தமிழ்ப் பழமொழிகள் 3/15

விக்கிமூலம் இலிருந்து




பக்கச் சொல் பதினாயிரம். 14980


பக்குவம் தெரிந்தால் பல்லக்கு ஏறலாம்.

பக்தர் உளத்தில் ஈசன் குடியிருப்பான்.

பக்தி இருந்தால் முக்தி கிடைக்கும்.

பக்தி இல்லாச் சங்கீதம் பாடுவதேன்? சக்தி இல்லாவிட்டால் சிவனே என்று இரு.

பக்தி இல்லாப் புத்தி அசேதனம். 14985


பக்தி இல்லாப் பூசை போல.

பக்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்கு ஏறுமா?

பக்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்குப் போயிற்றாம், நெத்திலி மீனை வாயிலே கல்விக் கொண்டு.

பக்தி உண்டானால் முக்தி உண்டாம்.

பக்தி உள்ள பூனை பரலோகம் போகிறபோது, கச்சைக் கருவாட்டைக் கட்கத்திலே இடுக்கிக் கொண்டு போயிற்றாம். 14990


பக்தி உள்ளவனுக்குப் புட்டுக் கூடை அண்டம் புறப்பட்டுப் போயிற்றா?

பக்திக்கும் சிரத்தைக்கும் பகவான் பலன் கொடுப்பான்.

பக்தி கொள்பவன் முக்தி உள்ளவன்,

பக்தி படபட, யானை சட்டி லொட லொட.

பக்தியோடே பாகற்காய் சட்டியோடே தீய்கிறது. 14995


பகட்டிப் பங்கு எடுத்தால் என்ன? இடியடி பொரியரிசி.

பகடிக்குப் பத்துப் பணம் கொடுப்பார்; திருப்பாட்டுக்கு ஒரு காசும் கொடார்.

(பத்துக் காசு ஒரு காசு.)

பகடியைப் பாம்பு கடித்தது போல.

பகல் உண்ணான் பருத்திருப்பான்.

பகல் உணவுக்குப் பாகல், 15000


பகல் கனவாய் முடிந்தது.

பகலில் தோட்டக்காரன்; இரவில் பிச்சைக்காரன்.


பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே.

பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இரவில் எருமை மாடு தெரியுமா?

பகலில் பன்றி வேட்டைக்கு அஞ்சும் நாய், இரவில் கரித்துண்டுக்கு அஞ்சும். 15005


பகலை இருள் விழுங்குமா?

பகற் கனாப் போல,

பகிடியைப் பாம்பு கடித்தது போல,

(பகடியை.)

பகிர்ந்து தின்றால் பசி ஆறும்.

பகுத்தறிவு இல்லாத துணிவு, பாரம் இல்லாத கப்பல். 15010

(பகுத்தல் இல்லாத.)


பகுத்து அறியாமல் துணியாதே; படபடப்பாகப் பேசாதே.

(செய்யாதே.)

பகுஜன வாக்யம் கர்த்தவ்யம்,

பகைக்கச் செய்யேல்; மறு ஜனனப்படு.

பகைத்தவர் சொல்லாதது இல்லை; பசித்தவர் தின்னாதது இல்லை.

பகைத்தவன் பாட்டைப் பகலில் கேள், 15015


பகைத்தால் உறவு இல்லை.

பகையாளிக்குப் பருப்பிலே நெய் விட்டது போல.

பகையாளி குடியை உறவாடிக் கெடு.

பகையாளி குடியைக் கெடுக்க வெங்காயக் குழி போடச் சொன்னது போல.

(பங்காளி குடியை.)

பகையும் உறவும் பணம் பக்குவம். 15020


பகைவர் உறவு புகை எழா நெருப்பு.

(எழு நெருப்பு.)

பகைவரிடம் நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு இல்லை.

பகைவன் இல்லாத ஊரில் குடி இருக்காதே.

பங்கறை சாவானுக்குப் பல்லழகைப் பார்.

(பதங்குறைந்த.)

பங்கன் இருக்குமிடத்தைத் தேடிக் கங்கை வந்தது போல. 15025

(பங்கன்-நொண்டி.)


பங்காளத்து நாய் சிங்காசனம் ஏறினதென்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.

(பங்களா நாய்.)

பங்காளிக்குப் பல்லிலே விஷம்.

பங்காளிச் சண்டை பொங்கலுக்கு இருக்காது.

பங்காளியையும் பனங்காயையும் பதம்பார்த்து வெட்ட வேண்டும்.

பங்காளியோ, பகையாளியோ? 15030


பங்காளி வீடு வேகிறது; சுக்கான் கொண்டு தண்ணீர் விடு.

பங்கில் பாதி பரத்வாஜம்.

(பரத்வாஜ கோத்திரம்.)

பங்கு இட்டவளுக்குப் பானைதான் மிச்சம்.

பங்கு இடுபவன் பந்து ஆனால் பந்தியில் எங்கே இருந்தால் என்ன?

பங்கு இல்லாப் பங்கை விழுந்து அள்ளலாமா? 15035


பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும் இல்லை.

பங்குனி சித்திரையில் பகல் வழி நடப்பது போல.

பங்குனிப் பனி பால் வார்த்து முழுகியது போல.

பங்குனி மழை பத்துக்கும் நஷ்டம்.

(சேதம்.)

பங்குனி மழை பதம் கொடுக்கும். 15040


பங்குனி மழை பல விதத்திலும் சேதம்.

பங்குனி மழையால் பத்தெட்டும் சேதம்.

பங்குனி மாதம் பகல் வழி நடந்தவன் பெரும்பாவி.

(நடப்பது தோஷம்; நடந்தவன் படுபாவி.)

பங்குனி மாதம் பகல் வழி நடந்தவனைப் பார்த்திருப்பவனும் பாவி.

(யாழ்ப்பாண வழக்கு.)

பங்குனி மாதம் பத்துக்கும் நஷ்டம். 15045


பங்குனி மாதம் பதர்கொள்.

பங்குனி மாதம் பந்தலைத் தேடு.

பங்கூர் ஆண்டி கட்டின மடம்.

பச்சரிசியும் பறங்கிக் காயும் உடம்புக்கு ஆகா.

பச்சிலைத் தோசை அறியாத பன்னாடை இட்டலியைப் பார்த்ததும் எடுத்து எடுத்துப் பார்த்ததாம். 15050


பச்சிலையும் கிள்ளப் படுமோ பராபரமே.

பச்சை உடம்பிலே போடாத மருந்தும் மருந்தா? பந்தியிலே வைக்காத சீரும் சீரா?


பச்சைக் குழந்தைக்கு எத்தத் தெரியும்.

பச்சைக் கூட்டோடே கைலாயம் சேர்வாய்,

பச்சை கண்டால் ஒட்டடி மகளே. 15055


பச்சை கொடுத்தால் பாவம் தீரும்; வெள்ளை கொடுத்தால் வினை தீரும்;

பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு; தூவு பருக்கை வயிற்றுக்குக் கேடு.

பச்சைத் தண்ணீரிலே விளக்குக் கொடுத்துப் படா பத்தினித் தாயே; பெண்டாண்டவனே, உன்னைத் தொட்டவர்கள் எத்தனை பேரடி? துலுக்குப் பத்தினித் தாயே.

பச்சை நெல்லுக்கு பறையனிடத்தில் சேவிக்கலாம்.

பச்சைப் பாண்டத்தில் பாலை வைத்தால் பாலும் உதவாது; பாண்டமும் உதவாது. 15060


பச்சைப் புண்ணில் ஊசி எடுத்துக் குத்தினது போல.

பச்சை பாதி புழுங்கல் பாதி,

பச்சை மட்டைக்குப் போனவன் பதினெட்டாந் துக்கத்துக்கு வந்தாற் போல.

(வந்தானாம்.)

பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?

பச்சை மரத்தில் ஆணி அடித்தது போல. 15065


பச்சை மரத்துக்கு இத்தனை என்றால் பட்ட மரத்துக்கு எத்தனை?

பச்சை மரம் படப் பார்ப்பான்.

பச்சை மீனைப் பட்டிலே பொதித்து வை.

பச்சையைக் கண்டால் ஒட்டடி மகளே,

பசங்கள் கஷ்டம் பத்து வருஷம். 15070


பசி இல்லாதவனுக்குக் கருப்பு மயிர் மாத்திரம்.

(கருப்பு-பஞ்சம்;மயிருக்குச் சமானம்.)

பசி உள்ளவன் ருசி அறியான்.

(உடையான்.)

பசி உற்ற நேரத்தில் இல்லாத பால் பழம் பசி அற்ற நேரத்தில் ஏன்?

பசி ஏப்பக்காரனுக்கும் புளி ஏப்பக்காரனுக்கும் வித்தியாசம் இல்லையா?

பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப் பயிர் இட்டாற் போல. 15075


பசி ஏப்பமா? புளி ஏப்பமா?

பசிக்குக் கறி வேண்டாம்; தூக்கத்துக்குப் பாய் வேண்டாம்.

பசிக்குப் பனம் பழம் தின்னால் பித்தம் பட்ட பாடு படட்டும்.

(படுத்துகிற பாடு படுத்தட்டும்).

பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் போகும் இடத்துக்குப் போகும்.

பசிக்குப் பனம் பழம் தின்றால் பின்னால் பட்டபாடு படலாம். 15080

(பித்தம் பட்ட பாடு படலாம்.)


பசிக்குப் பனம் பழமும் ருசிக்கும்.

பசிக்குமுன் பத்தும் பறக்கும்.

பசித்த கணக்கன் பழங்கணக்குப் பார்த்ததுபோல.

பசித்த செட்டி பாக்கைத் தின்றானாம்.

பசித்த பறையனும் குளித்த சைவனும் சாப்பிடாது இரார். 15085


பசித்தவன் தின்னாததும் இல்லை; பகைத்தவன் சொல்லாததும் இல்லை.

பசித்தவன் பயிற்றை விதை; இளைத்தவன் என்னை விதை.

பசித்தவன் பழங்கணக்கைப் பார்த்தது போல.

பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா?

(வையாதே.)

பசித்தவனுக்குப் பால் அன்னம் இட்டாற் போல. 15090


பசித்த வீட்டில் பச்சை நாவி சேராது.

