரிந்த ஒரு செய்தியையும் பணியையும் திட்டமிட்டுப் பயனுறச் செய்யாமை இழுக்கு.”

1568. “பலநாள் பழகினாலே, பழக்கம் உறுதி பெறும்.”

1569. “கால்கள் இருந்தும் காலால் நடக்கும் துரத்துக்குக்கூட ஊர்தி தேடி அலைபவன் சோம்பேறி.”

1570. “வாழ்க்கையில் கை வகிக்கின்ற பங்கு அளப்பில.”

1571. “பலர் விவாதிக்கவே விரும்புகின்றனர். கலந்து பேச யாரும் முன்வருவதில்லை”.

1572. “சுமத்தப் பெறும் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லாமல் திரும்ப குற்ற்ச்சாட்டு வைப்பது குற்றம் செய்யவில்லை என்ற கருத்தை உருவாக்காது.”

1573. “வளர்ச்சியடையாதவர்கள் தான் வைத்த அதிகாரத்தில் மூழ்கிவிடுவர்.”

1574. “கழிவுப் பொருள்கள் பலநூறு பொருள் மதிப்புடையன.”

1575. “வேலை செய்யத் தெரிந்தவர்கள் வேலைக்காரர்களாகி விடுவதில்லை. வேலையைப் பயனுறச் செய்வதின் மூலமேயாம்.”

1576. “ஒன்றைப் பொறுப்புணர்வுடன் ஈடுபாட்டுணர்வுடனும் வாங்கிக் கொள்பவர் பலரின் அன்பைப் பெறுவர்.”

1577. “தீயவர்கள் சுறுசுறுப்பாகவும் புத்திசாலிகளாகவும் இருப்பர். இவர்களை முயன்று மாற்றிவிட்டால் பயன்படுவர்.”

1578. “காரணம், காரியங்களைக் கடந்ததே உண்மையான அன்பு.”

1579. “அன்பு காட்டுதல் என்பது இயல்பான உயிர்க்கு குணமாகிவிடவேண்டும்.”

1580. “உழைத்தல் என்பதும் இயல்பான உயிர்க் குணமானாலே வாழ இயலும்”.

1581. “எந்த ஒரு நன்மையும் கூட திணித்தால் மனிதர்கள் ஏற்கமாட்டார்கள்.”

1582. “ஒருவர் தன்னுடைய செயலின்மை கருதி நொந்துகொள்ளாமல் சுட்டிக் காட்டுபவர்மீது வேதனையைக் காட்டுதல் திருந்தமாட்டேன். என்பதற்கு அடையாளம்.”

1583. “மிரட்டுபவர்களுக்குப் பணிவது சாவதற்குச் சமம்.”

1584. “மனிதகுலம் வாழத் தெரிந்து கொண்டால் பருவ காலமும் ஏவல் செய்யும்.”

1585. “எண்ணி திட்டமிட்டு காரியங்கள் செய்யாது போனால் காரியக் கேடுகள் நிகழ்வதைத் தவிர்க்க இயலாது.”

1586. “குறைகள் ஏராளம் மாற்றும் முயற்சியைத் தான், காணோம்.”

1587. “இந்திய நிர்வாக அமைப்பு, வழக்கமாகச் செல்வது. அதற்குமேல் உயிர்ப்பு இல்லை.”

1588. “மனிதன்-வாழ்க்கையின் குறிக்கோளை அறிந்து வாழத் தொடங்கும் நாளே அவன் உண்மையில் பிறந்த நாள்.”

1589. “ஆன்மீகம் என்பது ஆன்மாவின்-உயிரின் முதிர்ச்சிக்குரிய முயற்சிகளை மேற்கொள்ளும் வாழ்க்கையைக் குறிக்கும்.”

1590. “பழுத்தபழம் எல்லார்க்கும் சுவையாக இருப்பதுபோல ஆன்மீகத்தில் முதிர்ச்சி அடைந்தவர்கள் யார் மாட்டும் அன்பு செய்வர்.”

1591. “மதம் கடவுளுக்காக ஏற்பட்டதல்ல-மனிதனுக்காகவே.”

1592. “தீயவர்களின் கருவியாக மதம் பயன்படுத்தப் பெறும்பொழுது - மதம் பழிப்புக்கு ஆளாகிறது.”

1593. “சாதாரண மக்களுக்குத் தொண்டு செய்வது ஒர் ஆன்ம திருப்தியே-ஆனால் வளர்ச்சியும் சிறப்பும் கிடைக்காது.”

த-11

1594. “இந்திய சமூக வாழ்க்கையில்-வைதிகச் சடங்குகளுக்கு உள்ள செல்வாக்கு குறையவில்லை.”

1595. “கிறிஸ்தவர்களைப் போல அணி அணி யாக ஆர்வத்துடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்வோர் கிடைத்தாலே வளரலாம்.”

1596. “நன்றி-விசுவாசம் சொல்லால் காட்டப் பெறுவது அல்ல; செயற்பாடுகளின் மூலம் காட்டப் பெறுவது.”

1597. “ஒழுங்கமைவுடைய வாழ்க்கைக்குப் போராடாதவர்கள்-வெற்றி பொருந்திய வாழ்க்கையைப் பெற முடியாது.”

1598. “சாமார்த்தியசாலியான ஒருவன் தனக்கு சரிப்பட்டு வராததை எல்லாம் உலகத்திற்கே சரிப்பட்டு வராது என்று கூறிவிடுவான்.”

1599. “இன்று, கூட்டுறவு என்பது சாதாரண பணப்பரிமாற்றம் மட்டுமே செய்துவருகிறது. இது தவறு. இதனுடன் ஆளுமை, பண்பாடு ஆகிய பரிமாற்றங்களுக்கும்-வளர்ச்சிக்கும் கூட்டுறவு பயன்படும். பயன்படும்படி இயக்கவேண்டும்.”

1600. “பலர், கூடித் தொழில் செய்வது என்றால் ஒரே வேலையை பலர்செய்வது என்பதல்ல. அவரவர்க்குள்ள பொறுப்புகளை ஒத்திசைந்து செய்வது என்பது கருத்து.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/1501-1600&oldid=1055656" இலிருந்து மீள்விக்கப்பட்டது