தமிழ்ப் பழமொழிகள் 4/பெ

விக்கிமூலம் இலிருந்து


தொகுதி 4

பெ


பெட்டிப் பாம்பு ஒட்டி அடங்கினாற் போல.

பெட்டிப் பாம்பு போல் அடங்கினான்.

பெட்டிப் பாம்பு போல் ஒட்டி இருக்கும். 15970


பெட்டி பீற்றல், வாய்க்கட்டுத் திறம்.

பெட்டி பீற்றலாயினும் மட்டைக்கட்டுத் திறமாயிருக்க வேண்டும்.

பெட்டியில் அடக்கின குட்டிப் பாம்பு போல.

பெட்டியும் முடியும் பிளந்தாற் போல.

பெட்டைக்கு எட்டாத அகமுடையானும் பல்லுக்கு எட்டாத பாக்கும். 16975


பெட்டைக் குதிரைக்கு இரட்டைக் கொம்பு முளைத்தன என்றாளாம்.

பெட்டைக் கோழி கூவியா பொழுது விடிகிறது?

பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?

பெட்டை நாயைப் போலக் கத்தாதே.

பெண் அரமயை கூத்துக்குப் போய்ப் பேய்க் கூத்து ஆச்சுதே. 16980


பெண் அழகு எல்லாம் பெட்டியிலே.

பெண் ஆசை ஒரு பக்கம்; மண் ஆசை ஒரு பக்கம்.

பெண் ஆசை கொண்டு பெருக்கத் தவிக்கிறது.

பெண் ஆனையைத் தொடரும் பேரானையைப் போல.

(போராணையை.)

பெண் இருக்கிற அழகுக்குப் பூசினாளாம் வண்டி, மசியை; தான் இருக்கிற அழகுக்குப் பூசிக் கொண்டாளாம் வேப்பெண்ணெய். 16985


பெண் இன்றிப் பெருமையும் இல்லை; கண் இன்றிக் காட்சியும் இல்லை.

பெண் என்றால் பேயும் இரங்கும்.

பெண் என்று பிறந்த போதே புருஷன் பிறந்திருப்பான்.

பெண் அதை சொன்னசன் பொழுது விடியும்.

பெண்கள் இருப்பிடம் பெரிய சண்டைக்கு இடம். 16990


பெண்களுக்கு அன்பு பெருவாழ்வு அளிக்கும்.

பெண்கிளை பெருங்கிளை.

(பெண்குடி பெருங்குடி..)

பெண் கொடுத்த மாமியோ; கண் கொடுத்த சாமியோ?

பெண் சம்பாதித்தால் பழங்கலம் ஏறும்.

பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவினது போல. 16995


பெண்சாதி இறந்தால் புது மாப்பிள்ளை,

பெண்சாதி கால்கட்டு; பிள்ளை வாய்க்கட்டு.

பெண்சாதி கால் விலங்கு: பிள்ளையொரு சுள்ளாணி.

பெண்சாதி சொந்தம்; போக்குவரத்துப் புறம்பே.

பெண்சாதி பேச்சைக் கேட்பவன் பேய் போல் அலைவான். 17000


பெண்சாதி முகத்தைப் பார்க்கா விட்டிாலும் பிள்ளை

முகத்தைப் பார்க்க வேண்டும்.

பெண்சாதியைக் குதிரைமேல் ஏற்றிப் பெற்ற தாயின்

தலையிலே புல்லுக்கட்டை வைத்து அடிக்கிற காலம்.

பெண்சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு.

பெண் சிரித்தாற் போயிற்று; புகையிலை விரித்தாற் போயிற்று.

பெண்டிாட்டி ஆசை திண்டாட்டித்தில் விட்டது. 17005


பெண்டிசட்டி ஆத்தா பெரியாத்தா; பிழைக்கும் வழியைச் சொல் ஆத்தா.

பெண்டாட்டி இல்லாதவன் கழுதையோடு போனான்.

பெண்டாட்டிக்கு ஆற்றமாட்டிாதவன் சட்டி பானையை உடைத்தானாம்.

பெண்டாட்டிக் கால்கட்டு: பிள்ளை வாய்க்கட்டு,

பெண்டாட்டி குதிச் போல: அகமுடையான் கதிர் போல, 17010


பெண்டாட்டி கொண்டதும் போதும்; திண்டாட்டம் பட்டதும் போதும்.

பெண்டாட்டி செத்தவன் போல முக்காடு போடுகிறாய்.

பெண்டாட்டி செத்தால் புது மாப்பிள்ளை.

பெண்டாட்டி செத்துப் பெரிய மகள் தாலி அறுத்த மாதிரி.

பெண்டிாட்டி பாடு திண்டாட்டம். 17015




பெண்டாட்டி மெய்க்கப் புழைக்கடை வெட்டியது போல.

பெண்டாட்டியுடன் கோபித்துப் பரதேசம் போவார் உண்டா?

(யோவாரா?)

பெண்டாட்டியை அடிக்கடி பிறந்தகத்துக்கு அனுப்பாதே.

பெண்டாட்டியைத் தாய் வீட்டில் விட்டவனும் பூவைக் குரங்கு

கையில் கொடுத்தவனும் போல.

பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல். 17020


பெண்டு இரண்டு கொண்டால் பெரு நெருப்புச் சாமளவும். பெண்டு

இல்லாதவன் பிணத்தைக் கட்டி அழுத கதை.

பெண்டுகள் அம்பலம் பொழுது விடிந்தால் கூத்து.

பெண்டுகள் இருந்த இடம் சண்டைகள் பெருத்த இடம்.

(பெண்டுகள் இருப்பிடம் பெரிய சண்டையாம்.)

பெண்டுகள் இருந்திடின் பெரிய சண்டையாம். 17025


பெண்டுகள்கூடச் சண்டைக்கு வருவார்கள்.

பெண்டுகள் கூத்துப் பேய்க் கூத்து.

பெண்டுகள் சமர்த்து அடுப்பங் கரையில்தான்.

பெண்டுகள் சமர்த்துச் சமையற்கட்டிலும் படுக்கைக் கட்டிலிலுத்தான்.

பெண்டுகள் செட்டி. 17030


பெண்டுகள் சோற்றுக்குத் தண்டம் இல்லை.

(தடை இல்லை.)

பெண்டுகள் வைத்தியம்,

பெண்டுகளாலே பெருமாள் குடி கெட்டது.

பெண்டுகளுக்குப் பெற்றோரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் மூப்பு இல்லை.

பெண்டு கொண்டதும் போதும்; பிண்டு விழுந்ததும் போதும். 17035


பெண்டு மிரண்டால் வீடு கொள்ளாது.

பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு; பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.

பெண்ணாய்ப் பிறப்பதிலும் மண்ணாய்ப் பிறக்கலாம்.

பெண்ணாய்ப் பிறப்பதுவும் பாவம்; பெண்ணோடே கூடிப்பிறப்பதுவும் பாவம்.

(யாழ்ப்பாண வழக்கு )

பெண்ணிடம் அகப்பட்ட பணமும் ஆணிடம் அகப்பட்ட

குழந்தையும் உருப்படா. 17040

பெண்ணின் குணமும் அறிவேன்; சம்பந்தி வாயும் அறிவேன்.

(குணம், வாய்.)

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

பெண்ணுக்கு ஒரு கும்பிடு, வில்லுக்கு ஒரு கும்பிடு.

(அவள் சொகுசுக்கு ஒரு கும்பிடு.அழகுக்கு ஒரு கும்பிடு.)

பெண்ணுக்குக் குணந்தான் சீதனம்.

பெண்ணுக்குக் கேடு பிறந்தகத்தார்; மக்களுக்குக் கேடு மாதா பிதா, 17045


பெண்ணுக்குச் சந்துரு பிறந்தகத்தார்.

பெண்ணுககுப் பெண ஆசை கொள்ளும் பேரணங்கு.