பசித்தார் பொழுதும் போம்; பாலுடனே அன்னம் புசித்தால் பொழுதும் போம்.

பசித்தால் ௫சி இல்லை. பசித்துப் புசி.

பசித்து வந்து பானையைப் பார்க்காமல், குளித்து வந்து கொடியைப் பார்க்காமல். 15095


பசித்து வருவோர் கையிலே பரிந்து அமிர்தம் ஈந்தாற் போல.

பசித்தோர் முகம் பார்.

பசி தீர்ந்தால் பாட்டும் இன்பமாம்.

(இன்பமயம்.)

பசி பசி என்று பழையதில் கை விட்டாளாம்.

பசியாத போது புசியாதே. 15100


பசியாமல் இருக்க மருந்து கொடுக்கிறேன்; பழையது இருந்தால் போடு என்பது போல.

(பழங்கஞ்சி இருந்தால், ஒருகை போடு.)


பசியாமல் வரம்தருகிறேன்; பழங்கஞ்சி இருந்தால் பார்.

பசியா வரம் படைத்த தேவர் போல.

பசியிலும் எழை இல்லை; பார்ப்பாரிலும் ஏழை இல்லை.

பசியுடன் இருப்பவனுக்குப் பாதித் தோசை போதாதா? 15105


பசி ருசி அறியாது; நித்திரை சுகம் அறியாது.

(அறியுமா?)

பசி வந்தால் பக்தி பறக்கும்.

பசி வந்திடப் பத்தும் பறந்து போம்.

(பறக்கும்.)

பசி வேளைக்குப் பனம் பழம் போல வை.

பசு உரத்திலும் பழம் புழுதி நல்லது. 15110


பசு உழுதாலும் பயிரைத் தின்ன ஒட்டான்.

பசு ஏறு வாலும் எருது கூழை வாலும்.

பசுக் கறக்கு முன் பத்துப் பாட்டம் மழை பெய்யும்.

(பன்னிரண்டு முறை.)

பசுக் கறந்தாற் போல.

பசு கறுப்பானால் பாலும் கறுப்பா? 15115


பசு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?

பசு குசுவினாற் போல.

பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா?

(பார்ப்பான் சாதுவும்.)

பசு கிழமானால் பால் ருசி போமா?

பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் நம்பப்படாது. 15120


பசுத் தின்னாவிடில் பார்ப்பானுக்கு.

பசுத் தோல் போர்த்த புலி.

பசுத் தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது.

பசுந்தாள் உரமே பக்குவ உணவாம்.

பசுப் பிராயம். 15125


பசுப் போல இருந்து புலிபோலப் பாய்கிறான்.

பசு போன வழியே கன்று போகும்.

பசும் உரத்திலும் பழம் புழுதி மேல்.

பசும் புல் தேய நட வாத பாக்கியவான்.

பசும்புல் நுனிப் பனி ஜலம் போல 15130


பசு மரத்தில் அறைந்த ஆணி போல.

(தைத்த.)

பசுமாடு நொண்டியானால் பாலும் நொண்டியா?

பசுமாடும் எருமை மாடும் ஒன்று ஆகுமா?

பசுவன் பிடிக்கப் போய்க் குரங்கானாற் போல.

பசுவில் ஏழை, பார்ப்பானில் ஏழை. 15135


பசுவில் மோழையும் இல்லை; பார்ப்பானில் ஏழையும் இல்லை.

(மோழையையும்... ஏழையையும் நம்பாதே.)

பசு விழுந்தது புலிக்கு ஆதாயம்.

பசுவிலே சாதுவையும் பார்ப்பானிலே ஏழையையும் நம்பக்கூடாது.

பசுவின் உரத்திலும் பழம் புழுதி மேல்.

பசுவின் வயிற்றில்தான் கோரோசனை பிறக்கிறது. 15140


பசுவுக்கு இரை கொடுத்தால் மதுரமான பால் கொடுக்கும்.

பசுவுக்குத் தண்ணீர் பத்துப் புண்ணியம்.

பசுவுக்குப் பிரசவ வேதனை; காளைக்குக் காம வேதனை.

பசுவும் பசுவும் பாய்ச்சலுக்கு நிற்க, நடுப்புல் தேய்ந்தாற்போல.

பசுவும் புலியும் பரிந்து ஒரு துறையில் நீர் உண்கின்றன. 15145


பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா?

பசுவைக் கொன்று செருப்புத்தானம் செய்ததுபோல.

பசுவைப் போல் இரு; புலியைப் போல் பாய்.

பசுவை விற்றால் கன்றுக்கு வழக்கா?

(வழக்கு எது?)

பசையைக் கண்டால் ஒட்டடி மகளே. 15150


பஞ்சத்தில் அடிபட்ட மாடு கம்பங் கொல்லையிற் புகுந்தாற்போல.

பஞ்சத்தில் அடிபட்டவன் போல.

பஞ்சத்தில் பிள்ளை விற்றது போல.

பஞ்சத்துக்கு இருந்து பிழை; படைக்கு ஓடிப் பிழை.

பஞ்சத்துக்கு மழை பனி போல. 15155


பஞ்சபாண்டவர் என்றால் தெரியாதா, கட்டில் சாலைப்போல் மூன்று பேர் என்று இரண்டு விரல் காட்டி ஒரு கோடு எழுதினாள்.

(எழுது.)

பஞ்சம் இல்லாக் காலத்தில் பசி பறக்கும்.

பஞ்சம் தீரும்போது கொல்லும்.


பஞ்சம் பணியாரம் சுட்டது; வீங்கல் வெறிக்க வெறிக்கப் பார்க்கிறது.

பஞ்சம் போம்; பஞ்சத்தில் பட்ட வசை போகாது. 15160


பஞ்சம் போம்; பழி நிற்கும்.

பஞ்சம் வந்தாலும் பரதேசம் போகாதே,

பஞ்சமே வந்தாலும் நெஞ்சமே அஞ்சாதே.

பஞ்சாங்கக் காரன் மனைவி வெற்றிலை போடுகிறது போல.

பஞ்சாங்கக் காரன் வீட்டில் சாப்பாடு நடக்கிற வேளை. 15165


பஞ்சாங்கம் கிழிந்தாலும் நட்சத்திரம் அழியாது.

பஞ்சாங்கம் கெட்டுப் போனாலும் நவக்கிரகம் கெட்டுப் போகுமா?

பஞ்சாங்கம் பல சாத்திரம்; கஞ்சி குடித்தால் கல மூத்திரம்.

பஞ்சாங்கம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.

பஞ்சாங்கம் போனால் அமாவாசையும் போய்விடுமா? 15170


பஞ்சாங்கம் போனாலும் நட்சத்திரம் போகாது.

பஞ்சானும் குஞ்சானும் பறக்கத் தவிக்கின்றன.

பஞ்சு கயிறானாலும் பாரம் தாங்கும்.

பஞ்சுப் பொதியில் நெருப்புப் பட்டாற் போல.

பஞ்சுப் பொதியில் பட்ட அம்பு போல. 15175

(நைத்த.)


பஞ்சு பட்ட பாடு போல.

பஞ்சு படாப் பாடு படும்.

பஞ்சு படிந்த பழஞ்சித்திரம் போல.

பஞ்சு பறந்தாலும் படியும், ஒரு தேசம்; நெஞ்சு பறப்பதற்கு ஒரு நிலை காணோம் லவலேசம்.

(பஞ்சு படிந்தாலும்.)

பஞ்சு போலப் பறக்கிறேன் 15180


பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தாற் போல

பஞ்சும் நெருப்பும் போல.

பஞ்சை நாரி பலகாரம் சுட்டாள்; வீங்கி நாரி விசாரப்பட்டாள்.

(பணியாரம் சுட்டதும்...விசாரப்பட்டதும்.)

பட்சத்துக்குக் கண் இல்லை. 15185


பட்சிக்குப் பசித்தாலும் எட்டியைத் தின்னாது.

(எட்டிக் கனியை)

பட்சி சிறகு பறி கொடுத்தாற் போல.

பட்சித்தாலும் அவர் சித்தம்; ரட்சித்தாலும் சித்தம்.

பட்சி மாறி விட்டது. 15190


பட்ட இடம் பொழுது; விட்ட இடம் விடுதி.

பட்ட கடனுக்குக் கொட்டை நூற்று அடைத்தாளாம்.

பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்.

பட்ட குணம் சுட்டாலும் போகாது.

(திருவால வாயுடையார் திருவிளையாடற் புாரணம், 34.6.)

பட்டடையோடு நின்று தின்ற மாட்டுக்குக் கட்டி வைத்துப் போடக் கட்டுமா? 15195

(யாழ்ப்பாண வழக்கு.)


பட்டணத்தாள் பெற்ற குட்டி; பணம் பறிக்க வல்ல குட்டி.

பட்டணத்துக் காசு பாலாறு தாண்டாது.

பட்டணத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்ததாம்.

பட்டணத்துப் பெண் தட்டுவாணி; பட்டிக் காட்டுப் பெண் ருக்மிணி.

பட்டணத்து வாசலைப் பட்டாலே மூடியிருக்கிறதோ? 15200

(படலாலே, படலாலே மூடுகிறதா?)


பட்டணத்தைப் படல் கட்டிச் சாத்தலாமா?

(காக்க முடியுமா?)

பட்டணம் பறி போகிறது.

பட்டத்து ஆனை பல்லக்குக்குப் பின்னே வருமா?

பட்டத்து ஆனை பவனி வந்தாற் போல.

பட்டத்து ஆனையைப் பார்த்துக் காட்டானை சிரித்ததாம். 15205


பட்டது எல்லாம் பாடு; நட்டது எல்லாம் சாவி.

(பட்டதும் பாழாச்சு; நட்டதும் சாவி ஆச்சு)

பட்டது கெட்டது எல்லாம் பக்கத்தில் பக்கத்தில் வைத்து விட்டுப் புட்டுக் கூடையை ஏந்திக் கொண்டாள் பூப்பறிக்க.

பட்டதும் கெட்டதும் பாய் முடைந்து விற்றதும் ஓலை முடையாமல் உட்கார்ந்திருந்ததும்.

பட்டப் பகல் போல,

பட்டப் பகல் போல் நிலவு எறிக்கக் குட்டிச்சுவரிலே முட்டிக் கொள்ள என்ன வெள்ளெழுத்தா? 15210


பட்டப் பகல் விளக்குப் பாழடைந்தாற் போல.

