தமிழ்ப் பழமொழிகள் 2/ஓ

விக்கிமூலம் இலிருந்து
ஓ

ஓ கெடுவானுக்கு வாழ்க்கைப்பட்டு ஒட்டமே ஒழிய நடை இல்லை.

(ஒ கெடுப்பானுக்கு, ஓ கொடுப்பானுக்கு.)

ஓங்கி அறைந்தால் ஏங்கி அழச் சீவன் இல்லை.

ஓங்கில் அறியும் உயர்கடலின் ஆழம்; பாங்கி அறிவாள் தன் பர்த்தாவின் வலிமை.

ஓங்கின கை நிற்காது.

ஓங்கின கோடரி நிற்காது. 6145

ஓங்கு ஒன்று: அடி இரண்டு.

ஓசிக்கு அகப்பட்டால் எனக்கு ஒன்று; எங்கள் அண்ணனுக்கு ஒன்று

ஓசை காட்டிப் பூசை செய்.

ஓசை பெறும் வெண்கலம்; ஓசை பெறாது மண்கலம்.

ஓட்டத்துக்குப் பாக்குப் பிடிக்கிறான். 6150

ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்.

ஒட்டமும் ஆட்டமும் உடம்புக்கு நல்லது.

ஓட்டி ஓட்டி மிளகு அரைக்கப் பாட்டி வந்தாளாம்; பையனுக்குச் சோறு போடக் குட்டி வந்தாளாம்.

ஓட்டின சீமாள் ஓட்டினான்; பழமுள்ள காட்டில் ஓட்டினான்.

ஓட்டுகிறவன் சரியாய் இருந்தால் எருது மச்சான் முறை கொண்டாடாது. 6155

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

ஓட்டைக் குடத்திலும் சர்க்கரை நிற்கும்; கருப்பட்டியிலும் கல் இருக்கும்.

ஓட்டைக் குடத்திலேதான் சர்க்கரை இருக்கும்.

ஓட்டைக் கோயிலுக்குச் சர்க்கரை கசக்குமா?

(ஓட்டைக் கோதிலுக்கு.)

ஓட்டைச் சங்கு ஊது பரியாது. 6160

(சங்கால் ஊத முடியாது.)

ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.

(வேக உதவும்.)

ஓட்டைத் தோண்டியும் அறுந்து போன தாம்புக் கயிறும் சரி.

(தோண்டிக்கு.)

ஓட்டை நாழிக்குப் பூண் கட்டுவது போல.

(கட்டி ஆவதென்ன?)

ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?

ஓட்டைப் பானையில் உலையிட்டாற் போல். 6165


ஓட்டைப் பானையில் கொழுக்கட்டை வேகுமா?

ஓட்டைப் பானையில் சர்க்கரை இருக்கும்.

ஓட்டைப் பானையில் நண்டை விட்டாற் போல.

ஓட்டைப் பானையில் விட்ட தண்ணீர் போல,

ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா? 6170


ஓட்டை மதகிலே தண்ணீர் போனால் தோட்டிக்கு என்ன வாட்டம்?

ஓட்டை வீட்டிலே மூத்திரம் பெய்தால் ஒழுக்கோடு ஒழுக்கு.

ஓடக்காரனிடம் கோபித்துக் கொண்டு ஆற்றோடு போன மாதிரி.

ஓடம் கட்டின தூலம்.

ஓடம் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு. 6175


ஓடம் கவிழ்த்த பிரமசாரியைப் போல.

ஓடம் வண்டியிலே; வண்டி ஓடத்திலே,

(வண்டி மேலே, ஓடத்து மேலே.)

ஓடம் விட்ட ஆற்றிலும் அடி சுடும்.

(ஆறும்.)

ஓடம் விட்ட ஆறே அடி சுடும் என்பது அறியாயா?

ஓடம் விட்ட இடம் அடி சுடும்; அடி சுட்ட இடத்தில் ஓடப்படும். 6180


ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு,

ஓட மாட்டாதவன் திரும்பிப் பார்த்தானாம்.

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறியே ஆக வேண்டும்.

ஓடவும் மாட்டேன்; பிடிக்கவும் மாட்டேன்.

ஓடவும் முடியவில்லை; ஒதுங்கவும் முடியவில்லை. 6185


ஓடி ஆடி உள்ளங்காலும் வெளுத்தது.

ஓடி உழக்கு அரிசி சாப்பிடுவதைவிட உட்கார்ந்து ஆழாக்கு அரிசி சாப்பிடலாம்.

ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து ஒரு காசு தேடுவது நலம்.

ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும் உட்கார்ந்து ஒரு பணம் சம்பாதிப்பது மேல்.