பெண்ணுக்குப் பெண்தான் சீதனம்.

பெண்ணுக்குப் பொன் இட்டுப் பார்; சுவருக்கு மண் இட்டுப் பார்.

பெண்ணுககுப் போட்டுப் பார்: மண்ணுக்குத் தீட்டிப் பார். 17050


பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?

பெண்ணுககும் உண்டா பிசுககு?

பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பும் தேய்ப்பும் உண்டா?

பெண்ணுக்கு மாமியாரும் பிள்ளைக்கு வாத்தியாரும்.

பெணணுககு முநதிப் பூட்டிக் கொள்; மாட்டுப் பெண்ணுக்கு

முந்திச் சாப்பிட்டுக கொள். 17055


பெண்ணும் அல்லாமல் ஆணும் அல்லாமல் பெரு மரம்

போல் வளருகிறது.

பெண்ணை அடிதது வளர்க்க வேணும்; முருங்கை மரத்தை

ஒடித்து வளர்கக வேணும்.

பெண்ணைக் கட்டிக் கொடுக்கலாம்; பிள்ளை பெறச் செய்யலாமா?

(பிள்ளை பெறுவதற்கும் பிணைக்கப் படுவார்களா?)

பெண்ணைக் கட்டிக் கொடுப்பவர்கள் பிள்ளை பெறுவதற்குப்

பிணைபடுவார்களா?

பெண்ணைக் காட்டிப் பொன்னைப் பறித்தது போல, 17060

பெண்ணைக் கொடுத்த மாமன். கண்ணைக் கொடுத்த கடவுள்.

பெண்ணைக் கொடுத்தாயோ? கண்ணைக் கொடுத்தாயோ?

பெண்ணைக் கொண்டு பையன் பேயானான்; பிள்ளை பெற்றுச்

சிறுக்கி நாயானாள்.

பெண்ணைத் திருத்தும் பொள்.

பெண்ணைப் படைத்தாயோ? பேயைப் படைத்தாயோ? 17065

பெண்ணைப் பற்றி மலத்தைத்தின்னு,

(பெற்று... தின்ன வேணும்.)

பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்ற தாய் வேண்டாமா?

(வேண்டும்.)

பெண்ணைப் பெற்றவள் கைக் கொள்ள.

பெண்ணைப் பெற்றுக் கெட்டுப் போகாதே.

பெண்ணைப் போற்றி வளர்; ஆணை அடக்கி வளர். 17070

(அடித்து.)


பெண்ணை மஞ்சத்தில் வை: மகனை நெஞ்சத்தில் வை.

பெண்ணை விட்டுப் பிரியலாம்; கண்ணை விட்டுப் பிரியலாமா?

பெண்ணையும் வேண்டிப் பிள்ளையையும் வேண்டுகிறதா?

பெண்ணை வெறுத்தல் பேரின்பம்,

பெண்ணை வேண்டும் என்றால் இனியற் கண்ணை நக்கு 17075


பெண்ணோடு, ஆனோடு பிறக்காத பெரும்பவி.

பெண்ணோ, போத்தோ?

பெண் தந்த மாமியாரே கன் தந்த தெய்வமாக,

பெண் படையும் பலமும் பெருக்கத் தவிக்கிறதோ?

பெண் படையோ? அம்பலமோ? 17080


பெண் பாவம் பொல்லாது,

பெண் பிறந்ததற்கு மண் பிறக்கலாம்.

பெண் பிறந்த வீடோ புடைளை காய்த்த பந்தலோ?

பெண் பிறப்பதற்குள் பூட்டிக் கொள்; மாட்டுப் பெண்

வருவதற்குள் சாப்பிட்டுக் கொள்,

பெண்புத்தி கேட்கிறவன் பேயன், 17085


பெண் புத்தி பின்புத்தி,

பெண் புத்தி மலம் தினைப் போம்.

பெண் மகிழப் பிறந்தகம் வாழ.

பெண் மூப்பான வீடு பேர் அழிந்து போம்.

பெண் மூலம் நிர்மூலம். 17090

(மூலம்; மூல நட்சத்திரம்.)


பெண் வளர்த்தியோ, பீர் வளர்த்தியோ?

பெண் வளர்த்தி, பீர்க்கங்கொடி.

பெண் வளர்த்தியோ, புடலங்காய் வளர்த்தியோ?

பெண் வளர்வதும் பீர்க்கங்காய் வளர்வதும் யார் கண்டது?

பெய்த மழைக்கும் சரி; காய்ந்த வெயிலுக்கும் சரி. 17095




பெய்த மழையும் காய்ந்த வெயிலும் சரி.

பெய்தால் பெய்யும் புரட்டாசி; பெய்யாவிட்டால் பெய்யும் ஐப்பசி.

பெய்தும் கெடுத்தது, காய்ந்தும் கெடுத்தது.

பெய்து விளைகிறது மலையாளச் சீமை, பாய்ந்து விளைகிறது

தஞ்சாவூர்ச் சீமை; காய்ந்து விளைகிறது இராமநாதபுரம் சீமை,

(பேய்ந்து.)

பெயர் சொல்ல ஆள் இல்லை. 17100


பெரிது ஆனால் பேயும் குரங்கு ஆகும்.

பெரிய இடம் என்று பிச்சை கேட்கப் போனாளாம்; கரியை வழித்து

முகத்திலே தேய்த்தாளாம்.

பெரிய பருவதத்தினமேல் பிரயை கால இடி விழுந்தாற் போல.

பெரிய தனம் கொடுத்தால் சீதனம் கற்கலாமா?

பெரிய தேர் ஆனாலும அச்சாணி இல்லாமல் ஓடாது. 17105


பெரிய மரத்தைச் சுற்றிய வள்ளியும் சாகாது.

(மல்லியும்.)

பெரிய மனிதன் என்று பிச்சைக்குப் போனால் கரியை அரைத்து முகத்தில் :தடவினான்.

பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்த மாதிரி.

பெரிய வீட்டுக் கல்யாணம், பூனைக்குட்டிக்குச் சோறு இல்லையாம்.

பெரிய வீடு என்று பிச்சைக்குப் போனேன்; கரியை வழித்துக் கையில :தடவினார்கள். 17110

(கன்னத்தில். முகத்தில் தீற்றினார்கள்.)


பெரியார் பெருந்தலை பேய்த்தலைக்கு நாய்த்தலை.

பெரியார் வரவு பெருமான் வரவு.

பெரியாரைத் துணைக் கொள்.

பெரியோர் உள்ளம் பேதிக்கலாகாது.

பெரியோர் எல்லாம் பெரியாரும் அல்ல. 17115


பெரியோர் செய்த புண்ணியம்.

பெரியோர் திருவுள்ளம் பேதித்தால் எப்பொருளும் பேதிக்கும்.

பெரியோர் தின்றால் பலகாரம்; சிறியோர் தின்றால் நொறுங்கு தீனி.

பெரியோர் முன் எதிர்த்துப் பேசில் வெள்ளத்துக்கு முன் மரம் போல் வீழ்வார்கள்,

பெரியோர் முன் தாழ்ந்து பேசில் நாணலைப் போல் நிமிர்ந்து கொள்வார்கள். 17120

பெரியோர் வாயில் பொய் நில்லாது.

பெரியோரைக் கண்டு எழாதவன் பிணம்.

பெருக்கப் பெருக்கப் பேயும் குரங்கு ஆனதாம்.

பெருக்காத இடத்துலும் பேசாத இடத்திலும் இருக்க மாட்டேன்.

(திருமகள் கூற்று.)

பெருக்கு ஆற்றில் நீச்சு அறியாதவரை வெள்ளம் கொண்டு போகும். 17125


பெருங்கயிறு முடி அழுந்தாது.

பெருங்காயக் குடுக்கை வாசனை போகாது.

பெருங்காயம் இருந்த பாண்டம் போல.

