தந்தையும் மகளும்/1

விக்கிமூலம் இலிருந்து


1அப்பா! சூரியன் ஒரு பிருமாண்டமான நெருப்பு உருண்டை என்று கூறுகிறார்களே, அப்படி இருந்தும் அது நம்மை எரித்து விடவில்லையே, அதன் காரணம் என்ன?

அமமா! சூரியன் மிகப் பெரியதோர் நெருப்புக் கோளம்தான். பூமியின் சுற்றளவு 25 ஆயிரம் மைல். அவ்வளவு பெரிய பூமியைப் போல் மூன்று லட்சம் 32 ஆயிரம் மடங்கு பெரியது சூரியன். அத்துடன் அதன் சூடு விளிம்பில் 6 ஆயிரம் டிகிரி என்றும், நடுவில் 20

ஊ—ஊதா ப—பச்சை
க—கருநீலம் ம—மஞ்சள்
நீ—நீலம் ஆ—ஆரஞ்சு

சி—சிவப்பு


ஆயிரம் டிகிரி என்றும் வான சாஸ்திரிகள் கணக்கிடுகிறார்கள். அப்படியானால் அதன் சூடு மொத்தம் எவ்வளவு என்று யாரால் அறிந்து கூறமுடியும்?

அப்படியிருந்தும் சூரியன் நம்மை எரித்து விடாமல் இருக்கிறதே, அதன் காரணம் என்ன? சூரியனிடமிருந்துவரும் ஒளியில் ஏழு நிறக்கதிர்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை , நீலம், கருநீலம், ஊதா என்ற வரிசையில் உள. சிவப்புக்கு அப்புறமும், ஊதாவுக்கு அப்புறமும், கதிர்கள் உண்டு. நமக்கு வெய்யிலால் உண்டாகும் சூடு சிவப்புக்கு அப்புறமுள்ள கதிர்களால் தான். அந்தக் கதிர்களின் சூட்டை நாம் தாங்க முடியும். ஆனால் ஊதாவுக்கு அப்புறமுள்ள கதிர்களால் உண்டாகும் சூட்டை நம்மால் தாங்க முடியாது. ஆனால் அந்தக் கதிர்கள் முழுவதும் நமக்கு வந்து சேர்வதில்லை. பிராண வாயுவின் ஒரு வகையான ஒஜோன் என்னும் வாயு பூமியைச்சுற்றி 25 மைல் தூரம் வரை இருப்பதால் அது அந்த கதிர்களின் பெரும் பாகத்தைக் கிரகித்துக் கொண்டு விடுகிறது. அதனால் தான் நாம் சூரியனுடைய உஷ்ணத்தால் எரிந்து விடாமல் உயிருடன் இருந்து கொண்டிருக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/1&oldid=1538045" இலிருந்து மீள்விக்கப்பட்டது