தாவோ - ஆண் பெண் அன்புறவு/நிறைவு - குறைவு

விக்கிமூலம் இலிருந்து


நிறைவு / குறைவு
155. எது இல்லையோ அதை அறிக

பிறப்பிற்கு முன்னால் இருந்த வெறுமை இறப்பு வரை வாழ்க்கையைத் தொடர்கிறது. இதனிடையே முழுமையைப் பெறுகிறது

ஒவ்வோர் ஆணிடமும், பெண்ணிடமும் எங்கேயோ ஓர் இடத்தில் மற்றவரின் முழுமையைப் பெறுகின்ற வெறுமை உள்ளது

உள்ளதைப் பெறுகையில், எது இல்லையோ அதனை அறிக

வெறுமையை உணர்ந்தபின் அசைவின்மையை அறி, அது அசைவையும் மாறுதலையும் மனத்தில ஏற்றுக் கொள்

156. வெறுமையை நினைவு கொள்

ஆணாகப், பெண்ணுடன் மனமகிழ்வுடன் இரு பெண்ணாக ஆணுடன் நிறை மகிழ்வுடன் இரு சிந்தனையாளாகச் சிந்தனைகளுடன் நிரம்பி இரு ஆனால் வெறுமையை மறவாதே

வியப்புக்கேதுவான நமது ‘நாம’ ‘தான்’ என்பதுடன் முழுமையாக நிரப்பும் போது, வெறுமையை நினைவு கொள். வெறுமைதான் காதலர்களையும், நம்மையும் எல்லாவற்றையுமே சூழ்ந்து கொள்கிறது

வெறுமையிலிருந்து தான் முழுமை உருவாகிறது வெறுமை இல்லையேல் முழுமையும் இல்லை.

வெறுமையிலிருந்துதான் எல்லாமே உருவாகிறது இதில்தான் எல்லாமே திரும்பி வருகின்றன

157. வெறுமையிலிருந்து தொடங்கு

மனத்தின் எண்ணங்களால் உருவான சொற்களும், கருத்துகளும்தான் ஆண், பெண் மனம் கண்டு பிடிப்பதைத்தான் எண்ணங்கள் உறுதி செய்கின்றன ஆனால் மனத்தின் புரிந்து கொள்ளும் திறன் தாங்க முடியாத அளவில் சிந்தனைகளுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று ஆண், பெண் இருவரிடையே உள்ளது.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ளதைத் தாங்க, வெறுமையிலிருந்து தொடங்கு. இழப்பினால், கண்டு பிடிக்கலாம். வெறுமையாக்குவதால நிரப்புதல் உண்டு. எல்லாவற்றையும் தாங்கும் உருவம்தான் வெறுமை.

நீரில் மீன் நீந்துவது போல, வானில் பறவைகள் பறப்பது போல, மனம் வெறுமையினுள் எண்ணுகிறது

எல்லாவற்றையும் மற. எண்ணிச் சமன் செய்ய எந்த எண்ணமும் இல்லாது, மனம் உருவமின்றி, வெறுமையாக இருக்கட்டும். கடல் மீனை நீந்த அனுமதிப்பது போல, காற்று முகில்களை இயங்கச் செய்வது போல..

மனத்திற்கப்பால் வழக்கமான வெறுமை மனதிற்குள் வழக்கமான முழுமை.

158. ஆற்றினை வற்றச் செய்யாத போது

ஆறு கடலில் கலந்தாலும், கடல் நிரம்புவதில்லை, ஆறும் வற்றுவதில்லை.

ஓடும் தண்ணீர் ஆற்றினை வற்றச் செய்யாத போது அங்கு வெறுமை என்பது ஏது? ஆற்று நீர் கடலை நிரப்பாத போது, வெற்றிடம் எப்படி உருவாகும்?