(பெட்டகம் போல,)

பெருங்காயம் இல்லாத சமையலும் பெரியவர்கள் இல்லாத குடித்தனமும் பாழ்.

பெருங்காயம் தின்ற நாய் போல. 17130


பெருங்காற்றில் அகப்பட்ட சோலையைப் போல.

பெருங்காற்றில் அகப்பட்ட பிள்ளையைப் போல.

பெருங்காற்றில் துரும்பு போல.

பெருங்காற்றில் பூனைப்பஞ்சு பறக்கிறது போல.

(கம்பராமாயணம் இலவம் பஞ்சு.)

பெருங்காற்றும் மழையும் போல. 17135


பெருங்குலத்தில் பிறந்தவன் புத்தி அற்றால் கரும்புப் பூப்போல் இருப்பான்.

(பிறந்தாலும்.)

பெருங் கொடை பிச்சைக் காரருக்குத் துணிவு,

பெருத்த மரங்களை வைத்தவன் உருக்கமாய்த் தண்ணிர் வார்ப்பான்.

பெரு நெருப்பில் புழு மேவுமா?

பெரு நெருப்புக்கு ஈரம் உண்டோ? 17140

(இல்லை.)


பெரும் பாம்பைத் தேரைகள் சுற்றிய கதை.

பெரும் புலியை நாய்கள் சுற்றின கதை.

பெரும்பேன் பிடித்தவருக்கும் பெருங்கடன் வாங்கினவருக்கும் கவலை இல்லை.

பெரும் பேன் பிடித்தவரும் பெருங்கடன் பட்டவரும் முன்னுக்கு வரமாட்டார்கள்.

பெரும் பேன் பிடித்தவனுக்கு அரிப்பு இல்லை;

பெருங்கடன் பட்டவனுக்கு விசாரம் இல்லை. 17145




பெரு மரத்தைச் சுற்றிய கொடியும் சாகாது.

பெருமரத்தைச் சுற்றிய வள்ளிக் கொடி போல.

பெருமழை விழுந்தால் குளிராது.

பெருமாள் இருக்கிற வரையில் கருடன் உண்டு.

பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு. 17150


பெருமாள் இருந்தால் அல்லவோ திருநாள் நடக்கப் போகிறது?

பெருமாள் என்ற பெயரை மாற்றப் பெரிய பெருமாள் ஆச்சுது.

பெருமாள் செல்லும் வழியில் புல்லாய் முளைத்தாலும் போதும்.

பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா? பிரமா நினைத்தால் ஆயுசு குறைவா?

பெருமாள் புண்ணியத்தில் பொரிமாவு கிடைத்ததாம். 17155


பெருமாள் புளித்தண்ணிருக்கு அழுகிறார்; அனுமார் ததியோதனம் கேட்கிறார்.

பெருமாள் பெரிய பெருமாள் ஆனாற் போல்.

பெருமாளைச் சேர்ந்தவர்க்குப் பிறப்பு இல்லை; பிச்சைச் சேற்றுக்கு

எச்சில் இல்லை.
(பிழைப்பு இல்லை.)

பெரு மீனுக்குச் சிறு மீன் இரை.

பெருமை உள்ளங்கையிலே வளர்ந்தாலும் பேச்சுரை நல்ல சுரை ஆகாது. 17160


பெருமை ஒரு முறம்: புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.

பெருமைக்காரன் பின்னால் போனாலும் செருப்புக்காரன் பின்னால்

போகக் கூடாது.

பெருமைக்கு ஆட்டை அடித்துப் பிள்ளையின் கையில் காதைச்

சுட்டுக் கொடுத்தான்.

பெருமைக்குப் பன்றி வளர்க்கிறது போல.

பெருமை கண்டவர் சிறுமை கண்டால் அல்லது தேறார். 17165


பெருமை சொன்னால் கறவைக்குப் புல் ஆகுமா?

பெருமைதான் அருமையைக் குலைக்கும்.

பெருமை பீதக்கலம்; இருக்கிறது ஓட்டைக் கலம்.

பெருமையான தரித்திரன் வீண்.

பெருமையும் சிறுமையும் தான் தர வரும். 17170


பெரு ரூபத்தை உடையவர் எல்லாம் பிரயோசனமாய் இருக்க மாட்டார்.

பெரு வயிற்றை நம்பிச் சீமந்தம் வைத்தாற் போல்.

பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்துக்கு நாள் இட்டுக் கொண்டானாம்.

பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்துக்கு வளையல்

போட்டுக் கொண்டானாம்.

பெரு வயிறு கொண்டவனுக்குக் காரிய முய்கிறது லாபம். 17175


பெரு வயிறு கொண்டவனுக்க காறி உமிழ்ந்தது ஆதாயம்.

பெருவாரிக் கழிச்சலிலே தப்பிப் பிழைத்தவன் நாட்டாண்மைக் காரன்.

பெரு வாரி பெருக்க அகமுடையானிலே பெண்ணுக்கு ஓர்

அகமுடையான் கறுப்பாய்ப் போச்சு.

பெரு வெள்ளம் பாயும் கடலில் மல வாய்க் காலும் பாயும்.

பெலாப்பூரே பாபகோக்ரே, நாசதாளி முன்னே நிரந்தரம். 17180

(பெலாப்பூர்; செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள ஓர் ஊர்.)


பெற்ற தாய் ஆனாலும் குற்றம் எத்தனை பொறுப்பாள்?

(எவ்வளவு )

பெற்ற தாய்க்கும் வளர்த்த தாய்க்கும் உதவாமற் பிரிந்த குயிலைப் போல.

பெற்ற தாய்க்கப் பிறகு பெற்ற அப்பன் சிற்றப்பன்.

(பெற்றதாய் செத்தால்.)

பெற்ற தாய் பசித்திருக்கப் பிராமண போஜனம செய்வித்தது போல.

பெற்ற தாய் மூதேவி; புகுந்த மனைவி சீதேவி. 17185

(புகுந்ததாரம்.)


பெற்ற தாயிடத்திலா கற்ற வித்தை காட்டுகிறது?

(கற்றது காட்டுகிறாய்?)

பெற்ற தாயுடன் போகிறவனுக்குப் பக்தம் ஏது?

பெற்ற தாயைப் பெண்டுக்கு இழுக்கிறதா?

பெற்றது எல்லாம் பிள்ளை ஆமோ? இட்டது எல்லாம் பயிர் ஆமோ?

பெற்றது எல்லாம் பிள்ளை ஆகுமா? நட்டது எல்லாம் மரம் ஆகுமா? 17190


பெற்றது எல்லாம் பிள்ளை ஆகுமா? பூத்தது எல்லாம் காய் ஆகுமா?

பெற்றது எல்லாம் பிள்ளையோ? நட்டது எல்லாம் பயிரோ?

பெற்றது எல்லாம் பிள்ளையோ, விளைந்தது எல்லாம் குசக்கலமோ?




பெற்றது வயிற்றுப் பிள்ளை; கொண்டது கயிற்றுப் பிள்ளை.

பெற்ற பிள்ளை உதவுவதற்குமுகி வைத்த பிள்ளை உதவும். 17195

(வைத்த பிள்ளை.தென்னம் பின்ளை.)


பெற்ற பிள்ளை சோறு போட விட்டாலும் வைத்த பிள்ளை சேன்று போடும்.

பெற்ற பிள்ளை துடையிற் பேண்டால் என்ன செய்யலாம்?

பெற்ற பிள்ளையும் சரி, செத்த நாயும் சரி.

பெற்ற மனம் பித்து; பின்னை மனம் கல்லு.

பெற்ற வயிற்றுக்குப் பிரண்டையைக் கட்டிக் கொள்ள வேண்டும். 17200


பெற்றவள் அறிவாள் பிள்ளை வருத்தம்.

பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள்; பெண் சாதி மடியைப் பார்ப்பாள்.

பெற்றவருக்குத் தெரியாத பேர் இட?