(பழுதடைந்தாற் போல)

பட்டப் பகலில் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்வதா?

பட்டப் பகலில் நட்சத்திரம் கண்டாற் போல.

பட்டப் பகலில் பட்டணம் கொள்ளை போச்சாம்.

(பறிபோச்சாம்.)

பட்டப் பகலில் டோகிறவளுக்குத் தட்டுக் கூடை மறைப்பா? 15215

(போகிற தேவடியாளுக்கு மறைப்பு ஏன்?)


பட்டப் பகலைப் போல நிலா எறிக்கக் குட்டிச் சுவரிலே முட்டிக் கொள்ள வெள்ளெழுத்தா?

பட்ட பாட்டிலும் பெருத்த பாடாக,

பட்ட பாட்டுக்குப் பலன் கைமேலே.

பட்ட பாடும் கெட்ட கேடும்.

பட்டம் அறிந்து பயிர் இடு. 15220


பட்டம் கட்டின குதிரைக்கு லட்சணம் பார்ப்பதுண்டா?

பட்டம் தப்பினால் நட்டம்

பட்ட மரம் காற்றுக்கு அஞ்சாது.

பட்ட ருணம் சுட்டாலும் தீராது.

(ருணம்-கடன்.)

பட்டர் வீட்டில் பாவம் படுத்திருக்கும். 15225


பட்டவர்க்கு உண்டு பலன்.

பட்டவர்க்குப் பதவி உண்டு.

பட்டவர்கள் பதத்தில் இருப்பார்கள்.

பட்டவளுக்குப் பதவி; படாதவளுக்கு நரகம். 15230

பட்டவளுக்குப் பலன் உண்டு; பதவியும் உண்டு.

பட்டவனுக்குத் தெரியும் படையிற் கலக்கம்.

பட்டறை போட்ட பிறகு குறியோடுவது போல.

பட்டறை வாய்த்தால் பணி வாய்க்கும்.

பட்டா உன் பேரில்; சாகுபடி என் பேரில்,

(என் ஊரிலே.)

பட்டா ஒருவர் பேரில்; அநுபவம் ஒருவருக்கு. 15235


பட்டா ஒருவன் மேல்; பயிர்ச் செலவு ஒருவர் மேல்.

பட்டாடை வாய்த்தால் பணி வாய்க்கும்,

பட்டால் அறிவான் சண்டாளன்; மழை பெய்தால் அறிவான் வேளாளன்.


பட்டால் தெரியும் கஷ்டம்.

பட்டால் தெரியும் பறையனுக்கு; சுட்டால் தெரியும் நண்டுக்கு. 15240

(பள்ளிக்கு... பூனைக்கு.)


பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு; கெட்டால் தெரியும் செட்டிக்கு.

(பள்ளிக்கு + படாமல் தெரியும் பறையனுக்கு.)

பட்டால் பகற்குறி; படாவிட்டால் இராக்குறி

(கறி)

பட்டால் பலன் உண்டு.

பட்டால் பாழ் போகுமா?

பட்டி என்று பேர் எடுத்தும் பட்ட கடன் அடையவில்லை. 15245


பட்டிக்காட்டான் ஆனையைக் கண்டது போல்.

பட்டிக்காட்டான் நாய்க்கு அஞ்சான்; பட்டினத்தான் பேய்க்கு அஞ்சான்.

பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை முறைத்துப் பார்த்தாற் போல.

(பட்சணக் கடையை.)

பட்டிக் காட்டானுக்குச் சிவப்புத் துப்பட்டி பீதாம்பரம்.

(பட்டிக் காட்டுக்கு.)

பட்டிக் காட்டுப் பெருமாளுக்குக் கொட்டைத் தண்டே கருட கம்பம். 15250


பட்டிக்குப் பிராயச்சித்தம் உண்டு; பழையக்துகுப் பிராயச்சித்தம் இல்லை.

பட்டி குரைத்தால் படி திறக்குமோ?

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

பட்டி கூட ஆனை போதும்.

(கூட்ட.)

பட்டி நாய்க்குப் பட்டது சரி.

பட்டி நாய் தொட்டி சேராது. 15255


பட்டி மாட்டுக்குக் கட்டை கட்டினது போல.

பட்டி மாட்டுக்குச் சூடு போட்டது போல.

பட்டினத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்தாற் போல.

பட்டினம் பெற்ற கலம்.

(பழமொழி நானூறு.)

பட்டினி இருக்கும் நாய்க்குத் தின்னப் பகல் ஏது? இரவு ஏது? 15260


பட்டினியே சிறந்த மருந்து.

பட்டு அறி; கெட்டு அறி; பத்தெட்டு இறுத்து அறி.

(பத்தும் எட்டும் அறி.)

பட்டுக் கத்தரித்தது போலப் பேச வேண்டும்.

பட்டுக் கிடக்கிற பாட்டிலே கட்டிக் கொண்டு அழ முடிய வில்லையாம், கற்றாழை நாற்றம்.

பட்டுக் கிடப்பானுக்கு வாழ்க்கைப் பட்ட நாள்முதல் நெட்டோட்டம் ஒழியக் குச்சோட்டம் இல்லை. 15265


பட்டுக் கிழிந்தால் தாங்காது; பங்கரைக்கு வாழ்வு வந்தால் நிற்காது.

பட்டுக்கு அழுவார், பணிக்கு அழுவார்; வையகத்தில் பாக்குக்கு அழுத பாபத்தைக் கண்டதில்லை.

(பாரதத்தை.)

பட்டுக் குலைந்தால் பொட்டு.

பட்டுக் கோட்டைக்கு வழி எது என்றால், கொட்டைப் பாக்குப் பணத்துக்குப் பத்து என்றாளாம்.

(நூறு பணம் என்றாளாம்.)

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு விலை என்ன என்றான். 15270


பட்டு நூல் தலை கெட்டாற் போல.

பட்டு நூலுக்குள்ளே சிக்கெல்லாம் இருக்கிறது.

பட்டுப் புடைவை இரவல் கொடுத்ததும் அல்லாமல் பாயையும் தூக்கிக் கொண்டு அலையலாயிற்று.

(பலகையையும் தூக்கிக் கொண்டு அலைந்தது போல.)

பட்டுப் புடைவை இரவல் கொடுத்து மணையை எடுத்துக் கொண்டுதிரிவது போல.

பட்டுப் புடைவை கொடுத்துத் தடுக்கும் போடுகிறதா? 15275


பட்டுப் புடைவையில் ஊசி தட்டுகுவிப் பாய்ந்தாற் போல.

பட்டும் ஒன்று, பழுக்காயும் ஒன்றா?

பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும்? காற்காசுக் கந்தை ஓடி உலாவும்.

(பட்டாடையும், ஒரு காசு.)

பட்டும் பாழ்; நட்டும் சாவி.

பட்டு மட்கினாலும் பெட்டியிலே. 15280

(மட்கினால்.)


பட்டு மடிச்சால் பெட்டியிலே; பவிஷு குறைந்தால் முகத்திலே.

பட்டைக்குத் தகுந்த பழங்கயிறு.

பட்டை நாமத்தைப் பாக்கச் சாத்தினான்.

பட்டை பட்டையாய் விபூதி இட்டால் பார்ப்பான் என்று எண்ணமோ?

படர்ந்த அரசு, வளர்ந்த ரிஷபம். 15285

(திருவாவடுதுறையில்.)


படாத பாடு பதினெட்டுப் பாடும் பட்டான்.

படாள் படாள் என்கிற பாடகன் மகள் பாடையில் ஏறியும் பட்டானாம்.

படி ஆள்வார் நீதி தப்பின் குடி ஆர் இருப்பார் குவலயத்தில்,

படிக்கம் உடைந்து திருவுருக் கொண்டால் பணிந்து பணிந்து தான் கும்பிட வேண்டும்.

படிக்கிறது சிவ புராணம்; இடிக்கிறது சிவன் கோயில், 15290

(படிக்கிறது திருவாசகம்.)


படிக்கிறது திருவாய்மொழி; இடிக்கிறது. பெருமாள் கோயில்.

(படிக்கிறது ராமாயணம்.)

படிக்கிற பிள்ளை பாக்குப் போட்டால் நாக்குத் தடிப்பாயப் போம்.

படிக்கு அரசன் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை.

படிக்குப் படி நமசிவாயம்.

(பிடிக்குப் பிடி.)

படிக்குப் பாதி தேறாதா? 15295


படிக்கும் மரக்காலுக்கும் இரண்டு பட்டை. பார்ப்பாரப் பையனுக்கு மூன்று பட்டை,

படித்த முட்டாள் படு முட்டாள்.

படித்த முட்டாளாக இருக்கிறான்.

படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்,

படித்தவன் பின்னும் பத்துப் பேர்; பைத்தியக்காரன் பின்னும் பத்துப் பேர். 15300


படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் கொக்குக்கும் அன்னத்துக்கும் உள்ள வித்தியாசம் போல.

படித்த வித்தை பதினெட்டும் பார்த்தான்.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

படித்துக் கிழித்தான்.


படித்துக் கெட்டவன் இராவணன்; படிக்காமல் கெட்டவன் துரியோதனன்.

படிதாண்டாப் பத்தினி. 15305


படிப்படியாகத்தான் ஏற வேண்டும்.

படித்தது ராமாயாணம்; இடிப்பது பெருமாள் கோவில்.

படிப்பது திருவாசகம்; இடிப்பது சிவன் கோயில்.

(படிப்பது வேதம்.)

படிப்பது வேதம்; அறுப்பது தாலி.

படிப்புக்கும் பதவிக்கும் சம்பந்தம் இல்லை. 15310


படுக்கப் படுக்கப் பாயும் பகை,

படுக்கப் பாயும் கொடான், நிற்க நிழலும் கொடான்.

(தூங்க இடமும் கொடான்.)

படுக்கைச் சுகம் மெத்தை அறியாது.

(அறியுமோ?)

படுக்கை உள்ளுக்கும் பட்சணம் வேணும்.

படுகளத்தில் ஒப்பாரியா? 15315


படுகளப்பட்ட பன்னாடை.

படுகுழி வெட்டினவன் அதிலே விழுவான்.

படுத்தால் பசி பாயோடே போய் விடும்.