சொற்கள் எனும் ஆற்றினுள்ளும், எண்ணங்கள் என்ற கடலினுள்ளும், பெயரிட முடியாது ஏதோ ஒன்று உள்ளது. எல்லா எண்ணங்களும் வெறுமையாகி நிலையான ஏதோ ஒன்றை நிரப்புகிறது

ஒருவருக்கொருவருள் பாய்ந்து, ஒருவரை ஒருவர் பெற்றுக் கொள்ளும் ஆணுக்கும், பெண்ணுக்கும் நிரப்புதல், வெறுமையாக்கல் என்ற நிலையான எண்ணத்தில் எவ்வளவு உள்ளது

வெற்றிடத்தை நோக்கி ஓடும் ஆற்றைப் போல, முழுமையாகப் பெறும் கடல் போல, ஆணும் பெண்ணும் முடிவில்லாத வெறுமையுறுவது, நிரப்புதல் ஆகியவற்றை நம்பி ஒருவரை ஒருவர் அடைகின்றனர்

பெறுவது என்பது வெறுமையாக்குவதும், முழுமையடைவதும், நிரப்புதல் என்பது முழுமை யாக்குதலும் வெறுமையாக்கலும்.

159. வெற்றிடத்தை வெறுமை செய்

இலை இலையாக இருக்கும் போது மரத்தை, அறிந்து கொள்ள முடியாது மீன், அதாக இருக்கும் போது கடலை அறியாது. ஆண் ஆணாக இருக்கும் போது எவ்வாறு பெண்ணை அறிவான்? இது போலவே பெண், பெண்ணாக இருக்கும் போது எவ்வாறு ஆணை அறிந்து கொள்ள முடியும்?

ஒவ்வொன்றின் வெளிப்புறத்திலும் வெற்றிடம் உள்ளது. இதுதான் அடைந்து நிரப்பி, புரிந்து கொள்கிறது

ஆணாக இருந்து ஆணைக் காணாதே. பெண்ணாக இருந்து பெண்ணைக் காணாதே. மென்மையாக இரு ‘இயற்கை'யை நம்பு, ஆணையும் பெண்ணையும் விட்டுவடு வெற்றிடத்தை வெறுமை செய்.
160. இருப்பதும் இல்லாததும்

முழுமை என்பது ஆண் வெற்றிடமாக இல்லாதது பெண். இருப்பதும், இல்லாததும் முழுமையைச் சமமாகச் செய்கின்றன.

ஆண்மை என்பது உருவமானது. முழுமையானது. காணக் கூடியது. காண்பிக்கப்படுவது, வெளிப்படுத்தப் படுவது அவன் பேசப்படுபவன், தெளிவாகத் தெரிபவன். வினா இல்லாமலேயே உள்ள விடை

பெண்மை என்பது உருவமற்றது. வெற்றிடம், புலப்படாதது, மறைக்கப்பட்ட ஒன்று அவள் பேசப்படாதவள். கமுக்கமானவள், மறைபுதிரானவள், விடை இல்லாத முதல் வினா!

161. உள்ளதும் இல்லாததும்

எது உள்ளதோ, அது இருக்கிறது எது இல்லையோ அதுவும் இருக்கிறது

ஆணின் வெறுமை வெளியில் உள்ளது. விலக்கப் பட்டது. அப்பாற்பட்டது. மறந்த ஒன்று. பெண்ணின் வெறுமை உள்ளே உளது. நினைவில் வைக்கப்பட்ட ஒன்று.

இருக்கிறது. இல்லை என்ற இரண்டையும் நினைவு படுத்துபவள் பெண் இல்லை என்பதை நினைவு படுத்தும் அவன் எளிதாக மறக்கப்படுகிறான்

162 வெறுமையைச் சுமக்கும் முழுமை

பெண் ஆணுடன் எலும்புகளையும், தசையையும் பங்கிட்டுக் கொள்கிறாள். ஆனால் அவள் பெண் அவள் நகரும் வெற்றிடம், காத்திருக்கும் நகருபவள், ஆணினால் நிரப்பப்பட வேண்டிய வெற்றிடம்.