பெற்றவருக்குத் தெரியும் பிரசவ வேதனை.

பெற்றவருக்குத் தெரியும் பிள்ளை அருமை, 17205


பெற்ற வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பேர்.

(வளர்ந்த விட்டுக்கும்.)

பெற்றாயோ, பிழைத்தாயோ?

பெற்றாரை நினையாத தறிதலை.

பெற்றாலும் பிள்ளை நாயகம்; நட்டாலும் தில்லைநாயகம்.

பெற்றாள் ஒருத்தி; பெருமை கொண்டாள் மற்றொருத்தி. 17210


பெற்றுப் பிழைத்தாயோ? செத்துப் பிழைத்தாயோ?

பெற்றுப் பெற்றுப் பேர் இட்டது போல்.

பெற்றுப் பேர் இடாவிட்டாலும் இட்டுப் பேர் இடு.

பெற்று வைத்த பிள்ளையும் கொடுத்து வைத்த பணமும் எங்கேயும் போகா.

பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும். 17215


பெறப் பெறப் பிள்ளை ஆசை.

பே


பேச்சுக் கண்டா சிங்காரம்?

பேச்சுக் கற்ற நாய் வேட்டைக்கு ஆகாது.

(வேட்டை பிடிக்காது.)

பேச்சுக்கு ராவணன்; பிண்டத்துக்குக் கும்பகர்ணன்.

(பின்பு கும்பகர்ணன்.)

பேச்சுக்குப் பேச்சுச் சிங்காரந்தான். 17220

(சிங்காரமா?)


பேச்சுக் கொடுத்துப் பேச்சு வாங்குகிறதா?

பேச்சுப் பராக்கில் சேற்றைக் குழைத்தனங்கள்.

பேச்சுப் பல்லக்கு; தம்பி கால்நடை.

பேச்சுப் பேச்சு என்னும் கிளி பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சு என்னுமாம்.

(என்னாதாம்.)

பேச்சுப் பேசும் போதே பீச்சிப் புடைவையில் கட்டிக் கொள்கிறா? 17225


பேச்சைக் கொடுத்து ஏச்சை வாங்குகிறது.

பேச்சைக் கொடுத்துப் பேச்சை வாங்கு.

பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறான்.

பேசத் தெரியாதவன் படிப்பும் வீரம் இல்லாதவன் வாளும் பிரயோசனம் இல்லை.

பேசப் பேச எந்த மொழியும் வரும், 17230

(எந்தப் பாஷையும்.)


பேசப் பிறந்தாயோ: சாகப் பிறந்தாயோ?

(பேசப் போகிறாயோ? சாகப் போகிறாயோ?)

பேசாத வீடும் பெருக்காத வீடும்.

பேசாது இருந்தால் பிழை ஒன்றும் இல்லை.

பேசா மடந்தை பேசும் தெய்வம்.

பேசில் அவலம்: பேசாக்கால் அவலம். 17235



பேசின வாயும் பீறின. கந்தையும் நில்லா.

பேசினால் அவலம்; பேசாவிட்டால் ஊமை.

(பேசினால் சாலம்.)

பேசினால் வாயாடி, பேசாதிருந்தால் ஊமைப் பயல்.

பேசுகிறது அரிவிரதம்; நோண்டுகிறது இட்டிக் கிழங்கு.

பேடிக்குத் தேவரம்பை கிடைத்ததும் பிரயோசனப் படாததைப் போல. 17240


பேடி கையில் ஆயுதம் பிரகாசிக்குமா?

பேடி கையில் ரம்பை அகப்பட்டது போல.

பேடி கையில் வாலி போல.

பேண்டால் செக்கிலே பேளுவேன்: இல்லாவிட்டால் பரதேசம் போனேன்.

பேத்திக்கு இட்டாலும் கூத்திக்கு இடாதே. 17245


பேதம் அற்றவர் நீதம் உற்றவர்.

பேதை ஆனாலும் தாய்: நீர் ஆனாலும் மோர் .

பேதைகள் வெள்ளத்தில் நின்றும், தாகத்திற்குத் தண்ணீருக்கு அலைவார்கள்.

பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.

பேப்பர் படித்தவன் முன்னுக்கு வருவானா? 17250

(செட்டி நாட்டு வழக்கு.)


பேய் அடிக்கப் பிள்ளை பிழைக்குமா?

பேய் ஆசை பிடித்தாலும் நாய் ஆசை ஆகாது.

பேய் ஆடிய கம்பம் போல.

பேய் ஆனாலும் தாய்; நீர் ஆனாலும் மோர்.

பேய் ஆனாலும் தாய் வார்த்தை தட்டலாமா? 17255


பேய் இல்லாத் தலை ஆடாது; பேன் இல்லாத் தலை கடிக்காது.

பேய்க்குக் கள் வார்த்தாற் போல.

பேய்க்கும் பார்; நோய்க்கும் பார்.

பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் பிடுங்குபட்டுத்தான் சாக வேண்டும்.

பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் போல. 17260


பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் புளியமரம் ஏறத்தான் வேண்டும்.

பேய்க்கு வேப்பிலை போல,

பேய்க்கு வேலை இட்டது போல.

பேய்க் கூத்தும் ஆமணக்கும் ஆள் போனால் ஆன் தெரியாது.

பேய்க் கொடை. 17265


பேய் கொண்டாலும் கொள்ளலாம்; பெண் கொள்ளல் ஆகாது.

பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகுமா?

பேய் சிரித்தாலும் ஆகாது; அழுதாலும் ஆகாது.

பேய்ப் புத்தி. நாய்ப் புத்தி, ஏன் இருக்கிறது உன் புத்தி?

(உள் புத்தி.)

பேய் பிடிக்கவும் பிள்ளை பிழைக்குமா? 17270


பேய் பிடித்த பெண்ணும் நாய்ப் பிடித்த பிடியும் ஒன்று.

பேய்ப் பிள்ளை ஆனாலும் தாய் தள்ளி விடுவாரா?

பேய் பிள்ளை பெற்றதும், பிடுங்க நூல் நூற்றதும்.

பேய் போய்ப் புளியமரத்தில் ஏறினது போல.

பேய் வேஷம் போட்டால் ஆடித் தீர வேண்டும். 17275


பேயின் வாயில் பெற்றது பேறு.

பேயும் அறியும் பென்சாதி பிள்ளையை.

பேயும் ஆவது நியாயம் பகரும்.

(பேயும் சில நியாயம் பகரும்.)

பேயும் பிடித்ததாம்; நாயும் குரைத்ததாம்.

பேயும் வளர்க்கும் பின் ஆறு மாசம். 17280


பேயைக் கொண்டிாலும் கொள்ளலாம்; கண்ட மங்கலம்

பெண்ணைக் கொள்ளக் கூடாது.

பேயை நம்பினாலும் பெண்ணை நம் பொணாது.

(நம்பலாகாது.)

பேயைப் பெண்டு படைத்தது போல.

பேயைப் பேய் அடிக்குமா?

பேயைப் போல் அசைகிறதா. 17285

(பறக்கிறதா?)


பேயோடாயினும் பிரிவு இன்னாது.

(பழமொழி நானுாறு.)

பேயோடு பழகினாலும் பிரிவது அரிது.

பேர் இல்லாத சந்நிதி பாழ். பிள்ளை இல்லாத செல்வம் பாழ்.

பேர் கங்கா பவானி; தாகத்திற்குத் தண்ணின் கிடையாது.

(கங்கா தேவி.)

பேர் சந்திரவதனாள்; முகத்தில் அழகு கிடையாது. 17290


பேர் சொல்லப் பிள்ளை நாமம் அற்றுப் போச்சு.

(செல்லப் பிள்ளை ராயர்.)

பேர்த்து அடிவைக்கச் சீவன் இல்லை; பேர் தாண்டவராயன்.

பேர் பதினெட்டாம் பேறு.