படுத்திருப்பவன் எழுவதற்குள்ளே நின்றவன் நெடுந்துாரம் போவான்.

படுதீப் பட்டு வேகிற வீட்டில் படுத்துக் கொள்ள இடம் கேட்டானாம். 15320


படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்க வேண்டும்.

படைக் களத்திலே ஒப்பாரி இடுகிறதா?

படைக்காமல் படைத்தானாம்; காடு மேடு எல்லாம் இழுத்து அடித்தானாம்.

படைக்கு ஒருவன்; கொடைக்கு ஒருவன்.

(படைக்கும் கொடைக்கும்.)

படைக்கு ஓடி வாழ்; பஞ்சத்துக்கு இருந்து வாழ், 15325

(ஓடிப் பிழை.)


படைக்குப் பயந்து செடிக்குள் ஒளிகிறதா?

படைக்குப் போகாதவர் நல்ல வீரர்.

படை கெட்டு ஓடுகையில் நரைமயிர் பிடுங்குகிறதா?


படைச்சாலுக்கு ஒரு பணம் இருந்தாலும் பயிர் இல்லாதவன் பாவி.

படைச்சாலுக்கு ஒரு பணம் கொடுத்தாலும் பயிரிடும் குடிக்குச் சரி ஆமா? 15330


படைத்த உடைமையைப் பாராமல் போனால் பாழ்.

படைத்தவன் காக்க வேண்டு.

படை பண்ணியும் பாழும் கோட்டை.

(பாழாம்.)

படை மிருந்தால் அரண் இருக்கும்.

(இல்லை.)

படை முகத்தில் ஒப்பாரியா? 15335


படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.

படையாது படைத்த மருமகளே. உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.

(மாமியாரே.)

படையிலும் ஒருவன்; கொடையிலும் ஒருவன்.

பண்டம் ஓரிடம்; பழி ஓரிடம்.

பண்டம் ஓரிடம்; பழி பத்திடம். 15340


பண்டாரத்துக்கும் நாய்க்கும் பகை.

பண்டாரம் என்றால் இலை போடும் ஆளா?

பண்டாரம் கூழுக்கு அழச்சே, லிங்கம் பரமான்னத்துக்கு அழுத கதை.

பண்டாரம் கூழுக்கு முன்றானையா?

பண்டாரம் படபடத்தால் பானைசட்டி லொடலொடக்கும். 15345

(பண்டாரம் பட் என்ன, லொடலொட என்று உடையாதா? குடு குடு என்ன.)


பண்டாரம் பழத்துக்கு அழும்போது பிள்ளை பஞ்சாமிர்தத்துக்கு அழுததாம்.

பண்டாரம் பிண்டத்துக்கு அழுகிறான்; லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறது.

பண்டாரம் பிண்டத்துக்கு அழுதானாம்; லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டதாம்.

பண்டாரமே, குருக்களே, பறைச்சி மூத்திரம் குடித்தவரே!

பண்டித வம்சம். 15350


பண்டிதன் பிள்ளை சும்பன்.

பண்டை பட்ட பாட்டைப் பழங்கிடுகில் போட்டுவிட்டுச் சம்பா நெற்குத்திப் பொங்கல் இடுகிறாள்.


பண்ணப் பண்ணப் பல விதம் ஆகும்.

பண்ணாடி படியிலே பார்த்தால், ஆண் நடையிலே பார்த்துக் கொள்வான். 15355


பண்ணாடிக்கு மாடு போன கவலை; சக்கிலிக்குக் கொழுப்பு இல்லையே என்ற கவலை.

பண்ணிப் பார்த்தாற் போல.

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.

பண்ணிய பாவத்துக்குப் பயன் அநுபவித்தாக வேணும்.

பண்ணிய பாவத்தைப் பட்டுத் தொலைக்க வேண்டும். 15360


பண்ணி வைத்தாற் போல, பையனுக்கு ஏற்றாற் போல.

பண்ணின பொங்கல் பத்துப் பேருக்குத்தான்.

பண்ணைக் காரன் பெண்டாட்டி பணியக் கிடந்து செத்தாளாம்.

பண்ணெக்காரன் பெண்டு பணியக் கிடந்து செத்தாளாம், பரியாரி பெண்டு புழுத்துச் செத்தான்.

(யாழ்ப்பாண வழக்கு.)

பண்ணைப் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை. 15365


பண்ணையார் வீட்டு நாயும் எச்சில் இலை என்றால் ஒருகை பார்க்கும்.

பண ஆசை தீமைக்கு வேர்.

பணக் கள்ளி பாயிற் படாள்.

பணக்கார அவிசாரி பந்தியிலே; ஏழை அவிசாரி சந்தியிலே.

(விபசாரி.)

பணக்காரத் தொந்தி. 15370


பணக்காரன் பின்னும் பத்துப் பேர்; பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.

(பணக்காரனைச் சுற்றி பைத்தியக்காரனைச் சுற்றி.)

பணக்காரன் பின்னே பத்துப் பேர்; பரதேசி பின்னே பத்துப் பேர்.

பணக்காரனுக்குத் தகுந்த பருப்புருண்டை; ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை.

பணக்காரனுக்குத் தகுந்த மண் உண்டை; ஏழைக்குத் தகுந்த எள் உருண்டை.

பணக்காரனுக்குப் பச்சிலை மருந்து சொல்லாதே. 15375


பணக்காரனுடன் பந்தயம் போடலாமா?

பணக்காரனும் தூங்கமாட்டான், பைத்தியக்காரனும் தூங்கமாட்டான்.


பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.

பணத்துக்கு ஓர் அம்பு கொண்டு பாழில் எய்கிறது போல.

(பாழுக்கு எய்கிறதா? பாழுக்கு இறைத்தது போல.)

பணத்துக்குப் பயறு பத்துப்படி; உறவுக்குப் பயறு ஒன்பது படி. 15380


பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.

பணத்தைக் கொடுக்கச் சொல்லி உயிரை வாங்குகிறது.

பணத்தைக் கொடுத்தானாம்; காட்டைக் கேட்டானாம்.

பணத்தைக் கொடுத்துப் பணியாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்ன வேண்டுமோ?

பணத்தைக் கொடுத்துப் பழந் தொழி வாங்கு. 15385


பணத்தைப் பார்க்கிறதா? பழமையைப் பார்க்கிறதா?

பணந்தான் குலம்; பசிதான் கறி,

பணம் அற்றால் உறவு இல்லை; பசி அற்றால் ருசி இல்லை.

பணம் இருக்க வேணும்; இல்லா விட்டால் பத்து ஜனம் இருக்க வேணும்.

பணம் இருந்தால் பாட்சா; இல்லா விட்டால் பக்கிரி. 15390

(பாதுஷா.)


பணம் இல்லாதவன் பிணம்.

பணம் உண்டானால் படையையும் வெல்வான்.

பணம் உண்டானால் மணம் உண்டு.

(மனம்.)

பணம் என்றால் பிணமும் கை தூக்கும்.

(எழுந்திருக்கும்.)

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும. 15395


பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறான்.

(பறக்கிறது.)

பணம் என்ன செய்யும்? பத்து விதம் செய்யும்.

(பத்து வகை.)

பணம் என்ன பாஷாணம்; குணம் ஒன்றே போதும்.

பணம் கண்ட தேவடியாள் பாயிலே படுக்க மாட்டாள்.

பணம் குணம் ஆகும்; பசி கறி ஆகும். 15400


பணம் செல்லா விட்டால் அரிசிக்காரிக்கு என்ன?

பணம் பசியைப் போக்காது

பணம் பணந்தோடே சேரும்; இனம் இனத்தோடே சேரும்,


பணம் பந்தியிலே; குலம் குப்பையிலே,

(பந்தலிலே, குணம்.)

பணம் பாதாளம் மட்டும் பாயும். 15405


பணம் பார்த்துப் பண்டம் கொள்; குணம் பார்த்துப் பெண்ணைக் கொள்.

பணம் பாஷாணம்.

பணம் பெரிதா? குணம் பெரிதா?

பணம் பெரிதோ? பழமை பெரிதோ?

பணம் பெருத்தது நீலகிரி. 15410


பணம் போனால் சம்பாதிக்கலாம்; குணம் போனால் வராது.

பணம் போனாலும் குணம் போகாது.

பணம் வேண்டும்; அல்லது பத்துச் சனம் வேண்டும்.

பணமும் பத்தாய் இருக்க வேண்டும்; பெண்ணும் முத்தாய் இருக்க வேண்டும்.

(+முறையும் அத்தை மகளாய் இருக்க வேண்டும்.)

பணி செய்வோன் வாயும் சங்குப் பின்னுமாய்ப் பேசுகிறான். 15415


பணியாரம் தின்னச் சொன்னார்களா? பொத்த லை எண்ணச் சொன்னார்களா?

பணியாரமோ கிலுகிலுப்போ?

பக்தங்கி கல்யாணம் பகலோடே.

(புத்தங்கி-சாமவேதி.)

பத்தங்கியானையும் பலாக்காயையும் பார்த்த இடத்தில் சிராத்தம் பண்ணலாம்.

பத்தரை மாற்றுப் பசுந்தங்கம். 15420


பத்தாம் பசலிப் பேர் வழி.

பத்தாம் பேறு பாடையில் வைக்கும்.

பத்தாம் வீட்டைப் பார்ப்பான் பதவியைக் கொடுப்பான்.

(சோதிடம்)

பத்தியத்திற்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால் பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டு வருகிறான்.

(பால் வாங்கி வா என்றால்)

பத்தியம் இருந்தாலும் மருந்து எதற்கு? பத்தியம் இல்லா விட்டாலும் மருந்து எதற்கு? 15425


பத்தியம் பத்து நாள்; இளம் பிள்ளை இரண்டு மாதம்.

பத்திய முறிவுக்குப் பாகற்காய்.

பத்திரம், என் வாசலில் அடி வைக்காதே.

(கால்)

பத்திரிகை படியாதவன் பாதி மனிதன்.

பத்தில் குரு வந்தபோது பரமனும் பிச்சை எடுத்தான். 15430


பத்தில் பசலை; இருபதில் இரும்பு.