அவள் தான், நிலம், தோட்டம், தாய், மூலகாரணம், வெற்றிடம், மறைபுதிர். இருக்கிறது. இல்லை என்பதன் நகரும் காத்திருக்கும் புதிர், அவள் தான் பெண்.

பெரிய வெற்றிடத்தில் வெறுமையைச் சுமந்து செல்லும் முழுமைதான் பெண்.

163. முழுமை வேட்கைப்படுகிறது

நிரப்புவதை ஏற்பவள் பெண், பெறுவதை நிரப்புவது ஆண். ஆதலால் வெற்றிடம் நிரப்பப்பட்டுத் திரும்ப நிரப்பப்படுகிறது முழுமை திரும்பத் திரும்ப வெறுமையாக்கப்படுகிறது

முழுமை நிரப்ப வேட்கைப்படுகிறது. வெறுமை வெறுமையாக்க வேட்கிறது.

164. வெற்றிடம் உள்ளதால்

ஆணும் பெண்ணும் வெற்றிடத்தில் கூடி வளர்ந்து, அதிலேயே நிரப்பப்படுகின்றனர்

வெற்றிடம் உள்ளதால், ஏற்கப்படுகிறது. ஏற்கப் படுவதால், கொடுக்கப்படுகிறது. கொடுக்கப்படுவதால், முழுமையும் உள்ளது. வெறுமையில் முழுமையும் ஏற்படுகிறது வெற்றிடத்தை அறிய முழுமை ஒரு வழி.

பெண்ணின் முழுமையை உணர, அவளது வெறுமையால் ஏற்கப்படுகிறாய். வெறுமையால் உருவகப்பட்டு, அவள் மறைந்த அறிவின் மூலமாகவும். காப்பாளராகவும் உள்ளாள்.

வெறுமையைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்து காண முடியாததைச் செயலாட்சி செய், நிரப்ப முடியாததை நிரப்பு, வெறுமையை இடைவெளியில்லாமல் செய்.

165. பெண்மையின் வெற்றிடம்

மிக வலுமான தசைநார்களை வளைக்க முடியும், கடினமான கல்லை உடைக்க முடியும். ஆனால் பெண்ணின் வெறுமை எவ்வளவு வெல்ல முடியாததாய் இருக்கிறது! இல்லாத பெண்மையை இருக்கும் ஆண்மை எவ்வாறு வெல்ல முடியும்? வெற்றிடத்தை விட மிகப் பெரியது எது?

166. எப்பொழுது காத்திருக்கிறது

ஆண் அணியமாயில்லாத போது காதலனாக . இருக்க முடியாது. அவனது முழுமையும் நிறைந்திருக்க வேண்டும். ஆனால் பெண்ணின் வெற்றிடம் எப்போதும் காத்திருக்கிறது.

167. வெறுமையைச் சுற்றி

வெற்றிடத்தைச் சுற்றியுள்ள பெண்மையின் உடல் தான் பெண். ஆணினால் தேடப்பட்டு நிரப்பப்படும் வெறுமையை விளக்குகிறவள்தான் பெண்.

பெண்ணையையே எண்ணிக் கொண்டிருக்கும் மாந்தன் வெறுமையை நினைவில் வைத்து பெண்ணை மறந்து விடுகிறான். கோவிலை மேன்மைப்படுத்த வேண்டும் என்பதுதான் புனிதமான இடத்தின் தேவை

ஆண், பெண் இருவரின் எண்ணத்திற்கப்பால், ஆண் - பெண் இருவரது எண்ணமற்ற நிலை இந்நிலைக்குப் பெண் ஆணை மறக்கும் போது மட்டும். ஆண் பெண்ணை மறக்கலாம்.

