தாவோ - ஆண் பெண் அன்புறவு

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


தாவோ - ஆண் பெண்
அன்புறவு




- ஆங்கில ஆக்கம் -
இரே கிரிக்கு


தமிழாக்கம்
த. கோவேந்தன்



உலக இலக்கியக் கழகம்

29, திலக் தெரு, தியாகராய நகர்

சென்னை - 600 017.

நூல் விளக்கம்
நூலின் பெயர் : தாவோ - ஆண் பெண் அன்புறவு
ஆசிரியர் : இரே கிரிக்கு - த. கோவேந்தன்
மொழி : தமிழ்
பதிப்பாளர் : த. கோவேந்தன்
பொருள் : வாழ்வியல்
உரிமை : பதிப்பகத்தார்க்கே
முதற்பதிப்பு ; ஆகஸ்ட் -15 - 1998
நூலின் அளவு : 1 x 8 கிரெளன்
எழுத்து : 12 புள்ளி
பக்கம் : 176
கட்டமைப்பு :வல் அட்டை
விலை :ரூ.50/
நூல்வெளியீடு : உலக இலக்கியக் கழகம், சென்னை - 600 017,
ஒளியச்சு : பிஜிபி பெரிஃபெரல் சர்வீசஸ், சென்னை - 33. ☎ 480 0992
Printed at: : Mano Printers, Chennai–600005.



தாவோ - இயற்கை நெறி

நானிலத்தின் வனப்புகள் அனைத்தும் ஞாயிற்றால் பிறந்தவையே, அதைப் போல் மானுடத்தின் மேன்மைகள் எல்லாம் பெண் ஆணால் சிறந்தவையே. வாழ்வின் குறிக்கோளே மானுடத்தை உயர்த்துவது தான் இயற்கையில் நீர் நெருப்பு, காற்று, மண் விண் அனைத்துமே சிறப்புயர்வுடையன. இயங்குதிணை இயங்காத்திணை அத்துணையுமே மானுடத்தின் பல்கலைக் கழகம். மானுடம் என்றும் புதிதான இயற்கையின் மூலமுதல். அது ஆண்பெண் ஆக அனைத்துயிரிலும் இயங்குகிறது.

மானுடத்துக்கு அருமை யானது எது? வாழ்க்கை. வாழ்க்கைக்கு உறுதுணையாவது பெண். பெண் ஆணின் பிணைப்பில் - நட்பில் - தோழமையில் அன்பின் மகிழ்ச்சி சிறக்கிறது, இன்பம் பிறக்கிறது. நம்பிக்கை திறக்கிறது. ஆண் பெண்ணின் உள்ளத்து ஒத்திசைவால் மானிலம் மாண்புறுகிறது மானுட நெஞ்சாங்குலையை இயக்கும் மூச்சுப் பைகள் ஆணும் பெண்ணும் ஆவர். மண்ணில் எறும்பு முதல் யானைவரை இயல்பாக இயங்குவது போலவும் விண்ணில் புள்ளினங்கள் பறப்பன போலவும். தண்ணீரில் மீன்கள் நீந்துவன போலவும் ஆண் பெண் அன்புறவில் வாழ்வதும் திளைப்பதும் மிகமிக எளிதானது அருமையானது, இனிமையானது

ஆண் பெண் அன்புறவு செம்புலப் பெயல் நீர்போலத் தாம் கலக்கின்றன. காதலர்கள் கணவன் மனைவியர் ஆகின்றனர். ஓருயிர் ஈருடல் ஆகின்றனர். வாழ்வின் இரு சிறகுகள் ஆகி நம்பிக்கையை வேரும் விழுதுமாகப் பெறுகின்றனர். தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என உழைக்கின்றனர் - உயர்கின்றனர். உலகை வாழ்விக்கப் பிறந்த ஆண் பெண்ணின் அன்புறவு இதுதான். சமூகத்தின் அங்கம் இவர்கள். நாட்டின் உலகின் உறுப்பினர்கள் இவர்கள். இவர்கள் வாழ்வின் வழிகாட்டி இயற்கையும் இயற்கை நெறிகளும்தான்.

ஆண் பெண் அன்புறவு வாழ்க்கையைத் தமிழிலக்கியம் அகம் என்று பேசும் பாடும் கூத்திடும். சங்ககால ஐந்திணை அகப் பாடல்களைப் போல உலகில் எம் மொழியிலும் 2000 ஆண்டுகட்கு முன்னர் காணவே முடியாது. சீன ஜப்பான் தனிப் பாடல்கள் பத்து விழுக்காடு சற்றே நெருங்கி வரக் கூடும். அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்திய முப்பாலில் மூன்றாம் பாலான காமத்துப்பால் பாடல்கள் ஆண் - பெண் காதலின்ப உறவுகளைப் புல்லை வயப்பாக்கும் பனித்துளியில் செங்கதிரையே காட்டுவது போல ஆண் பெண் - தோழமையை - அன்பைக் காதலைக் காட்டும் வாழ்க்கைக் கண்ணாடி எம் மொழியிலும் இல்லை.