(இரும்பு)

பத்தில் பார்வை; இருபதில் ஏற்றம்; முப்பதில் முறுக்கு; நாற்பதில் நழுவல்; ஐம்பதில் அசதி; அறுபதில் ஆட்டம்; எழுபதில் ஏக்கம்; எண்பதில் தூக்கம்.

பத்தில் விழுந்த பாம்பும் சாகாது.

பத்தினி என்ற பெயரோடே பத்துப் பிராயம் கழித்தாளாம்.

பத்தினிப் பானை படபடவென வெடிக்கிறது. 15435


பத்தினிப் பெண்ணைப் பதற்றமாய்ப் பேசாதே.

பத்தினி படாபடா என்றாளாம், பானைசட்டி லொட லொட என்றனவாம்.

பத்தினியைத் தொட்டதும் துரியோதனன் கெட்டதும்.

(பட்டதும்.)

பத்தினியைப் பஞ்சணையில் வைத்துக் கொள்.

பத்தினி வாக்குப் பலிக்கும் 15440


பத்தினி வாக்குக்குப் பழுது வராது.

பத்தினி வாக்கும் உத்தமி வாக்கும் பலித்தே விடும்.

பத்து அடி பிள்ளை, எட்டு அடி வாழை.

(பிள்ளை-தென்னம்பிள்ளை.)

பத்து அரிசியும் வேகவில்லை, பாவி என் பிராணனும் போக வில்லை.

(பிராமணனும்)

பத்து ஆண்டிக்கு ஒருவன் பாதக் குறட்டாண்டி, 15445


பத்து ஆனாலும் பதற்றம் வேண்டாம்; அஞ்சு ஆனாலும் அவசரம் வேண்டாம்.

பத்து இறுத்த பின்பு பாரச் சந்தேகம் தீர்ந்தது.

பத்து இறுத்தாலும் பராச் சத்தேகம் தீராது.

பத்து உள்ள என் தம்பி, பணமுள்ள என் தம்பி, காசுள்ள என் தம்பி, கணக்கப் பிள்ளை உன்தம்பி.


பத்து ஏர் வைத்துப் படி முறமும் தோற்றேன்; எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்? 15450

(விவசாயி ஜைனவிக்கிரகத்தைப் பார்த்துக் கேட்டது. படைமுறமும்.)


பத்துக் கப்பல் வந்தாலும் பறந்த கப்பல்; எட்டுக் கப்பல் வந்தாலும் இறந்த கப்பல்.

பத்துக் காதம் போனாலும் பழக்கம் வேண்டும்.

பத்துக் குட்டி அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.

பத்துக் குடியைக் கெடுத்தவன் பணக்காரன்.

பத்துக்குப் பத்தரை விற்றால் ஒரு பள்ளிக் குடும்பம். 15455

(பள்ளிக் குப்பம்.)


பத்துக்குப் பின் பயிர்.

பத்துக்கு மிஞ்சின பதி விரதை எது?

(பத்துக்கு மேல்- இல்லை.)

பத்துக்கு மேலே ஒரு பறையனுக்காவது தள்ள வேண்டும்.

பத்துப் பணம் கையில் தந்தால் பதிவிரதையும் வசப்படுவாள்.

பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது. 15460


பத்துப் பணம் வேணும்; இல்லாவிட்டால் பத்து ஜனம் வேணும்.

பத்துப் பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கிக் காட்டினாளாம்.

(யாழ்ப்பாண வழக்கு.)

பத்துப் பேர் கண்ட பாம்பு சாகாது.

பத்துப் பேர் மருத்துவச்சிகள் கூடிக் கொண்டு குழந்தை கையை ஒடித்தார்கள்.

பத்துப் பேர் மெச்சப் படிக்கிறதிலும், ஆயிரம் பேரை அடிக்கிறதிலும், நாலு பேர் மெச்ச நடிக்கிறதிலும், மிடாமிடாவாகக் குடிக்கிறதே கெட்டிக்காரத்தனம். 15465


பத்துப் பேருக்குப் பல் குச்சி; ஒருவனுக்குத் தலைச்சுமை.

பத்துப் பேரைக் கொன்றவன் பரியாரி,

(வேரை, பரியாரி வைத்தியன்.)

பத்துப் பேரோடு பதினோராம் பேராய் இருக்க வேணும்.

பத்தும் தெரிந்தவன் பல்லக்கு ஏறுவான்; சூனியமானவன் சுமந்து செல்வான்.

பத்து மாட்டில் கட்டுக்கு அடங்காதவன். 15470


பத்து மிகை இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்.

(மிளகு.)


பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது; ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது.

(அஞ்க வந்தாலும் அவசரம்.)

பத்து வயதானால் பறையனுக்காவது பிடித்துக் கொடுக்க வேண்டும்.

பத்து வயதிலே பாலனைப் பெறு.

பத்து வராகன் இறுத்தோம்; என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆயிற்றே. 15475


பத்து வராகனுக்கு மிஞ்சின பதிவிரதை இல்லை.

பத்து வருஷம் கெட்டவன் பருத்தி விதை; எட்டு வருஷம் கெட்டவன் எள் விதை.

பத்து விதத்திலும் பறையனை நம்பலாம்; பார்ப்பானை நம்பக்கூடாது.

பத்து விரலாலே வேலை செய்தால் ஐந்து விரலால் அள்ளிச் சாப்பிடலாம்.

(பத்து விரலாலே பாடுபட்டால்)

பத்தூர் பெருமாளகரம்; பாழாய்ப் போன கொரடாச்சேரி; எட்டூர் எருமைக் கடா? இழவெடுத்த நாய். 15480


பத்தைக்குள் கிடந்ததைத் தூக்கி மெத்தையிலே வைத்தால் அது பத்தையைப் பத்தையைத்தான் நாடும்.

(யாழ்ப்பாண வழக்கு)

பத்தோடே பதினொன்று; அத்தோடே இது ஒன்று

பத்மாசுரன் பரீட்சை வைத்தது போல.

பதக்குக் குடித்தால் உழக்குத் தங்காதா?

பதக்குப் போட்டால்முக்குறுணிஎன்றானாம். 15485


பதத்துக்கு ஒரு பருக்கை.

பதம் கெட்ட நாயைப் பல்லக்கில் வைத்தால் கண்ட இடமெல்லாம் இறங்கு இறங்கு என்னுமாம்.

பதமாய்ச் சிநேகம் பண்ண வேண்டும்.

(செய்ய வேண்டும்)

பதவி தேடும் இருதயம் போல.

பதறாத காரியம் சிதறாது. 15490


பதறிச் செய்கிற காரியம் சிதறிக் கெட்டுப் போகும்.

பதறின காரியம் பாழ்.


பதனம் பத்துக்கு எளிது.

(பத்துக் கழஞ்சு)

பதி இல்லாத பூனை பரதேசம் போயிற்றாம், நெத்திலி மீனை வாயிலே கவ்விக் கொண்டு,

பதிவிரதா பத்தினி கதை கேட்டு வந்தேன்; பட்டுக் கிடப்பாய் காலை மடக்கு. 15495


பதிவிரதை ஆனால் தேவடியாள் வீட்டிலும் தங்கலாம்.

பதிவிரதைக்குப் பர்த்தாவே தெய்வம்.

பதிவிரதையைக் கெடுக்கப் பதினைந்து பொன்.

பதின்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.

பதின்காதம் போனாலும் பழக்கம் வேண்டும், 15500


பதின்மர் பாடும் பெருமாள்.

பதினாயிரம் கொடுத்தாலும் பதைபதைப்பு ஆகாது.

பதினாறு பல்லில் ஒரு நச்சுப் பல் இருக்கும்.

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்.

பதுங்குகிற புலி பாய்ச்சலுக்கு அடையாளம். 15505

(பதுங்குகிறதெல்லாம்)


பதுமை போல நடிக்கின்றான்.

பத்தடி போல் துள்ளிப் பரிதவிக்கிறது.

பத்தைக் கண்டு பயந்த ஆனை போல.

பந்தம் கெட்டு மோட்சம் காணி யாட்சி ஆகும்.

பந்தம் சொன்னால் படைக்கு ஆகார், 15510


பந்தமும் கூத்தும் விடிந்தால் தெரியும்.

பந்தல் இல்லாத வாழைக்காய் பரப்பிக் கொண்டு ஆடுதாம்.

பந்தல் பரக்கப் போட்டான் சந்திரநாதன்; வந்தி நெருங்க வைத்தான் பத்திர பாகு.

பந்திக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறதாம்.

(தொங்கவா?)

பந்திக்கு முந்த வேண்டும்; படைக்குப் பிந்த வேண்டும். 15515

(பந்திக்கு முந்திக்கொள்)


பந்திக்கு வேண்டாம் என்றால் இலை பீற்றல் என்றானாம்.

(பொத்தல் என்றான்)

பந்தியில் உட்காராதே என்றால் இலை பீற்றல் என்றானாம்.

(பொத்தல் என்றான்)


பப்பு மிஞ்சினால் உப்பு; உப்பு மிஞ்சினால் பப்பு.

பம்பரமாய் ஆட்டி வைக்கிறார்.

பயணக்காரன் பைத்தியக்காரன். 15520


பயந்த மனுஷி பரிமாறப் போனாளாம்; பந்தியில் இருந்தவர்கள் எல்லாம் எடுத்தார்கள் ஓட்டம்.

(பரிமாற வந்தாள். இருந்தவர்கள் எல்லாம் எழுந்து போய் விட்டார்கள்.

இருந்த ஆண்கள் எல்லாம்.)

பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

பயம் உள்ளவரை ஜயம் இல்லை.

பயல் சரண் உயரம்; பழையது முழ உயரம்.

பயற்றங்கூழுக்குப் பங்கு இழந்தவன் கதைபோல. 15525


பயற்றம் பருப்புப் பத்தியத்துக்கு.

பயறு பயறு என்ற பிள்ளை பசறு பசறு என்கிறது.

(என்கிறதாம்.)

பயிர் கிளைத்தால் ஆச்சு; களை கிளைத்தால் போச்சு.

பயிர் செழிக்கப் பார் செழிக்கும்.

பயிர் பலிக்கும் பாக்கியவானுக்கு; பெண்டு பலிக்கும் புண்ணியவானுக்கு. 15530


பயிருக்குக் களை எடுத்தாற்போல.

பயிரைக் கொடுத்துப் பழந்தொழி வாங்கு.