பேர் பெத்தப் பேர்.

(பெத்த-பெரிய: தெலுங்கு.)

பேர் வைத்துப் பேர் தாக நீருலேது. 17295

(தாக-குடிக்கலேது இல்லை. தெலுங்கு.)


பேர் பெரிய பேர்; குடிக்கப் போனால் நீர் கிடையாது.

பேர் பெற்றான் செம்பரம்பாக்கத்தான்; நீர் பெற்றான் மாம்பாக்கத்தாள்.

பேர் பொன்னம்மாள்; கழுத்தில் கருகுமணி.

(கறுப்பு மணி.)

பேர் பொன்னாத்தாள்; கட்டக் கரிய மணி இல்லை.

(கசிய மணிக்கு வழி இல்லை.)

பேர் போனாலும் பிள்ளைப் பட்டம் போகவில்லை. 17300


பேர் முத்துமாலை; கட்டக் கரிமணிக்கு வழி இல்லை.

பேராசைக்காரனுக்குத் தீராத நஷ்டம்.

பேராசைக்காரனுக்குப் பெரும்புளுகன் தானாபதி.

பேராசைக்காரனைப் பெரும் புளுகால் வெல்லவேண்டும்.

(வென்றாற் போல.)

பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிறது. 17305


பேராசை தரித்திரம்; தீராத உபத்திரவம்.

பேராசைப் பூண்டு பெருந்தொகையை இழப்பது போல.

பேராசை பெருங்கேடு.

பேராசை பெரு நஷ்டம்.

பேரிளமை கடந்த பின் பிள்ளை பெற்று எடுத்தாற்போல. 17310


பேரின்பம் வேண்டின் சிற்றின்பம் ஒழிக்க.

பேரூர்க் குடியிருப்பும் சிற்றுரர் வேளாண்மையும்.

பேரைச் சொன்னால் அழுத பிள்ளையும் வாய் மூடும்.

பேளச் சொன்னது யார்: வாரச் சொன்னது யார்? பேளப் போன இடத்தில்

பேரை மறந்து விட்டதாம். 17315


பேளப் போன இடத்தில் விளங்காய் அகப்பட்டது போல.

பேளுகிற கிழவியும் எழுந்திராள்.

பேன் இராக தலை கடிக்குமா? பேய் இராத தலை ஆடுமா?

(தலை அளக்குமா?)

பேன் கட்டிக் கல் இழுப்பது போல.

(யாழ்ப்பாண வழக்கு.)

பேன் பார்த்தாலும் பார்க்கும்; காதைப் பிய்த்தாலும் பிய்க்கும் குரங்கு. 17320

பை


பை எடுத்தவன் எல்லாம் வைத்தியனா?

பைக்குள் இருந்தால் கைக்குள் வரும்.

பைசாசத்தைப் பணியேல்.

பைசா நாஸ்தி, படபடப்பு ஜாஸ்தி.

பைசாவுக்குப் பத்துப் பெண் கொசுறு குத்து. 17325


பைத்தியக்காரன் கையில் மாணிக்கம் போல.

பைத்தியக்காரன் கிழித்தது கோவணத்துக்கு ஆயிற்று.

பைத்தியக்காரன் கிழித்தது கோவணத்துக்கும் ஆகாது.

பைத்தியக்காரன் வாயால் எடுத்தாற் போல,

பைத்தியத்தைச் சுற்றிப் பத்துப் பேர். 17330


பைத்தியம் தெளிகிறது: உலக்கை எடுத்து வா, காது குத்த.

பைத்தியம் பரசிவன் .

பைத்தியம் பரிகாசம் வேணும்: ஒன்று அதிகாரம் வேணும்

பைத்தியம் பிடித்த நாய் சாராயம் குடித்தது போல.

பைத்தியம் பிடித்த நாயில் பெண் நாய் ஆனா என்ன? ஆண் நாய் ஆனா என்ன? 17335


பைத்தியம் பிடித்துப் பாயைப் பிறாண்டுகிறது.

பைத்தியமோ பண்டாரமோ என்றால், இப்போதுதான் தொடர்கிறது என்றான்.

பைத்துப் பைத்து நூற்றுப்பதிது; படையாச்சிக்குப் பத்துத் தள்ளுபடி..

(ஏமாற்றுக் கணக்கு.)

பைந்தமிழ்ட புலவோர் பாட்டுக்கு ஏற்றவன்.

பையச் சென்றால் வையம் தாங்கும். 17340


பையத் தின்றால் பனையையும் தின்னலாம்.

பையப் பணிந்தவன் பட்டணத்தைச் சுற்றான்.

பையப் பையப் பாயும் தண்ணிக் கல்லும் கசியம் பாயும்.




பைய மிதித்தது வேடன் அடி; பகறி மிதித்தது பன்றி அடி.

பைய மென்றால் பனையையும் மெல்லலாம். 17345


பையலோடு இணங்கின் எய்திடும் கேடு.

பையன் நல்லவன்; பணம் பறியான்.

பையனுக்கு என்ன வரும்? எனக்கு மாசம் இரண்டு சின்னப் பணம் வரும்.

பையா, பருத்தி விதைக்கட்டும் பொறு என்றான், அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்றான்.

பையில் கட்டி வைத்த பொருள் பறி கொடுக்கப்பட்டது. 17350


பையைக் கட்டு அவிழ்த்தவன் கை இட்டுப் பார்ப்பான்.


பொ

பொக்கை வாய்க்கு ஏற்ற பொரிமா.

பொக்கை வாயன் மெச்சினானாம் பொரிமாவை.

பொக்கை வாயில் போச்சுப் பொரிமா என்றானாம்,

பொங்கப் பானை எடுக்கப் போனவளுக்குத் தங்கப் பானை கிடைத்ததாம். 17355


பொங்கல் வந்தால் தெரியும், பிறந்த இடத்துப் பெருமை.

பொங்கலும் போச்சு, போகியும் போச்சு; பொண்ணை அனுப்படா பேயாண்டி.

பொங்க வர மாட்டேன்; தின்ன வருவேன்.

(திங்க. )

பொங்கியும் பால் புறம் போகவில்லை.

பொங்கின பால் பொய்ப் பால். 17360


பொங்கினவர் காடு ஆள்வார்.

பொங்குகிற பதநீருக்குப் பதம் போட்டது போல.

பொங்குகிற பாலுக்கு நீர் தெளித்தது போல.

பொங்க சனி செல்வத்தைப் பொங்கச் செய்யும்.

பொங்கு சனி போய் மங்கு சனி வந்தது; மங்கு சனி போய்

கொங்கு சனி வந்தது. 17365

(சிரங்குச் சனி.)


பொங்கும் காலத்தே புளி நயக்கும்; மங்கும் காலத்தே மாங்காய் நயக்கும்.

பொங்கும் காலம் புளி பூக்கும்; மங்கும் காலம் மாங்காய் காய்க்கும்.

பொங்கும் காலம் புளி, மங்கும் காலம் மாங்காய்.

பொங்கும் சனி; மங்கும் சனி.

பொட்டி முறித்த பயனுக்குச் சட்டையும் தலைபாகையும்பார். 17370


பொட்டு இல்லா நெற்றி பாழ்.

பொட்டும் பொடியும் தட்டும் சவலையும்.



பொட்டைக் கண்ணுக்கு இரட்டைத் தீவட்டி.

பொட்டைக் குதிரைக்கு இரட்டைத் தீவட்டியசம்.

பொட்டைக்குப் பெண் கொடுத்துப் பார்; அந்த வேலையில் தப்பு இருந்தால் கேள். 17375


பொட்டைச்சி படித்துச் சட்டிதானே சுரண்ட வேணும்?

பொட்டைச்சியை முன் தள்ளிப் பொரி உருண்டை வாய் இது என்பான்.

(உண்ட வாய்.)

பொட்டைத் தான்சு.

பொட்டை நாய்க்கு அப்பம் கிடைத்தது போல.