168. நிலத்தின் உடல்

நீரின் உடன்பாட்டின் அடிப்படையில்தான் பாறையின் திடமும், காற்றின் மென்மையில்தான்
நானிலத்தின் எடையும் தெரிய வருகிறது. ஆணின் முழுமை பெண்ணின் வெற்றிடத்தில் நுழையும் போது, அவளது வெற்றிடம் ஆணின் முழுமையை வரவேற்கும் போது என்ன தெரிகிறது.

நிலத்தின் உடலும், காற்றின் மூச்சும் நிலம் என்பது பெண்ணின் தசையும், ஆணின் எலும்புமாகும். நகரும் ஆணும், வெறுமையான பெண்ணும் காற்று.

இங்கில்லாவிடில், வேறு எங்கே இயற்கை நெறி இயங்குகிறது

169. உயிர்த்தலை ஒப்புக் கொள்

விருப்பார்வம் அடங்கியதும், அது மீண்டும் அடங்கக் கிளர்ந்தெழுகிறது. உயிருள்ள உடல் போல, அது வெறுமையாக்க நிரம்பியும், மறுபடியும் வெறுமையாக்க நிரம்புகிறது.

வெறுமையாக்கத் தொடக்கமே நிரம்பவும், நிரம்பத் தொடங்க வெறுமையாக்கவும் எவ்வளவு பண்பமைதி மிக்கது.

உயிர்த்தலை ஒப்புக் கொள். இக்கணமே விடுவி, அடுத்ததை ஏற்றுக் கொள்... முயற்சியில்லாமலேயே.

மூச்சை அடக்கும் போது, வானம் நொறுங்குகிறது, விண்மீன்கள் உடைகின்றன. மூச்சுவிடும் நிலம் கடினமாகிறது.

170. மூச்சுவிடும் இயற்கை போல

இணைந்திருக்கும் காதலர்கள் அலைகள் போல, பருவ காலங்கள் போல, தலைமுறையினர் போல ஒரே ஒத்திசைவில் நகருகின்றனர். அவர்கள் நிரப்பியும், வெறுமையாக்கியும் மூச்சு விடும் ‘இயற்கை’ போல உள்ளனர்.

நிரப்புவது வெறுமையாகிறது. வெறுமையாவது நிரம்புகிறது ஒவ்வொன்றும் அடுத்தது என்ன என்பதை உணர ஒன்றை ஒன்று தொடர்கின்றது.

எல்லாமே அசைகின்றன. எல்லாமே மாறுகின்றன, மாறும் இயற்கையைத் தவிர.

171. அவ் வகைக் கடலில்

ஆண் கூறுகிறான் : “எனக்குப் பெண்ணைக் கொடு, அவளை என் உடலுடன் எடுத்து நிரப்புகிறேன்”.

பெண் சொல்கிறாள் “எனக்கு ஆணைக் கொடு. அவனை என்னுடன் இணைத்து அணைத்துக் கொள்கிறேன்”

முழுமையான ஆண் உலகையே நிரப்புகிறான். வெற்றிடமான பெண் உலகையே சூழ்ந்து கொள்கிறாள்

அவ் வகையான கூடலில் என்ன வெல்லாம் நடக்க வேண்டும்!

172 பணிவு தேவை

ஆண் தனது முழுமையின் வலிமையை இழக்கும் போது, அவன் ஆணாக இருப்பதில்லை பெண் அவளது வெற்றிடத்தின் வேட்கைக் கவர்ச்சியை இழக்கும் போது, பெண்ணாக இருப்பதில்லை

தான் வெறுமையாக்கப்படலாம் என்பதை அறிய ஆணுக்குப் பணிவு தேவை தான் நிரப்பப்படலாம் என்பதை உணரப் பெண்ணுக்குப் பணிவு தேவை

173. சென்று கொண்டிருப்பது தங்குகிறது

ஆணினால் நிறைவு செய்ய முடியாத வெறுமைப் புடவி பெண். பெண் மகிழ்ச்சியுறும் போது, அவன் கற்றுப் பெருமை கொள்ளலாம்தான். ஆனால் அதே சமயம் அவன் வெறுமை அடைகிறான். முன்னிருந்த நிலைக்கே திரும்பி விடுகிறான்.