(பழம் புழுதி.)

பயிரை வளர்ப்பான் உயிரை வளர்ப்பான்.

பர்த்தாவும் பார்த்திருக்கப் புத்திரனும் கொள்ளி வைக்க.

(சுமங்கலியாகச் சாதலைக் குறிப்பது.)

பரக்கத் தலை விரித்துப் பட்டினியாச் சீராட்டி. {{float_right|15535}


பரக்கப் பரக்க அலைந்தாலும் இருக்கிறதுதான் இருக்கும்,

பரக்கப் பரக்கப் பாடுபட்டும் படுக்கப் பாய் இல்லை.

பரணி அடுப்புப் பாழ் போகாது.

பரணியான் பாரவன்.

பரணியில் பிறந்தவன் தரணி ஆள்வான். 15540


பரத்தைக்குக் கொடுக்கும் பணத்தைக் குடிப் பெண் வாங்கிக் குலம் கெடுவாளா?

பரதம் எப்படி, பக்தர்கள் அப்படி.

பரதவர் சேரியில் பரிமளப் பொருள் விற்றது போல்,


பரதேசிக்குச் சுடு சோறு பஞ்சமா?

பரதேசியின் நாய்க்குப் பிறந்த ஊர் நினைவு வந்தது போல. 15545


பரப்பான் பயிர் இழந்தான்; இரப்பான் சுகம் இழந்தான்.

பரப்பிரமத்தை தியானம் செய்வதனால் பிரகாசிக்காமல் இருந்த விஞ்ஞானமும் பிரகாசிக்கிறது.

பரபரப்பிலே பாழும் சுடலை ஆச்சு.

பரபோகம் தேடி, இக போகம் நாடி, வாழ்க்கை பெற வேண்டும்.

பரம்பரை ஆண்டியோ? பஞ்சத்துக்கு ஆண்டியோ? 15550


பரிக்கு இடும் கடிவாளத்தை நரிக்கு இடுகிறது.

பரிகாசப்பட்டவனைப் பாம்பு கடித்தாற்போல.

பரிகாரி உறவு தெருவாசல் மட்டும்.

பரிகாரி கடை கொள்ளப் போன கதை.

பரிகாரி தலைமாட்டிலிருத்து அழும் தன்மை போல. 15555


பரிசத்துக்கு அஞ்சிக் குருட்டுக் கன்னியைக் கொண்டது போல.

பரிசத்துக்கு லோபி இழிகண்ணியைக் கொண்டானாம்.

(பரிசத்துக்குப் பால் மாறி.)

பரிசு அழிந்தாரோடு தேவரும் ஆற்றிலர்.

(பழமொழி நானூறு.)

பரிந்த இடம் பாழ்.

பரிந்து இட்ட சோறு பாம்பாய்ப் பிடுங்குகிறது. 15560


பரிந்து இடாத சோறும் சொரிந்து தேய்க்காத எண்ணெயும் பாழ்.

பரிவு இல்லாப் போசனத்தில் பட்டினி நன்று; பிரியம் இல்லாப் பெண்டிரிற் பேய் நன்று.

பருத்தவள் சிறுப்பதற்குள் சிறுத்தவள் செத்துப் போவாள்.

பருத்தி உழுமுன்னே தம்பிக்கு எட்டு முழம்.

பருத்திக் கடையிலே நாய்க்கு அலுவல் என்ன? 15565

(என்ன வேலை?)


பருத்திக் காடு உழுகிறதற்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம்.

பருத்திக் கொட்டை பழம் புளி.

(-உபயோகம் அற்றவை.)

பருத்திச் செடி புடைவையாய்க் காய்த்தது போல.

பருத்திச் செடியும் பாலும் உள்ளானுக்குப் பஞ்சம் இல்லை.

பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறி போல. 15570


பருத்தி பட்ட பாடு எல்லாம் படுகிறது.

பருத்தி புடைவை புடைவையாய்க் காய்த்தாற் போல.

பருத்தி புடைவையாய்க் காய்த்தால் எடுத்து உடுத்தல் அரிதா?

பருத்தி விதைக்கும் போதே, அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்றாளாம்.

பருந்தின் கழுத்தில் பவளத்தைக் கட்டினால் கருடன் ஆகுமா? 15575


பருந்து எடுத்துப் போகுதென்று பார்க்க வந்தனையா? இந்தக் குரங்கு எடுத்துப் போடுதே கோவிந்தா!

பருப்பிலே நெய் விட்டது போல.

(வார்த்தது போல.)

பருப்பு இல்லாமல் கல்யாணமா?

(கல்யாணம் உண்டா?)

பருப்புச் சோற்றுக்குப பதின்காதம் வழி போவான்.

பருப்புத் தின்ற பண்டிதன் போல். 15580


பருப்புத் தின்னிப் பார்ப்பான்.

பருப்புத் தேங்காய் இல்லாமல் கல்யாணமா?

பருப்பும் அரிசியும் கலந்தாற்போலப் பெண்ணும் பிள்ளையும்.

பருப்பும் பச்சரிசியும்.

பருமரத்திலே சிறு காய் எடுத்தாற் போல. 15585


பருமரத்தை அண்டிய பல்லியும் சாகாது.

பருமரத்தைச் சேர்ந்தால் பல்லியும் பொன் நிறம் ஆகும்.

பருவத்தில் பெற்ற சேயும் புரட்டாசி பாதிச் சம்பா நடுகையும்,

பருவத்தே பயிர் செய்.

பருவத்தோடு ஒத்து வாழ். 15590


பருவம் தப்பினால் பனங்கிழங்கும் நாராகும்.

(பருவத்துக்கு.)

பருவம் வந்தால் பன்றிக் குட்டியும் நன்றாகும்.

பரோபகாரம் இதம் சரீரம்.

பரோபகாரமே பெரிது.

பல் அசைந்தால் பசி தீரும். 15595

(ஆறும்.)


பல் ஆடப் பசி ஆறும்.

பல் இழந்தான், சொல் இழந்தான்.

பல் முந்தினால் சொல் பிந்தும்; சொல் முந்தினால் பல் பிந்தும்.

(யாழ்ப்பாண வழக்கு.)


பல்லக்கில் போகும் நாய் ஆனாலும் எச்சில் இலையைக் கண்டால் விடுமா? 15600


பல்லக்கு ஏறப் போகம் உண்டு; உன்னி ஏறச் சீவன் இல்லை.

(பலம், சக்தி.)

பல்லக்கு ஏறுவதும் நாவாலே; பல் உடைபடுவதும் நாவாலே.

பல்லக்கு ஏறுவோரும் பல்லக்குச் சுமப்போரும் அவரவர் செய்த நல்வினை, தீவினையே.

பல்லக்கு வருகிறதும் வாயினாலே; பல்லுப் போகிறதும் வாயினாலே.

பல்லாண்டு விளைந்த நிலம். 15605

(-மதுரை.)


பல்லாய் இல்லாமல் பால் கறப்பான்.

பல்லி சொல்வதெல்லாம் நல்லது; முழுகுவதெல்லாம் கழுநீர்ப்பானை.

பல்லில் பச்சரிசி வைக்க.

பல்லுக்கு எட்டாத பாக்கும், பக்கத்துக்கு எட்டாத அகமுடையானும் விண்.

பல்லுத் தேய்த்தற்குப் பதக்கு நெல் கொடுத்தேன். 15610


பல்லுப் பிடுங்கின பாம்பு போல.

பல்லுப் பெருத்தால் ளொள்ளும் பெருக்கும்.

பல்லுப் போனால் சொல்லும் போச்சு.

(பல்லுப் போச்சு, பழைய சொல்லும் போச்சு.)

பல்லுப் போனாலும் ளொள்ளும் போகாது.

பல்லும் பவிஷும். 15615


பல்லைக் காட்டிச் சிரிக்காதே.

பல்லைக் காட்டிப் பரக்க விழிக்காதே.

(காட்டிப் பரிதவிக்கிறது.)

பல்லைக் குத்தி மோந்து பார்த்தால் தெரியும் நாற்றம்.

பல்லைக் குத்தி மோந்து பார்த்தால் போலே.

பல்லைத் தட்டித் தொட்டிலிலே போடு. 15620


பல்லைப் பல்லை இளித்தால் பறையனும் மதிக்கமாட்டான்.

பல்லைப் பிடுங்கின பாம்பு போல.

பல் வரிசை இரண்டுக்கும் நடுவில் பதுங்கிவிட்ட நாக்குப் போல.

பல்விழுந்த புடையன்.


பல் விழுந்த புடையனுக்குக் கிருதா. 15625


பல உமி தின்றால் ஓர் அவல் தட்டாதா?

(ஓர் அவிழ் தட்டும்.)

பல எலி கூடினால் புற்று எடுக்காது.

(யாழ்ப்பாண வழக்கு.)

பல கரும்பிலும் ஒரு கைவெட்டு.

பலசரக்குக் கடைக்காரனுக்குப் பைத்தியம் பிடித்தது போல.

பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு. 15630


பலத்தவனுக்கு மருத்து சொன்னால் பிடுங்கிக் கொடுத்துத் தீர வேண்டும்.

பல தீட்டுக்கு ஒரு முழுக்கு.

பல துளி ஆறாய்ப் பெருகும்.

பல துளி பெரு வெள்ளம்.

பல தொல்லைக்காரன். 15635


பல நாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.

பல நாளை வெயில் ஒறுத்தாலும் ஒரு நாளை மழை ஒறுக்காதே.

பல பாளம் தீர ஒரு புண்ணியமாகிலும் பண்ண வேண்டும்.

பல பிச்சை ஆறாய்ப் பெருகும்.

பல பீற்றல் உடையான் ஒரு பீற்றல் அடையான். 15640


பலம் தேயப் போய்ப் பழி வந்து சேர்ந்தது போல.

(பலன்.)

பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.

பல மரம் கண்டவன் ஒரு மரமும் ஏறப் போவதில்லை.

பல முயற்சி செய்யினும் பகவான்மேல் சிந்தைவை.

பலர் கண் பட்டால் பாம்பும் சாகும். 15645


பல வாய்க்கால் ஆறாய்ப் பெருகும்.

பல வீட்டு உறவு முறை பட்டினி,

பல வீட்டுப் பிச்சை ஒரு வீட்டுச் சோறு.