பொட்டை நாய்க்குத் தட்டுக் கூடை மறைப்பு. 17380


பொட்டை நெட்டுரு.

பொட்டையன் பெண்டாட்டியைத் தட்டுகிற மாதிரி,

பொடிச் சூட்டுக்கு ஆற்ற மாட்டாமல் நெருப்பில் குதித்தானாம்.

பொடிப் பயல் நொடிப் பொழுதில் செய்வான்.

பொடி மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை. 17385


பொத்தான் பொதுவில் கொடுத்துச் செத்தான்.

பொத்தைச் சுரைக்காய் போல இருக்கிறான்.

பொத்தைப் பலாப் பழத்தைகி கீறி விட்டான் சந்தியிலே,

பொத்தைப் பூசணிக்காய் போல இருக்கிறான்.

பொதிக்கு அளக்கிறதுக்கு முன்னே சத்தத்துக்கு அளக்கிறதா? 17390

(சத்திரத்துக்கு.)


பொதி பொதியாய்ப் பூசணிக்காய் போகிறது; கடுகு போகிற இடத்தை ஆய்கிறான்.

பொதியை வைத்துவிட்டுப் பிச்சைக்குப் போனான்; அதையும் வைத்துவிட்டுச் செத்துக் கிடந்தான்.

பொதுவிலே அகமுடையான் புழுத்துச் செதிதானாம்.

பொதுவிலே மாமியார் புழுத்துச் செத்தாளாம்.

பொத்த மூஞ்சி ராயரே, எந்த மாசம் கல்யாணம்; காயும் கறியும்

உண்டானால் கார்த்திகை மாசம் கல்யாணம், 17395


பெசந்தியோடே கைலாசம் சேர்வாய்,

பொந்தில் அகப்பட்ட மந்தியைப் போல.



பொந்தில் இருக்கிற பூசணிக்காய் போகிறதைப் பார். அங்கு இரண்டு போடு போட்டு வருகிறதைப் பார்.

(பொந்தில் விழுந்து. மொத்துப் போட்டு.)

பொந்து ஆயிரம்; புளி ஆயிரம்.

(ஆழ்வார் திருநகரியில் ஆயிரம் வருஷம்.)

பொத்தைச் சுரைக்காயைப் போல. 17400


பொம்மை கோபுரத்தைத் தாங்குமா?

பொய்யான பொருள் ஆசை மெய்யான அருளாசையை விலக்குகிறது.

பொய் இருந்து புலம்பும்; மெய் இருந்து விழிக்கும்.

(கிடந்து புலம்பும் கிடந்து தவிக்கும்.)

பொய் ஒழுக்கத்தார்க்கே பொருல் சேரும்.

பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை; மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை. 17405


பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது.

(அகப்படாது.)

பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது.

பொய் சொன்ன வாயோ பொரி தின்ற வாயோ.

(வாயும்.}

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேணும்.

பொய் நின்று மெய்யே வெல்லும். 17410


பொய் பூரணச் சந்திரன், மெய் மூன்றாம் பிறை.

பொய் பூரணம்: மெய் இறை.

பொய் முன்னே மெய் நிற்குமா?

பொய் மெய்யை வெல்லுமா?

பொய்யாருக்குப் பொய் உரைத்தால் வெற்றியாம். 17415


பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது

பொய்யுடை ஒருவன சொல் வன்மையினால் மெய்போலும்மே - மெய்போலுமமே.

பொய்யும் ஒரு பக்கம்: பொருளாசையும் ஒரு பக்கம்.

பொய்யும் மெய்யும் நீளத் தரும்.

(தெரியும்.)

பொய்யும் மெய்யும் போக்கிலே வெளிப்படும். 17420


பொரித்துக் கொட்டிாைலும் அசைத்துக் கொட்டாதே.


பொரி மாவை மெச்சினாளாம், பொக்கை வாய்ச்சி.

(மெச்சினாராம்... வாயர்.)

பொருந்திய ஒழுக்கம் திருந்திய செல்வம்.

பொருள் ஆசையும் மனச்சாட்சியும் பொருந்துமா?

பொருள் இல்லார்க்கு அருளும் இல்லை. 17425


பொருள் இல்லார்க்கு இல்வுலகம் இல்லை; அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.

பொருள் இல்லார்க்குப் பூலோகம் இல்லை.

பொருள் உள்ளோர்க்குப் பூலோகம் உண்டு; அருள் இல்லோர்க்கு அந்த லோகம் உண்டு.

பொருள்தனைப் போற்றுவான்.

(போற்றிவாழ்)

பொருள் போன வழியே துக்கம் போம். 17430


பொருளும் கொடுத்துப் பழியும் தேடுவதா?

பொருளும் போகமும் கூடவரா: புண்ணியமே கூட வரும்.

பொருளை இச்சித்துப் புது மண்டபத்தை இடிப்பது போல.

(பொது மண்டபத்தை, )

பொருளைப் போட்ட இடத்தில் தேடு.

பொவலாக் குணத்துககுப் பூமியில் மருந்து இல்லை. 17435


பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.

பொல்லாத காலத்துக்குப் புடைவையும் பாம்பு ஆகும்.

பொல்லாத காலம் சொலலாது வந்தது.

(வரும்.)

பொல்லாத காலம் சொல்லாமல் வரும் புரட்டாசியிலே,

பொல்லாத குணத்துக்கு நல்ல மருந்து உண்டா? 17440


பொல்லாத மனம் புத்தி கேளாது.

பொல்லாதவர்கள் சங்காத்தம் உப்பு மணலில் விழுந்த நீர்போல.

(உப்பு மண்ணில்.)

பெல்லாதவர்கள் சினப்பட்டால் கல்லின் பிளவு போல ராசியாக மாட்டார்கள்.

பொல்லாத வேளைக்குப் புழுவும் சாரைப் பாம்பு.

பொல்லாதது எனபது பொய் உடல். 17445


பொல்லாப் பிள்ளை இல்லயப் பிள்ளை.

பொல்லாப் பெண்ணுக்கு எல்லாம் துக்கிரி.




பொழுதாலம்குடிக்கு வேறு போக வேணுமா?

(சில வீடுகளே உள்ள ஊர். எப்போது வேண்டுமானாலும் திருடலாம்.)

பொழுது பட்ட இடம். விடுதி விட்ட இடம்.

பொழுது விடிந்தது; பாவம் தொலைந்தது. 17450


பொழுது விடிந்ததே நாராயணா, போட்டுக் கொள்ள வேணுமே நாராயணா.

பொழுது விடியுந்தனையும் மழை பெய்தாலும் கோட்டாங்கிளிஞ்சல் முனையாது.

பொழுது விடியுந்தனையும் இடித்தாலும் புழுக்கைக்கு ஒரு கொழுக்கட்டை.

பொற்கலம் ஒலிக்காது; வெண்கலம் ஒலிக்கும்.

பொற்காப்புக்கு ஆசைப்பட்டுப புலியின் கையில் அகப்பட்டது போல. 17455


பொற்குடத்துக்குப் பொட்டு இட்டது போல.

பொற்குடத்துக்குப் பொட்டு இட்டுய பார்க்க வேண்டுமா?

பொற்குடம் உடைந்தால் பொன்னாகும்; மட்குடம் உடைந்தால் என்ன ஆகும்?

பொற்கொல்லன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் பொன்.

பொற் பூ மணக்குமா? 17460

(வாசிக்குமா?)


பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி.

பொறாதவன் கையில் புண.

பொறாதவன் நெஞ்சிலே கொள்ளிக்கட்டையால் சுட வேண்டும்.

பொறியைத் தட்டடா புத்தி கெட்ட ஆசாரி.

(பகைவனைப் பொறியில் அகப்படுத்த.)

பொறி வென்றவனே அறிவின குகுவாம். 17465


பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.