பெண் மகள் தன்னிடத்தில் நிறுத்திவைத்துக் கொள்ளமுடியாத நிறை பெற்ற உலகமே ஆண் அவன் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் போது அவன் வெறுமை அடைகிறான் அவளும் சற்றுப் பெருமை கொள்ளலாம்தான் முன்பிருந்த நிலைக்கே அவள் திரும்பி விடுகிறாள்

நிறைவு செய்தல், வெறுமையாக்குதல் என்கிற தொடரில் இவ் இரண்டிற்குமிடையேயுள்ள நிலையே நிலைத்து நிற்கிறது என்கிற உண்மையை அறிவால் உணர்கிறான். எனவே அடக்கத்துடன் அவன் தன் பயணத்தைத் தொடருகிறான். “சரி, சரி” என்று போகிற பாங்கை வளர்த்துக் கொள்கிறவன் “இயற்கை நெறியை பின்பற்றுபவனாவான்” இயற்கையின் அறிவுரையைப் பின்பற்றுபவன் தன்னை அலட்டிக் கொள்ளாமல் ‘சரி, சரி’ என்று தன் பயணத்தைத் தொடருகிறான்.

174. காதலரின் சமநிலை

திறமையோ, ஆற்றலோ தேவை இல்லை. வெளிப்படுத்துதல், நம்பிக்கை மட்டும் தான். குழந்தை காதலனாகத் திரும்புகிறது; வெகுளியாக, அணியமாக அச்சத்துடன் ஆவலுடன்.

எல்லாமே வெளிப்படுத்தப்பட்டு, விடுவிக்கப்படும் போது, வெற்றிடம் நிரம்பக், காதலர்கள் சமநிலையில் உள்ளனர்.

'இயற்கைநெறியைத் தாங்க முடியாது. தாங்கு பவருமில்லை

175. உயர்வினும் உயர்வு

கொடுப்பதால் ஆண் பெண்ணை நிரப்பி, அவளது வெற்றிடத்தை வெறுமையாக்குகிறான் எடுத்துக் கொள்வதால் பெண் ஆணை ஏற்றுக் கொண்டு அவனது முழுமையை வெறுமையாக்குகிறாள்

முழுமையை எடுத்தபின் முழுமை எங்கே? நிரப்பிய பின் வெற்றிடம் ஏது?

ஒன்றை நிரப்புவதும், மற்தை வெறுமையாக்குவதும் இரண்டிலும் உள்ள வெற்றிடத்தை நிரப்புவதே ஆகும்

ஆண் பெண்ணின் நிரம்பிய வெற்றிடத்தை நிரப்பும் போது, அவனால் கொடுக்கப்பட்டதைவிட மிகப் பெரியது அது பெண் ஆணின் முழுமையை வெறுமையாக்கி எடுத்துக் கொள்ளும்போது, அது அவளது மிக உயர்ந்த பெற்றுக் கொள்வதாகும்

மிக உயர்ந்ததைவிடச் சிறந்தது எது? மிக உயர்ந்ததைவிட மிகமிக உயர்வானது என எதைக் கூறலாம்?

176. இயற்கையின் உயிர்ப்பு

ஆண், பெண்ணிடம் புகுவதும, பெண் ஆணை எடுத்துக் கொள்வதும் மறைபுதிரானதே வெளிப்புற முழுமை உட்புற வெற்றிடத்தைக் காண்பதும், உட்புற வெறுமை வெளியில் உள்ள முழுமையைக் கண்டு
கொள்வதே மறைபுதிர். ஆண், பெண் இருவரின் மறைபுதிர் முழுமை, வெற்றிடம் இவற்றின் ஒன்றலே ஆதலால் முழுமையோ, வெறுமையோ இல்லை

நிரப்புதல் - வெறுமையாக்குதல் பருவங்களையும் பிறப்பித்தலையும் மூச்சாக்குதல் எல்லாப்பொருளும் இயற்கைநெறியின் மூச்சிழுப்பே.