பலவும் தின்றால் ஓர் அவல் தட்டாதா?

பலன் இல்லாப் பல நாளிலும் அறம் செய்த ஒரு நாள் பெரிது. 15650


பலன் தேடப் போய்ப் பழி வந்து நேர்த்தது போல,

பலா உத்தமம்; மா மத்திமம்; பாதிரி அதமம். 


பலாக் காயையும் சாம்பானையும் கண்ட இடத்தில் வெட்டு.

(சாமானையும்.)

பலாப் பழத்துக்கு ஈப் பிடித்து விடுவார் உன்டோ?

(ஈ பிடித்து விடவேண்டுமா.)

பலாப் பிஞ்சு கண்ட இடத்திலே திவசம் செய்ய வேண்டும். 15655


பலிக்குப் போகிற ஆடுபோலே.

பவிசு கெட்ட பாக்கு வெட்டிக்கு இரு புறமும் தீவட்டியாம்.

(பாட்டிக்கு.)

பழக்கம் கொடியது. பழக்கம் வழக்கம்.

பழக்கமேணும் சரசம் இன்றி ரவிக்கையில் கைபோடக் கூடாது. 15660


பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பழகாத நாய்மாதிரி விழுகிறான்.

பழகிய பகையும் பிரிவு இன்னாது.

(நற்றிணை.)

பழங்கணக்குப் பருத்தி விதைக்கும் ஆகாது.

பழங்காலைத் தூர்க்காதே; புதுக்காலை வெட்டாதே. 15665

(தூர்க்கவும் வேண்டாம்)


பழத்திலே பழம் மிளகாய்ப் பழம்.

பழத்துக்குத் தெரியும்; வௌவாலுக்குத் தெரியும்.

பழந்தீர் மரவயிற் பறவை போல.

பழந் தேங்காயிலேதான் எண்ணெய்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது; அதுவும் நழுவி வாயில் விழுந்தது. 15670


பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல.

பழம்பகை நட்பாதல் இல்.

(பழமொழி நானுாறு.)

பழம் பழுத்தால் கொம்பில் தங்காது.

பழம் புண்ணாளி பாதி வைத்தியன்.

(பர்யாரி.)

பழமும் தின்று கொட்டையும் போட்டான். 15675


பழமை பாராட்ட வேண்டும்.

பழமை பாராட்டினால்தான்.

பழமொழியில் உமி இல்லை.


பழி ஓரிடம், பாரம் ஓரிடம்.

பழி ஓரிடம், பாவம் ஓரிடம். 15680


பழிக்கு அஞ்சாதவன் கொலைக்கு அஞ்சுவானா?

பழிக்கு அஞ்சு; பாவத்துக்கு அஞ்சு.

பழிக்கு ஆனோர் சிலர்; பழிக்கப் படுவோர் சிலர்.

பழிக்குப் பழி.

பழித்தார் தலையில் பாடு வரும். 15685


பாமுனை பகரேல்.

பழி போட்டுத் தலை வாங்குகிற ஜாதி.

பழி விட்டுப் போகாது.

பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரித்ததாம்.

(பழ இலையை, பச்சை இலை சிரித்ததாம்.)

பழுத்த பழம் போல. 15690


பழுத்த பழம் வௌவாலை அழைக்குமா?

(அழைக்குமாம்.)

பழுத்தல் இல்லாத துணிவு பாரம் இல்லாத கப்பல்.

பழுத்துக் கெடுப்பது பாகல்; பழுக்காமல் கெடுப்பது இரத்தக் கட்டி.

பழுது செய்ததை அறிக்கையிடில் பாதி நிவர்த்தி.

பழுதை என்று கிடக்கப்படவும் இல்லை; பாம்பு என்று நினைக்கப் படவும் இல்லை. 15695


பழுதை என்று மிதிக்கவும் முடியாது; பாம்பு என்று தாண்டவும் முடியாது.

பழுதை பாம்பாய்த் தோன்றுவது போல.

பழுதையைப் பார்த்துப் பாம்பு என்கிறான்.

பழைய ஆத்தியை உருவத் தெரியும்; பருப்புச் சட்டியைக் கழுவத் தெரியும்; அவிட்டத்திற்கு ஆக்கத் தெரியும்.

(ஆத்தியை உருக்கத் தெரியும்.)

பழைய கறுப்பன் கறுப்பனே; பழைய மண் கிண்ணி கிண்ணியே. 15700


பழைய குருடி கதவைத் திறடி.

பழையது சாப்பிட்டுப் பள்ளிக்குப் போகச் சொன்னால் சுடு சோற்றைத் தின்று விட்டுச் சுற்றிச் சுற்றி வருகிறான்.

பழையது போடு; உனக்குப் பசியா வரம் தருகிறேன்.

பழையது மிகுந்த இடமே சாணியாட்சி.

பழைய நினைப்படா பேராண்டி. 15705


பழைய பகையை எண்ணிப் பழ முள்ளுக் கிளையாதே.

பழைய பெருச்சாளி.

பழைய பொன்னனே பொன்னன்; பழைய கப்பறையே கப்பறை.

பழையனூர் நீலி பரிதவித்து அழுதது போல.

பள்ளத்தில் இருக்கிறவன் பள்ளத்திலே இருப்பானா? 15710


பள்ளத்தில் இருந்தால் பெண் சாதி; மேட்டில் இருந்தால் அக்காள்,

(பெண்டாட்டி, மேட்டில் ஏறினால் தாயார்.)

பள்ளத்துாரான் போனதே போக்கு.

பள்ளத்தைக் கண்டால் பாய்ந்தோடும் தண்ணீர் போல,

பள்ளம் இருந்தால் தண்ணீர் தங்கும்.

(பள்ளம் உள்ள இடத்தில்.)

பள்ளம் இறைத்தவன் பங்கு கொண்டு போவான். 15715

(போகிறான்.)


பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்.

(பள்ளம் கண்ட.)

பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்; பயம் உள்ள இடத்திலே பழி போம்.

(கண்ட இடத்திலே.)

பள்ளம் மேடு இல்லாமல் பருத்தி விதைக்கிறது.

(விளைக்கிறது.)

பள்ள மடையில் பாய்ச்சிய நீர் போல.

பள்ளனுக்குப் பல் தேய்த்தால் பசிக்கும்; பார்ப்பானுக்குக் குளித்தால் பசிக்கும். 15720


பள்ளி ஒளித்திரான்; பார்ப்பான் குளித்திரான்.

பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது.

(கணக்கன் உதவான்.)

பள்ளிக்கு ஓர் இடம் எச்சில்; பார்பானுக்குக் கண்ட இடம் எல்லாம் எச்சில்,

பள்ளிக் குப்பத்து அப்பட்ட வாத்தியார்.

(பள்ளிக்குப்பத்துக்கு அம்பட்டன் வாத்தியார்.)

பள்ளிக்குப் பத்து மனை. 15725


பள்ளிக்குப் பல்லு. பார்ப்பானுக்கு முழுக்கு.

பள்ளிக்கும் இரும்புக்கும் பதம் பார்த்து அடி.

பள்ளிக்கும் நாய்க்கும் பதம் பார்த்து அடிக்க வேண்டும்.

பள்ளிக்கு வைக்காமல் கொள்ளிக்கு வைத்தான்.

(குறைத்து வைத்தார்.)

பள்ளிக்கூடத்துக்குப் போனால் வாத்தியார் அடிப்பார். 15730


பள்ளிக்கூடம் போகிறதற்கு முன்னே பயறு பயறு என்று சொன்னதாம்; பள்ளிக்கூடம் போன பிறகு பசறு பசறு என்றதாம்.

பள்ளி கெட்டால் பத்துச் சேர் மண்வெட்டி; பார்ப்பான் கெட்டால் சத்திரம் சாவடி.

பள்ளி கையில் பணம் இருந்தால் பாதி ராத்திரியில் பாடுவான்.

பள்ளி கொழுத்தால் பாயில் தங்கமாட்டான்; நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.

பள்ளிச் சிநேகிதம் பசுமரத்தாணி. 15735


பள்ளி தேய்த்திருக்கான்; பார்ப்பான் குளித்திருக்கான்.

பள்ளிப் பிள்ளை என்றால் செல்வம் குறையுமா?

(செல்லம்.)

பள்ளிப் பிள்ளைக்குப் பகுத்தறிவு ஏது?

பள்ளி பாக்குத் தின்றால் பத்து விரலும் சுண்ணாம்பு,

பள்ளி புத்தி பறையன் பானையிலே, 15740


பள்ளி மச்சான் கதை போல.

பள்ளி முத்தினால் படையாச்சி.

பள்ளியை நினைத்துப் பாயில் படுத்தால் பரமசிவன் போல் கனவு வரும்.

(பிள்ளை வரம்)

பள்ளியையும் இரும்பையும் பதம் பார்த்து அடி.

பள்ளியையும் பனங்காயையும் பதம் பார்த்து அடிக்கவேண்டும். 15745


பள்ளி வாழ்வு பத்து வருஷம்; பார்ப்பான் வாழ்வு முப்பது வருஷம்,

பள்ளி வெற்றிலை போட்டால் பத்து விரலும் சுண்ணாம்பு.

பள்ளி வைத்திய நாதன் கோயில்.

பள்ளுப் பறை பதினெட்டுச் சாதி.

பளியரிடம் புனுகு விற்றது போல. 15750


பற்றாததற்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திர நேரம் குடை.

(யாழ்ப்பாண வழக்கு, பற்றாப் பொறுக்கிக்குப் பவிசு வந்தால் பாதி ராத்திரியிலே குடை.)

பற்றுக் கோலுக்கு என்று பிடித்தால் அரிவாள் பிடிக்கு வந்துநிற்கும்.

பற்றுப் பறக்கடிக்கும்; எச்சில் இரக்கப் பண்ணும்.

பற்று விட்டால் சித்தி.

(சித்து.)

பறக்கிற குருவி சிறகிலே இறை கொண்டு போமா? 15755


பறக்கிற பட்சிக்கு எது தூரம்?

பறக்கும் காகத்துக்கு இருக்கும் கொம்பு தெரியாது.

(தெரியாதா?)

பறக்கும் குருவிக்கு இருக்கும் கொம்பு தெரியாது; பரதேசிக்குத் தங்கும் இடம் தெரியாது.

