சிலப்பதிகாரம்/வஞ்சிக் காண்டம்/கட்டுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சிலப்பதிகாரம்[தொகு]

வஞ்சிக் காண்டம்[தொகு]

கட்டுரை[தொகு]

முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்

குடதிசை யாளுங் கொற்றங் குன்றா

ஆர மார்பிற் சேரர்குலத் துதித்தோர்

அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்

பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்

விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்

ஒடியா இன்பத் தவருறை நாட்டுக்

குடியின் செல்வமுங் கூழின் பெரு்ககமும்

வரியுங் குரவையும் விரவிய கொள்கையின்

புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய (10)


மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு

பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்

கங்கைப் பேரியாற் றுக்கரை போகிய

செங்குட் டுவனோ டொருபரிசு நோக்கிக்

கிடந்த வஞ்சிக் காண்டமு்ற றிற்று.


கட்டுரை முற்றும்


வஞ்சிக் காண்டம் முற்றும்[தொகு]

பார்க்க

சிலப்பதிகாரம்