பதினான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர் மேலை நாட்டில் ‘காதலில் சிறந்த காதற் காமத்தைப் பல மொழிகளும் கவிஞர்கள் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புல இன்பத்தோடு மனத்தின் மட்டற்ற மகிழ்வினைப் பாடலாக்கினர் ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக வடமொழிவாணர்கள் தம் வாழ்வின் எதிரொலியாகக் கழிகாமத்தையே தனிப்பாடல்களிலும் காவியங்களிலும் கழிப்பறை ஓவியங்கள் ஆக்கினர் அதன் எதிரொலி - சீவகசிந்தாமணி முதல் சிற்றிலக்கியங்கள் வரை நாணமற்ற நாய்களின் செயலாயின

பாரதியும் பாரதிதாசனும் மீண்டும் வள்ளுவரின் இன்பத்துப் பாலைப் பருகி பருகிக் காதற் கவிதைகளில் உயிரோவியங்களைத் தீட்டினர்

இந்தியக் கவிஞர்களில் தாகுர் திருக்குறள் காமத்துப் பாலை கற்காமலே காதலின்பத்தில் திளைத்துக் காதற் கவிதைகளில் மெய்யறிவின்பத்தேனைப் பொழிந்தார்

இக்காலத் தமிழ்க் கவிஞர்களில் உவமைக் கவிஞர் முதல் புதுமை நுனிக் கொம்பேறி நவகவிதைத் தான்தோன்றிகள் வரை கழிகாமத்திலும் இழி காமத்திலும் சேற்றைச் சந்தனம் என்று சாற்றுபவர்களே. இவர்களுக்கு மாறாய் சீன நாட்டில் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் மூவரால் 'தாவோ’ கொள்கை தோன்றிற்று அதாவது இயற்கைநெறிக் கொள்கை. சங்க காலப் பாடல்களில் காணும் கரு அரிமுதற் கொருள் அமைந்த ஒரு நூல் அண்மையில ஆங்கில அறிஞர் - இரே கிரிக்கு மூலம் அறிமுகமானது 'ஓசோ' எனும் இரசனிசிவின் எண்ணங்களுக்கு மூல ஊற்றான நூல் இது என்பது தெரிந்ததும், இதனைத் தமிழாக்கம் செய்யப் புலவர் த கோவேந்தன் அவர்களை வேண்டினேன். உடன் ஒப்புக் கொண்டளித்த மொழியாக்க நூல்தான் இது.

திருக்குறள் காமத்துப்பாலுக்குப் பரிமேலழகர் முதல் படிப்பறிவோ பட்டறிவோ அற்ற நெடுஞ்செவிர்கள் வரை உரை கண்டாயிற்று. காமத்துப் பாலின் ஒவ்வொரு குறளும் அவ் உரைகளால் ஆண் பெண் அன்பு வாழ்வின், காதலியக்கத்தின் உள்ளொளியைக் காண முடியாது. கண்டுரைக்கவும் முடியாது. காதல் குறளின் கருத்தாழ்ந்த அமைதியும் அன்பின் உணர்வும் உணர்ச்சியும் கடலின் பெரிது. வானினும் உயர்ந்தது, புடவியினும் படர்ந்தது. அதற்கு ஒரு விளக்கம் போல இத் தாவோ (இயற்கை நெறி) நூல் உள்ளது. திருக்குறள் காமத்துப் பாலை எந்த ஒருவரின் உரையும் இன்றிப் படியுங்கள். ஒரு முறைக்கு இரு முறை, மும்முறையும் கூட அடுத்து இந்த நூலைப் படியுங்கள். காமத்துப்பாலின் உள்ளுரை இந்த நூலினை உள்ளுரையாக - குறிப்புப் பொருளாக உள்ளது. இதனினும் சிறந்த உரை திருக்குறள் காமத்துப் பாலுக்கு இருக்க முடியாது என்று தெளிவீர்கள் - ‘மலரினும் மெல்லியது காமம்’ என்ற தொடரின் பொருளை அறிவீர்கள்.

த. சித்திரா


உள்ளடக்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=தாவோ_-_ஆண்_பெண்_அன்புறவு&oldid=1519981" இலிருந்து மீள்விக்கப்பட்டது