பொறுக்கிப் பயலுடன் சிறுக்கிக்கு என்ன பேச்சு?

பொறுக்கியிலும் பொறுக்கி பொன்னம் பலப் பொறுக்கி,

பொறுககுத் தினனும நாய்க்கு முறுக்கும் திருப்பும் அதிகம்.

பொறுக்கு விதையால் அடுக்கடுகைாய் மணி பிடிக்கும். 17470


பொறுதல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.

(போகப் போக.)

பொறுததால் அரசு ஆள்வார். பொங்கினால கடு ஆள்வார்.

(பொறுத்தவர்-பொங்கினவர்.பூமி ஆள்வார். பொறாாைம்.)




பொறுத்தார் பூமி ஆவிவார். பொங்கினவர் காடு ஆள்வார்.

பொறுத்தான் பொறுத்தான் என்று போகிறவன் குட்டுகிறதா?

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தானாம்; வெட்கம் இன்றிக் கேட்டானாம். 17475


பொறுமைக்குப் பூமிதேவி.

பொறுமை கடலினும் பெரிது.

பொறுமை தன்னையும் எதிரியையும் காக்கும்.

பொறுமை புகழ் தரும்.

பொறுமை புண்ணியத்துக்கு வேர்; பொருளாசை பாவத்துக்கு வேர். 17480


பொறுமை பூமி ஆளும்.

பொறுமை பெருமைக்கு அழகு

பொறுமையில் சிறந்தவள் பூமாதேவி.

பொறுமை பூஷணம்.

பொன் அகப்பட்டால் பொன் முடியத் துணி அகப்படாதா? 17485


பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது.

பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

பொன் இடப் பொன் இடப் பெண் அழகு, மண் இட மண் இட மாடம் அழகு.

பொன் இடப் பொன் இடப் பெண்ணும் சிறக்கும்; மன் இட மண் இடச் சுவரும் சிறக்கும்.

பொன் இரவல் உண்டு; பூவை இரவல் உண்டா? 17490


பொலி உருகக் காயும், மண் உருகப் பெய்யும் புண்ணியப் புரட்டசி.

(மணவாளர் புரட்டாசி. }

பொன் உள்ள இடம் மின்னும், பூ உள்ள இடம் மணக்கும்.

பொன் ஊசி எனறால் கண்ணைக குத்திக் கொள்ளலாமா?

பொன் என்றால் பிணமும் வாய் திறக்கும்.

(கொட்டாவி விடும்.)

பொன் ஒன்று பணிகள் பல. 17495


பொன் கத்தி என்று கழுத்தை அறுத்துக் கொள்ளலாமா?

(மார்பில் குத்திக் கொள்ளலாமா?)

பொன் கலம் ஆகிலும் மண் சுவர் வேண்டும்.

பொன் களங்கபபட்டால் புடம் போடலாம்; பெண் களங்கப்பட்டால் என்ன செய்வது?




பொன் கறுத்தால் மாற்றுக் குறையுமா?

பொன் காத்த பூதம் போல. 17500


பொன் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்டதுபோல.

பொன் காய்த்த மரம் போல இருக்கிறான்.

பொன் கிடைத்தால் பொன் முடியத் துணி கிடையாதா?

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.

பொன் குடத்துக்குப் பொட்டு இட்டுப் பார்த்தது போல. 17505


பொன் குடம் உடைத்தால் பொன்; மண் குடம் உடைத்தால் மண்.

பொன் குருவி போலப் பொருந்தி வாழ வேண்டும்.

பொன் குருவி போன இடம் போதனுக்கும் தெரியாது.

பொன் கோடி கிடைத்தாலும் புதவி கோடி கிடைக்காது.

பொன் சுட்டு ஆறுவது போல. 17510


பொன் செருப்பு ஆனாலும் காலுக்குத்தான் போடவேண்டும்.

பொன் போல் இயங்கும் குணம் சஞ்சலத்தால் குரங்காகும்.

பொன் மணி அற்றவளை அம்மணி என்பானேன்?

பொன் மலர் நாற்றம் பெற்றது போல.

பொன் முடி அல்லது சடை முடி வேண்டும். 17515


பொன் முடிந்த துணிக்கும் புத்திரனுக்கும் தீட்டு இல்லை.

பொன் விலங்கு ஆனாலும் விலங்குதானே?

பொன் விளக்கு ஆனாலும் தூண்டுகோல் வேண்டும்.

பொன் வைக்கிற இடத்தில் பூவாவது வைக்க வேண்டும்.

(பூ வைக்கிறது)

பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு. 17520


பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடைக்காது?

பொன்னாங்கண்ணிக்கு புளி இட்டு ஆக்கினால் உண்ணாப்

பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.

பொன்னாங்கண்ணிக்குப் புளி இட்டு ஆக்கினால் உள்நாக்கு எல்லாம் தித்திக்கும்.

பொன்னாங்கன்ணிக்குப் புளி குத்தி ஆக்கினால்

அண்ணாமலையாகம் தொண்ணாந்து நிற்பார்.

(பொன்னாங்கண்ணிக் கீரைக்கு)

பொன்னால் பிரயோசனம் பொன்படைத்தார்க்கு உண்டு. 17525

(பட்டினத்தார் பாடல் )


பொன்னாலே கத்தி என்றால் வயிற்றில் குத்திக் கொள்ள முடியுமா?

பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும்,

பொன்னாலே பொரித்துத் தங்கத்தாலே தாளிக்கிறாளாம்.

பொன்னான மகள் ஆனாலும் மண்ணாலே ஒரு மாமியார் வேண்டும்.

(பெண் மருமகள்)

பொன்னான மனத்தைப் புண் ஆக்குகிறான். 17530

(ஆக்காதே)


பொன்னான வாயாலே பூத் தருகிறேன் என்றதே போதும்.

பொன்னி பூ முடிப்பதற்குள் பூங்காடே விளாங்காடு ஆச்சாம்.

பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போச்சுதாம். வரகுச் செருக்கு வரகு பட்டதாம்.

பொன்னின் குடத்துக்குப் பொட்டு இட வேண்டுமா?

பொன்னின் குடம் உடைத்தால் என்ன ஆகும்; மண்ணில் குடம் உடைத்தால் என்ன ஆகும்? 17535


பென்னின் குணம் போமா? பூவின் குணம் போமா?

பொன்னுக்குப் பொடியாய்ப் போச்சுது.

பொன்னுக்குப் பொன்னும் இழந்து போக சுகமும் இழந்தது போல.

பொன்னும் இரும்பும் ஆன விலங்குகள் போல.

பொன்னும் தெரியாது; பொன் முடிந்த துணியும் தெரியாது. 175400


பொன்னும் பத்தாய் இருக்க வேணும்; பொண்ணும் முத்தாய் இருக்க வேணும்.

பொன்னை எரிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?

பொன்னையும் புடைவையையும் நீக்கிடில் பெண் மலக்கூடு.

பொன்னை விற்றுத் தின்னு: மண்ணை வைத்துத் தின்னு.

பொன்னை வைக்கிற கோவிலில் பூவையாவது வைக்கவேணும். 17545

(வைக்கிற இடத்தில்.)
போ


பேசக்கணம் கெட்ட முயல் பொந்திலே நுழைந்தாற் போல.

போக்கணம் கெட்டவன் போலீஸ்; நாலும் கெட்டவன் நார்மல் ஸ்கூல்; சாகத் துணிந்தவன் சர்வே.

போக்கணம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன்.

போக்கனுக்குப் போவதே வழி.

போக்கிரிக்கு ஏற்ற சாக்கிரி. 17550


போக்கிரிக்கு ஏற்றது போலீஸ் வேலை.

போக்கிரிக்குப் போக்கிரி வேண்டும்.

போக்கிரிக்கு முதல் தாம்பூலம்.