ஓடி ஓடி உடையவன் வீட்டில் ஒளிந்தாற் போல். 6190


ஓடி ஓடி உள்ளங்கால் வெளுத்தது.

ஓடி ஓடி நூறு குழி உழுவதைவிட அமர்ந்து அமர்ந்து ஆறு குழி உழுவதே நன்று.

ஓடி ஓடிப் பறந்தாலும் ஓடக்காரன் தாமசம்.

ஓடி ஓடி வேலை செய்தாலும் நாய் உட்காரப் போவதில்லை.

ஓடிப் போகிறவன் பாடிப் போகிறான். 6195

(போனவன்.)

ஓடிப் போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன்.

ஓடிப் போன புருஷன் வந்து கூடிக் கொண்டானாம்; உடைமைமேல் உடைமை போட்டு மினுக்கிக் கொண்டாளாம்.

ஓடிப் போன முயல் எல்லாம் ஒரே முயல்.

ஓடிப் போன முயல் பெரிய முயல்.

ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் ராஜா; அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி. 6200

(ராஜா குரு.)


ஓடிப் போனால் உமிக்காந்தல்; உள்ளே வந்தால் செந்தணல்.

ஓடி மேய்ந்த சிறுக்கிக்கு ஒன்றியிருக்க மனம் வருமா?

ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.

ஓடிய முயல் பெரிய முயல் அல்லவோ?

ஓடியும் கிழவிக்குப் பிறகேயா? 6205


ஓடி வந்து உமிக்காந்தலை மிதித்தாளாம்; திரும்பி வந்து தீக்காந்தலை மிதித்தாளாம்.

ஓடி வரும் பூனை; ஆடி வரும் ஆனை.

ஓடி வரும் போது தேடி வருமாம் பொருள்.

ஓடின மாட்டைத் தேடுவாரும் இல்லை; மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.

ஓடினால் மூச்சு, நின்றால் போச்சு. 6210


ஓடு இருக்கிறது, நான் இருக்கிறேன்.

ஓடுக ஊர் ஓடுமாறு.

(பழமொழி நானுாறு.)

ஓடுகள் விதையைக் கேடறக் காக்கும்.

ஓடுகாலிக்கு வீடு மரம்.

ஓடுகாலி வீடு மறந்தாள். 6215


ஓடுகிற ஆறு ஓடிக் கொண்டே இருக்குமா?

ஓடுகிற கழுதையை வாலைப் பிடித்தால் உடனே கொடுக்கும் உதை.

(பலன்.)

ஓடுகிற தண்ணீரை ஓங்கி அடித்தாலும் அது கூடுகிற பக்கம்தான் கூடும்.

ஓடுகிறது பஞ்சையாய் இருந்தாலும் சிமிட்டுவது இரண்டு முழம்.

ஓடுகிற நாய்க்கு ஒரு முழம் விட்டுக் கல் எறி. 6220


ஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகிற நாய்க்கு எளிது.

ஓடுகிற நீரில் எழுதிய எழுத்தைப் போல.

ஓடுகிற பாம்புக்குக் கால் எண்ணுகிறவன் சாமர்த்தியசாலி.

ஓடுகிற பாம்பைக் கையால் பிடிக்கிற பருவம்.

(வயசு.)

ஓடுகிற பாம்பைக் கையினால் பிடித்து உண்ணுகிற வாயில் மண்ணைப் போட்டுக் கொள்கிற காலம். 6225


ஓடுகிற பாம்பை மிதிக்கிற பருவம்.

(வயசு.)

ஓடுகிற மாட்டைக் கண்டால் துரத்துகிற மாட்டுக்கு எளிது.

ஓடுகிற மாடு விழுந்து விடும்.

ஓடுகிற முயலுக்கு ஒரு முழம் தள்ளி எறிய வேண்டும்.



ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு எளிது. 6230

(லேசு, இன்பம்.)


ஓடுகிறவனை விரட்டுகிறது எளிது.

ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா?

ஓடுபவனும் அம்மணம்; துரத்துகிறவனும் அம்மணம்.

ஓடும் இருக்கிறது: நாடும் இருக்கிறது.

ஓடும் நாயைக் கண்டால் குரைக்கும் நாய்க்கு இளக்காரம். 6235


ஓடோடிப் போனாலும் ஓடக்காரன் தாமசம்.

ஓணத்து மழை நாணத்தைக் கெடுக்கும்.

ஓணான் ஓட்டம் எவ்வளவு தூரம்?

ஓணான் கடித்தால் ஒரு நாழிகையில் சாவு: அரணை கடித்தால் அரை நாழிகையில் சாவு.

ஓணான் தலை அசைத்தால் ஒன்பது கலம் நெல் மசியும். 6240


ஓணான் விழுங்கிய கதை போல.

ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது.

