சீனத்தின் குரல்/மத மோகம்

விக்கிமூலம் இலிருந்து

மத மோகம்

தன் பெற்றோர்கள் பின்பற்றிவந்த கன்பூஷியஸ் {மதத்தைவிட்டு, கிருஸ்து மதத்தைத் தழுவ வேண்டுமென்று நினைத்தார். கிருஸ்து மகத்தைத் தழுவியவர்களால்தான் இப்படி வீரமாக இருக்க முடியுமென்று நினைத்தாரோ என்னவோ, அந்த கிருஸ்துமத மோகம் அவரிடம் அதிகமாகக் காணப்படவே தன் அண்ணன் உடனே இந்தச் செய்தியை பெற்றோர்களுக்கு அறிவித்துவிட்டான். தந்தைக்கு கிருஸ்து மதத்தின்மேல் கோபமில்லாவிட்டால், அதைப் பின்பற்றிய ஆங்கிலேயர்கள் செய்யும். அக்ரமங்களைப் பார்த்துப் பார்த்து கிருஸ்து மதம் இதைத்தான் இவர்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறதோ என்று ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இப்படி ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கும் தந்தைக்கு தன் மகன் கிருஸ்தவ னாகப் போகின்றான் என்ற செய்தி தலையில் இடி விழுந்ததைப் போலாய்விட்டது. மதபோதை என்பது அன்று சீனத்தின் சீரழிவுக்குக் காரணமாயிருக்கும் அபினிப். போதையைவிட மகா மோசமானது என்றுணர்ந்த தந்தை, உடனே சன்யாட் சன்னை தன்னிடம் அனுப்பிவிடும்படி கட்டளையிட்டு விட்டார். அதன் படி இந்த வருங்கால கிருஸ்தவ எண்ணத்தின் பிரதிநிதி தன் தந்தையின் கட்டளைப்படி தாயகம், திரும்பிவிட்டார்.

பிறகு காண்டன் (Kantan) நகரத்திலிருந்த. டாக்டர். கெர் என்பவரிடம் வேலை செய்து கொண்டிருந்தார். அவரிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் தந்தையின் ஏற்பாட்டின்படி லு-ஷு என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு ஹாங்காங் (Hongkong) தீவில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட வைத்தியக் கல்லூரியில் சேர்த்து படித்தார். அந்தக் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ்காட்லி என்பவர் சன்னை அன்பாக நடத்தினார். அவரே பிற்காலத்தில் சன்-யாட்-சன்னுக்கு ஏற்படும் பலவித அரசியல் அபாயங்களில் உதவியும் செய்கிறார்.

சன்-யாட்-சன் 1892-ல் டாக்டர் பட்டம். பெற்றுக்கொண்டு மாக்கோ என்ற இடத்தில் தொழில் நடத்திக்கொண்டிருக்கின்றார். இரண சிகிச்சையில் கைதேர்ந்தவரென பெயரெடுக்கின்றார். இப்போதுதான் நாட்டின் படுமோசமான நிலையை உணர்கிறார். "அண்டை நாடான ஜப்பான் மேல்நாட்டைப் போலவே எல்லா வகையாலும் சிறப்புற்றிருக்கும் போது அகண்ட விரிவும் அதிக மக்கள் தொகையும் கொண்ட நம் நாடு இந்நிலையடைந்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதை கூர்ந்து கவனிக்கிறார். காலத்துக்கேற்றவண்ணம் அரசியல் பொருளாதாரம் சமூக இயல் ஆகியவைகளை மாற்றிக்கொள்ளாத நாட்டின் கெதி இதுதான் போலும், என எண்ணினார், ஜப்பான் மேல்நாட்டைப் போலவே தன் நாட்டை மாற்றியமைத்துக் கொண்டதால் ஒரு வல்லரசாக பல பெரியநாடுகள் பார்த்து அஞ்சுமளவுக்கு இருப்பதை ஆராய்ந்து அதிலிருந்து ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார். பழைய முறையில் விவசாயத்தை நம்பிக்கொண்டிருக்கும் நாடு விஞ்ஞானத் துறையில் தொழில் வளப்பங்கொண்ட நாட்டை எந்தக்காலத்திலும் வெல்லமுடியாதெனக் கண்டார். கிருஸ்து மதத்தின் மகிமைதானோ, இப்படி. அயல், நாட்டாரிடம் கருணைகாட்டாமல் நடந்துகொள்ளத் தூண்டுகிறது என்ற சந்தேகத்திலாழ்ந்துவிட்டார். எல்லா வசதிகள் இருந்தும் ஏதோ ஒரு விசை சீன நாட்டுக்கில்லை. அந்த விசையைக் கண்டுபிடித்து இயக்கினால் சீனம் கண்டிப்பாக இயங்கும் என்பதைத் திடமாக நம்பினார். அன்று முதல் அவர் தனி மனிதனுக்குச் செய்யவேண்டிய இரணசிகிச்சையை மாத்திரம் பெரிதென எண்ணவில்லை.