சீனத்தின் குரல்/மாநாடு

விக்கிமூலம் இலிருந்து
மாநாடு

1937 பிப்ரவரி 15-ல் ஒரு மாநாடு கூட்டம் அதில் கொமிங்டாங் கட்சிக்காரர்களையும் கம்யூனிஸ்டு கட்சிக்காரர்களையும், இன்னும் பல பெரிய மனிதர்களையும் கலந்துக் கொள்ளும்படிச் செய்து, தன்னைக் கைது செய்தவர்கள் நான்கிங் சர்க்காருக்கு அனுப்பியிருந்த 8 திட்டங்கள் கொண்ட அறிக்கையையும் தான் சிறையிலிருந்தபோது தன்னை சந்தித்த் கம்யூனிஸ்டு தோழர்கள் கூறியவற்றையும், தன் கருத்தையும் விளக்கினார். இதன் காரணமாக இரண்டு கட்சிகளுக்குமிடையே ஒரு சமரசம் ஏற்பட்டது. மாநாடு வெற்றிகரமரக முடிந்தது மாத்திரமல்லாமல், மாநாட்டின் தீர்மானப்படி உள்நாட்டுப் போர் உடனே நிறுத்தப்பட்டது. இருவர் சண்டையிலே கொள்ளையடித்துக் கொண்டிருந்த ஜப்பானியர் பலம் குன்றியது.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு அதாவது 1937-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 7-ம் நாள் ஜப்பானியர் இரண்டாவது முறையாக போர்க்கோலம் பூண்டுவிட்டனர். இந்த ஜப்பானியருக்கு அனுகூலமாக வார்சாவில் குண்டு சத்தம் எனக் கேட்டனர் இரண்டாவது உலகப்போரின் முதல் முழக்கம் என்ற வானிலை செய்தியறிவித்தது. மனிதன் மணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்டிருந்த ரத்த வெள்ளத்தை திறந்து விடட்டுவிட்டான் ஹிட்லர் எனக் கேள்விப்பட்டனர். ஹிட்லரும் ஜப்பானியரோடு சேர்ந்துகொண்டான். இந்த கொடியவன் கூட்டுறவால் ஜப்பானியர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை. அந்த சந்தோஷமும் நீடித்திருந்ததா,இல்லை.

1946 ஆகஸ்டு 8-ந்தேதி நாகசாகியிலும் அதே திங்கள் 14-ந்தேதி ஹிரோஷிமாவிலும் அணுகுண்டு வீழ்ந்து ஜப்பான் சரணாகதியடைந்து போர் முடிவடைந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சீனத்தின்_குரல்/மாநாடு&oldid=1073218" இலிருந்து மீள்விக்கப்பட்டது