ஓணானுக்கு வேலி சாட்சி; வேலிக்கு ஓணான் சாட்சி.

ஓணானை அடித்தால் உழக்குப் புண்ணியம்.

(ஓணானைக் கொன்றால்.)

ஓதப் பணம் இல்லை; உட்காரப் பாய் இல்லை; உனக்கு என்ன வாய்? 6245


ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

ஓதின மஞ்சள் உறியிலே இருக்கும் போது வேதனை என்ன செய்யும்?

ஓதும் வேதம் பேதம் அகற்றும்.

ஓதுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில்.

(+ உழுவார் எல்லாம் கருமான் தலைக் கடையில்.)

ஓதுவார்க்கு உதவு. 6250


ஓதுவானுக்கு ஊரும் உழுவானுக்கு நிலமும் இல்லையா?

(நிலமுமா கிடையாது?)

ஓந்தி வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது.

ஓநாய்க்கு அதிகாரம் வந்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.

 ஓம் என்ற தோஷம் வயிற்றில் அடைத்தது.

ஓம பிண்டத்தை நாய் இச்சித்தாற் போல். 6255


ஓமல் இட்ட பண்டம் உள்ளே வந்து சேரவில்லை.

ஓமலுக்குப் பிள்ளை அன்றி உறுதிக்குப் பிள்ளை இல்லை.

ஓய்ச்சலும் இல்லை; ஒழிவும் இல்லை.

ஓய்ந்ததடி பனங்காடு; உட்கார்ந்தாளடி சாணாத்தி.

ஓய்ந்ததாம் பானை; உட்கார்ந்தாளாம் சாணாத்தி.

                                              

6260


ஓய்ந்த முழுக்கு ஒரே முழுக்கு.

ஓய்ந்த வேளையில் அவிசாரி ஆடினால் உப்புப் புளிக்கு ஆகும்.

ஓய்வு இலா நேசமே, ஓலமே சரணம்.

ஓயாக் கவலை தீரா வியாதி.

ஓயாது சிரிப்பவள் உன்னையே கெடுப்பாள். 6265


ஓயாமல் அழு, நோவாமல் அடிக்கிறேன் என்ற கதை.

ஓயா மழையும் ஒழியாக் காற்றும்.

ஓர் ஆடு நீர் விட்டால் எல்லா ஆடும் நீர் விடும்.

ஓர் ஆடு மேய்த்தவனே என்றாலும் அதுவும் கெட்டவனே என்றானாம்.

ஓர் ஆண்டி பசித்திருக்க உலகமெல்லாம் கிறுகிறு என்று சுழலுகிறது.

(சுற்றுகிறது.)
                                         

6270

ஓர் ஆறு தாண்டமாட்டாதவன் ஒன்பது ஆறு தாண்டுவானா?

ஓர் உறையில் இரண்டு கத்தியா?

ஓர் ஊர் நடப்பு: ஓரூர் பழிப்பு.

ஓர் ஊர்ப் பேச்சு ஓரூருக்கு ஏச்சு.

ஓர் ஊருக்கு ஒரு பேர் இட்டுக் கொள்ளலாமா? 6275


ஓர் ஊருக்கு ஒரு வழியா?

ஓர் எருமை, ஒரு முருங்கமரம், கால் காணி இருந்தால் பஞ்சம் போகும்.

(வட ஆர்க்காட்டு வழக்கு.)

 ஓர் ஏர்க்காரன் உழுது கெட்டான்; நாலு ஏர்க்காரன் நிறுத்திக் கெட்டான், பத்து ஏர்க்காரன் பார்த்துக் கெட்டான்.

ஓர் ஏரை விரைவில் மறி.

ஓர்ப்படியாள் பிள்ளை பெற்றாள் என்று ஒக்கப் பிள்ளை பெறலாமா? 6280


ஓரக் கண்ணனைப் பழிக்கிறான் ஒன்றரைக் கண்ணன்.

(ஒற்றைக் கண்ணன்.)

ஓரக் கண்ணும் காகக் கண்ணும் ஆகா.

ஓரண்டைக் காடும் காடு அல்ல; ஓரேர் உழவு உழவும் அல்ல.

ஓரம் சொன்னவன் ஆருக்கும் ஆகான்.

ஓரம் வெளுத்து ஒரு பக்கம் செல் அரிக்க. 6285


ஓராம் கண்ணியா, ஒருத்தன் ஆள?

ஓலை டப்பாசு உதறிக் கடாசு.

ஓலைப் பாயில் நாய் மோண்டாற்போல.

(பேண்டாற் போல.)

ஓலைப் பாயில் பேண்ட நாயைப்போல ஏன் சள சள என்கிறாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_2/ஓ&oldid=1160259" இலிருந்து மீள்விக்கப்பட்டது