(குருவிக்கு இருக்கும் இடம்)

பறக்கையில் தெரியாதா காக்கையின் முடுக்கு. 15760

(புடுக்கு.)


பறங்கிக்காய் அழுகலைப் பசுவுக்குப் போடு; பசுவுத் தின்னா விட்டால் பார்ப்பானுக்குக் கொடு.

பறங்கிக் காய் திருடினவன் தோளைத் தடவிப் பார்த்தது போல,

பறங்கிக்குத் தெரியுமா சடங்கும் சாஸ்திரமும்?

பறங்கி நல்லவன்; பிரம்பு பொல்லாதது.

பறந்து பறந்து பாடுபட்டாலும் பகலுக்குச் சோறு இல்லை. 15765


பறந்து போகிற எச்சில் இலைமேல் கல்லைத் தூக்கி வைத்தாற்போல,

(பாறாங்கல்லை.)

பறந்து போகிற காகமும் பார்த்து நின்று பறந்து போகும்.

பறப்பான் பயிர் இழந்தான்; அறக் காஞ்சி பெண்டு இழந்தான்.

பறவை பசித்தாலும் எட்டிக் கனியைத் தின்னாது.

பறிகொடுத்த கட்டில் பயம் இல்லை. 15770


பறி நிறைந்தால் கரை ஏறுவேன்.

பறைக்குடி நாய் குரைத்தால் பள்ளக்குடி நாயும் குரைக்கும்.

பறைச்சி பிள்ளையைப் பள்ளிக்கு வைத்தாலும் பேச்சிலே ஐயே என்னுமாம்.

பறைச்சி பெண் ஆனாலும் துடைத்துவிட்டாற் போல் இருக்கிறது.

பறைச்சி முலை அழகு; பாப்பாத்தி தொடை அழகு; கோமுட்டிச்சி குறி அழகு. 15775


பறைச்சி வெற்றிலை போட்டால் பத்து விரலும் சுண்ணாம்பு.

பறைச்சேரி அழிந்தால் அக்கிரகாரம்.

பறைச்சேரி நாய் குரைத்தால் பள்ளச்சேரி நாயும் குரைக்கும்.

பறைச்சேரி மேளம் கல்யாணத்துக்குக் கொட்டும்; கல்லெடுப்புக்கும் கொட்டும்.

பறைச்சேரியில் முளைத்த வில்வமரம் போல. 15780

(பறைத் தெருவில் வில்வம் முளைத்தது போல.)


பறை தட்டினாற் போல.

பறைந்த வாயும் கிழிந்த சீலையும் கிடவா.

(யாழ்ப்பாண வழக்கு.)

பறைப்பாட்டுக்கும் பறைப் பேச்சுக்கும் சுரைப் பூவுக்கும் மணம் இல்லை.

பறைப் பிள்ளையைக் கொண்டு போய்ப் பள்ளிக்கூடத்தில் வைத்தாலும் அணை என்கிற புத்தி போகாது.

(எதற்கும் அணை என்பதைச் சேர்த்துப் பேசுவார்கள். கொங்கு நாட்டு வழக்கு.)

பறைப் புத்தி அரைப் புத்தி. 15785


பறைப் பூசம்.

பறையரிலே சிவத்தவனையும் பார்ப்பானிலே கறுத்தவனையும் நம்பக் கூடாது.

பறையன் பாக்குத் தின்பதும் பறைச்சி மஞ்சள் குளிப்பதும் அறிப்பும் பறிப்பும் மட்டும்.

பறையன் பொங்கல் போட்டால் பகவானுக்கு ஏலாதோ?

(ஏறாதோ?)

பறையன் வளர்த்த கோழியும் பார்ப்பான் வளர்த்த வாழையும் உருப்படா. 15790


பறையன் வீட்டில் பால் சோறு ஆக்கி என்ன? நெய்ச் சோறு ஆக்கி என்ன?

பறையனுக்குக் கல்யாணமாம்; பாதி ராத்திரியிலே வாண வேடிக்கையாம்.

பறையனுக்குப் பட்டால் தெரியும்; நண்டுக்குச் சுட்டால் தெரியும்.

பறையனுக்கு வரிசை வந்தால் பாதி ராத்திரியிலே குடை பிடிப்பான்.

பறையனுக்கு வள்ளுவன் பாதிச் சைவன். 15795


பறையனும் பார்ப்பானும் போல,

பறையனை நம்பு; பார்ப்பானை நம்பாதே.

பறையனைப் போல் பாடுபட்டுப் பார்ப்பானைப் போல் சாப்பிட வேண்டும்.

பறையைப் பள்ளிக்கு வைத்தாலும் துறைப் பேச்சுப் போகுமா?

பறை வேலை அரை வேலை. 15800


பன்றிக் குட்டி ஆனை ஆகுமா?

பன்றிக் குட்டிக்கு ஒரு சந்தி ஏது?


பன்றிக் குட்டிக்குச் சங்கராந்தி ஏது?

(சோமவாரமா?)

பன்றிக்குட்டி பருத்தால் ஆனைக்குட்டி ஆகுமா?

பன்றிக்குத் தவிடு வைக்கப் போனாலும் உர் என்கிறது; கழுத்து அறுக்கப் போனாலும் உர் என்கிறது. 15805


பன்றிக்குத் தவிடு வைப்பது தெரியாது; கழுத்தை அறுப்பதும் தெரியாது.

பன்றிக்குப் பல குட்டி; சிங்கத்துக்கு ஒரு குட்டி.

பன்றிக்குப் பின் போன கன்றும் மலம் தின்னும்,

(பசுங்கன்றும்.)

பன்றிக்கும் பருவத்தில் அழகிடும்.

பன்றி பட்டால் அவனோடே; காட்டானை பட்டால் பங்கு. 15810


பன்றி பல ஈன்று என்ன ஆனைக்குட்டி ஒன்று போதாதா?

(குஞ்சரம் ஒன்று போதும்.)

பன்றி பல குட்டி; சிங்கம் ஒரு குட்டி.

பன்றி பல குட்டி போட்டாற் போல.

பன்றி புல் தின்றதனால் பயன் உண்டா?

பன்றியின் பின்னோடு பத்தெட்டும் போகிறது. 15815


பன்றி வேட்டையில் பகல் கால் முறிந்த நாய்க்கு இரவு கரிப் பானையைக் கண்டால் பயம்.

பன்னக்காரன் பெண்டிர் பணியக் கிடந்து செத்தான்; பரியாரி பெண்டிர் புழுத்துச் செத்தான்.

பன்னப் பன்னப் பல விதம் ஆகும்.

(தோன்றும். யாழ்ப்பாண வழக்கு.)

பன்னி உரைத்திடிலோ பாரதம் ஆம்.

பன்னிப் பழங்கதை படியாதே. 15820

(பேசாதே.)


பனங்காட்டில் இருந்து கொண்டு பால் குடித்தாலும் கள் என்பார்கள்.

பனங்காட்டில் மிரளுகிறதா?

பனங்காட்டு நாரி சலசலப்புக்கு அஞ்சுமா?

பனங்காயையும் பங்காளியையும் பதம் பார்த்து வெட்ட வேண்டும்.

பனங்கிழங்கு முற்றினால் நாராகும். 15825


பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.

பனிக்காலம் பின்னிட்டது; இனிக் காலனுக்கும் பயம் இல்லை.

(போச்சுது.)


பனிக்குப் பலிக்கும் வரகு; மழைக்குப் பலிக்கும் நெல்.

பனி நீராற் பாவை செய்தாற் போல.

(தேவாரம்.)

பனிப் பெருக்கிலே கப்பல் ஓட்டலாமா? 15830


பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை.

பனி பெய்தால் வயல் விளையுமா?

பனி பெய்து கடல் நிறையுமா?

பனி பெய்து குளம் நிரம்புமா? மழை பெய்து குளம் நிரம்புமா?

பனியால் குளம் நிறைதல் இல். 15835

(பழமொழி நானுாறு.)


பனியிலே கப்பல் ஓட்டலாமா?

பனியை நம்பி ஏர் பூட்டினது போல.

பனை அடியில் இருந்து பால் குடித்தாலும் சம்சயம்.

பனை ஆயிரம்; பாம்பு ஆயிரம்.

பனை இருந்தாலும் ஆயிரம் வருஷம்; இறந்தாலும் ஆயிரம் வருஷம். 15840


பனை ஏறியும் பானை தொடாது இறங்கினாற்போல.

(பானை தொடவில்லை.)

பனை ஏறி விழுந்தவனை ஆனை ஏறி மிதித்தது போல.

(பனையாலே விழுத்தவனை மாடேறி மிதித்தது போல.)

பனை ஏறுபவனை எந்த மட்டும் தாங்குகிறது?

பனை ஓலையில் நாய மொண்டது போல.

(கடா மூண்டது போல.)

பனைக்குப் பத்தடி. 15845


பனை நிழலும் நிழலோ? பகைவர் உறவும் உறவோ?

பனை நின்று ஆயிரம்; பட்டு ஆயிரம்.

(பனை நட்டு ஆயிரம்.)

பனை மட்டையில் மழை பெய்தது போல.

பனை மட்டையில் மூத்திரம் பெய்தது போல.

பனை மரத்தின்கீழ் இருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்தான் என்பார்கள். 15850


பனை மரத்துக்கு நிழல் இல்லை; பறையனுக்கு முறை இல்லை.

(உறவு.)


பனை மரத்து நிழல், பாம்பாட்டி வித்தை, தெலுங்கன் உறவு, தேவடியாள் சிநேகம் நாலும் பகை.

பனையில் ஏறுகிறவனை எட்டும் வரையில்தான் தாங்கலாம்.

பனையிலிருந்து விழுந்தவனை பாம்பு கடித்தது போல.

பனையின் நிழலும் நிழலோ? பறையர் உறவும் உறவோ? 15855

(பகைவர் உறவும்.)


பனைவிதை பெரிதாக இருந்தும் நிழல் கொடுக்க மாட்டாது.

பனை வெட்டின இடத்தில் கழுதை வட்டம் போட்டது போல.

பனை வைத்தவன் பார்த்துச் சாவான்; தென்னை வைத்தவன் தின்று சவான்.

பஹு ஜன வாக்யம் கர்த்தப்யம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_3/15&oldid=1397555" இலிருந்து மீள்விக்கப்பட்டது