அந்த மூச்சு என்றால் என்ன? யாராலும் கூறமுடியாது. ஆனால் எல்லா இடத்திலிருக்கும் மூச்சுயிர்ப்பே, ஒவ்வோர் அசைவிலுள்ள மூச்சு

177. தடையும் வாக்குறுதியும்

புத்தியல்பு வாய்ந்தது ஆனால் பொதுவானது. புதுமை வாய்ந்தது ஆனால் மேன்மைப்பட்டது எச்சரிக்கையானது ஆனால் வயப்படுத்தக் கூடியது தடை செய்யப்பட்டது ஆனால் வாக்குறுதி தரப்பட்டது

ஆண் நுழையத் துணிவானா? பெண் துணிவாக ஏற்றுக் கொள்வாளா?

178. ஒரு முடிவில்லாத் தொடக்கம்

உந்தப்பட்ட ஆண் பெண்ணிடம் வெறுமை யாக்குவதால் அவன் வீழ்ச்சி அடைகிறான் பெண் முழுமையில் மலர்கிறாள் அவளது முழுமையில், வெறுமையாக்குவதில் உலகைப் பிறப்பால் முழுமை யாக்குகிறாள். அதே உலகம் இறப்பில் வெறுமையாகிறது. வெறுமை ஆக்குவதால் நிரப்புதலும், நிரப்புதலால் வெறுமை ஆவதும் உண்டாகின்றன. இது ஒரு முடிவில்லாத் தொடக்கம் இதில் இழப்போ ஆக்கமோ இல்லை

பெண் எடுத்துக் கொள்ளல், கொடுத்தல் என்ற சீரான மூச்சில் பெருமையும், சிறுமையும் அடைகிறாள் ஆண் தனது உயிர்ப்பினால் உந்தப்பட்டு அவளது மூச்சில் துணை போகும் ஒருவன்.

179. வெறுமைக்குக் காத்திருத்தல்

தன் முழுமையால் ஆண், பெண்ணை நிறைவு செய்யவில்லை என்றால், அவனுக்காக அவளின் வெறுமை காத்திருக்கின்றது. மீண்டும் அவளை நிறைவு செய்யவில்லை எனில், அவள் நிறைவு செய்யாமையை நினைவூட்டிக் காத்திருப்பாள்

பெண் ஆணை ஏற்றுத் தன் வெறுமையால் அவனை வெறுமையாக்க வில்லையானால், அவள் எப்பொழுதும் முழுமையை எழுப்பக் காத்திருக்கிறாள் மீண்டும் வெறுமையை வெறுமையாக்க வில்லை யானால் அவன் நிறைவு செய்யத் திரும்பவும் காத்திருக்கிறான். வெறுமை மாபெரும் முழுமையின் எழுச்சியை வெல்ல முடியாது.

180. உரிமையான மற்றோர் உடலுடன்

ஓர் உடல் அதனது உரிமையான மற்றொரு உடலுடன் சேர்வதே ஒன்றதுல். ஆணும் பெண்ணுமாகச் சற்றும் சங்கடப்படாமல் பிணைக

ஆண் முழுமை, பெண் அவளது வெற்றிடம், உடல அளவில் மட்டுமே எண்ணி, அவனன் தனது வெற்றிடத்தை அடைந்து தன்னை ஏற்கிறாள்

பெண், வெறுமை, ஆண் அவளது முழுமை உடல் அளவில் எண்ணி, அவள் தனது முழுமைக்குச் சென்று தன்னை நிரப்பிக் கொள்கிறாள்