போக்கிரித் தனத்துக்கு முதல் தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

போக்கு அற்ற நாய்க்குப் போனது எல்லாம் வழி, 17555


போக்கு அற்ற மத்தளம் கொட்டினதாம்; பூண்டித் தெய்வம் வந்து ஆடினதாம்.

போக்கு அற்றால் புலி ஆள்மேலே பாயும்.

போக்கு அற்றாள் நீக்கு அற்றான்; பொழுது விடிந்து கந்தை அற்றாள்.

போக்கு இடம் கெட்ட முயல் பொத்திலே நுழைந்தாற் போல.

போக்கு இடம் கெட்ட மூளிக்கு மூக்கின் மேலே கோபம். 17560

(மூக்கிலே.)


போக்கு இடம் கெட்டவன் ஊருக்குப் பெரியவன்.

போக்கு இடம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன்.

போக்குச் சாதம்,

போக்கு நீக்கு இல்லாமல் புத்திக்குச் சரிப்பட்டபடி பேசுகிறது.

போக்கும் இல்லை; புனலும் இல்லை; முறுக்கிப் பிடிக்க மீசை உண்டு. 17565


போக்கு விடாமல் இருந்தால் நடுமடிை எடுக்கும்.

போகப் போகத் தெரியும் புதுக் கணக்கன் வாழ்வு.

போகப் போகத் தெரியும் பொய்யும் மெய்யும்.




போகமும் புவனமும் பொருந்தும் இடம் எங்கும் தேசகரணம் திரியும்.

போகமும் உடன் உண்டு பொன்னையும் கைக் கொள்ளும் மாதர். 17570


போகாத இடத்தில போனால் வராத சொட்டு வரும்.

(வராத தெல்லாம்.)

போகாத ஊருக்கு வழி ஏன்?

(கேட்கிறது போல, சொல்கிறது போல்.)

போகாத ஊருக்கு வழியும் காராமணிக்குக் களையும்.

போகிற பிசாசு கல்லைத் தூக்கிப் போட்டுப் போயிற்றாம்.

போகிற போது பொறி தட்டினது போல. 17575


போகிறவன் எப்போதும் போவான்.

போகிறவன் பொன்னைத் தின்றால் இருக்கிறவன் இரும்பைத் தின்பானா?

போகிறேன். போகிறேன் என்று பொரியரிசியை மாள வைத்தானாம்.

போசனம் கொஞ்சம் ஆனாலும் ஆசனம் பெரிது.

போசனம் சிறுத்தாலும் ஆசனம் கொடுக்க வேண்டும். 17580


போஞ்ச கொள்ளி புறத்தே.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

போட்ட இடத்தில் தேட வேண்டும்.

போட்டது போட்டபடி,

போட்டால் நெல்; போடா விட்டால் புல்.

போட்டால் முளைக்கும்; பொழுது விடிந்தால் காய்க்கும், 17585


போடு காலில் தேடிப் போடு.

போடு தோப்புக்கரணம் என்றால் எண்ணிக் கொள் என்றானாம்.

போத்தி பிறந்த புதன் கிழமை.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

போதகர் சொல்லைத் தட்டாதே; பாதகர் இல்லைக் கிட்டாதே.

போதருக்கே சோதனை மிஞ்சும். 17590

(போதகருக்கு.)


போதனை பெரிதோ? சாதனை பெரிதோ?

போதாக் குறைக்குப் பொன்னியும் வந்தாள்.

(திரண்டாள்.)




போதாத காலத்துக்குப் பழுதையும் பாம்பு ஆகும்.

போதாத காலத்துக்குப் புக்ககத்து அத்தை வந்தாளாம்.

போதாத காலத்துக்குப் புடலங்காயும் பாம்பாய்ப் பிடுங்கும். 17595


போதுக்கும் பாட்டுக்கும் சரி.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

போதும் போதாததற்குப் புக்ககத்து அத்தையும் வந்தாளாம்.

போம் பழி எல்லாம் அமணன் தலையோடே.

போய் ஒரு கோபத்தால் கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம்

வந்தாலும் அப்பால் எழுந்திருக்கலாமா? 17600


போயும் வந்தும் பொன்னம்பலம்: திரும்பி வந்தும் திருவம்பலம்.

போர் அடிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா?

போர் இட்ட வீடு நீறு இட்டபின்.

போர் இட்ட வீடு பொடி பட்டு வேகும்.

போர் சுட்டுப் பொரி பொறுக்கி. 17605


போர்த்துக் கொண்டவர்களைக் காக்கும் போக்கணம் கெட்ட குளிர்.

(காத்திருக்கும்.)

போர்த்தொழில் புரியேல்.

போர் பிடுங்குகிறவன் சாகுகிறவனை மிரட்டின கதை,

போர் பிடுங்குகிறவன் பூசக்களம் சாகுகிறவனை மருட்டுகிறானாம்.

போர் மிதிக்கிற மாடு வைக்கோல் தின்னாதா? 17610


போரில் ஊசி தேடின சம்பந்தம்.

போரில் குதிரை நடவாவிடின் வீரர் பறப்பார்,

போருக்கு அஞ்சுவார் என்மேல் படுத்துக் கொள்ளுங்கள்.

போரைக் கட்டி வைத்துப் போட்டுப் பிச்சைக்குப் போவானேன்?

போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கிப் போட்டுக் கட்டுமா? 17615


போலிக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம்; அதைத் தூக்கிக் கண்ணில் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்

(வேலைக்கு.)

போலிக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம்; அதைப் பொழுது

விடியுமட்டும் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்,

(போலைக்கு.)

போலி நாரி வாடி, காடி மேல் ஏறடி.

(போலை)


போலி பொறுக்கப் போனால் பூனை குறுக்கே போச்சாம்.

(போலை)

போலீஸ்காரன் கையில் சிக்கின மோட்டாரும் செக்குக்காரன் கையில் சிக்கிய மாடும். 17620


போவதும் வருவதும் மோட்டார் வண்டி; பொங்கிதி தின்பது புது மண் சட்டி.

போனார் அடி பொல்லாதடி; வீட்டிலே போய்ச் சொல்லாதடி.

போன அன்றைக்குப் போய்ப் புதன் அன்றைக்கு வா.

போன இடத்தில் புல்லும் முளைக்காது.

போன இடம் புல் முளைத்துப் போயிற்று. 17625


போன கண்ணையும் கொடுக்குமாம் பொன்னாங்காணி,

போன சனியன் பேசச்சு என்று இருந்தேன்; பொந்துக்குள் இருந்து கீச்சுக் கீச்சு என்றது.

(மயிருக்குள் இருந்து)

போன சனியனைத் தாம்பூலம் வைத்து அழைத்தது போல, போன சுரத்தைப் புளியிட்டு அழைத்தது போல.

போன தினம் போகப் புதன் அன்றைக்கு வந்தான், 17630

(போன அன்றைக்குப் போய்)


போனது என்ன ஆனாலும் புத்திக் கொள்முதல். போனது போச்கது;

பொழுது விடிந்தது. போனது போல வந்தானாம் புது மாப்பிள்ளை.

போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

(இல்லாதவன்)

போன மச்சா. திரும்பி வந்தான் பூமணத்தோடே. 176Յ5


போன மாட்டைத் தேடுவாரும் இல்லை; மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.

போன மாட்டிைத் தேடுவாரும் இல்லை; வந்த மாட்டைக் கட்டுவாரும் இல்லை.

போன முதல் பெரிய முதல்.

போன முயல் பெரு முயல்.

போனவன் உடைமை இருந்தவனது. 17640


போனவன் போனான்: இருந்தவன் வாழ்ந்தான்.

போனால் போன இடம்; வந்தால் வந்த இடம்.

போனால் மயிர் போச்சு.

போனால் வராது; பொழுது போனால் நிற்காது.

போனாற்போல் வந்தாள் புதுமாப்பிள்ளை. 17645

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_4/பெ&oldid=1161591" இலிருந்து மீள்விக்கப்பட்டது