திருவள்ளுவர்
கவிமணியின் கவிமலர்கள்
சிவாயநம ==தெய்வப் புலவன்= ஆசிரியர்: =அ.அருள்செல்வன் 👉🏿ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது. 👉🏿 திருக்குறளில் சைவ சித்தாந்தம் மட்டும்மல்ல சைவதமிழாின் வாழ்வியல் நெறியும் கூட.👈🏿 "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"
எல்லா எழுத்துக்களும் அ ஒலியை முதலாக உடையன. அதுபோல உலகு ஆதிபகவன் ஆகிய இறைவனை முதலாக உடையது.இறைவன் ஆதியும் பகவுமாக இருப்பவன் தோன்று-நிலையிலும் தோன்றா-நிலையிலும் ஆதியாக இருப்பவன்.
👉🏿'குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர்
ஆதி' எனக் குறிப்பிடுகிறார்.
👉🏿ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது.
👉🏿-பண்ணிரு திருமுறைகள் இறைவனை
ஆதிபரன் , ஆதி பராபரம் , ஆதிப்பிரான், ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் டர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.
👉🏿பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்:
👉🏿“ஆதிபரன் ஆட அங்கை கனலாட ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட பாதிமதி யாட பாரண்ட மீதாட நாதமோ டாடினான் நாதந்த நட்டமே”
👉🏿“ஆதி பராபர மாகும் பராபரை சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம் ஓதுங் கலைமாயை யோரிரண் டோர்முத்தி நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.”
👉🏿“ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும் ஆதிக் கமலத்து அலர்மிசை யானும் சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று-எனார் பேதிது உலகம் பிணங்குகின் றார்களே.”
👉🏿மூன்றாம் திருமுறை 👉🏿“பந்து சேர்விர லாள்பவ ளத்துவர் வாயி னாள்பனி மாமதி போன்முகத் தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான் வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந் நிறைந் துவலஞ் செய்து மாமலர் புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றுதுமே.”
👉🏿தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் கடவுள் வாழ்த்துப் பாடல்: “ மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன் நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன் வாமான் கருணை மணிஉதரம் பூத்தமுதல் கோமான் பெருங்கருணை கொண்டு. சிவாயநம ==தெய்வப் புலவன்= ஆசிரியர்: =அ.அருள்செல்வன்
ஆசிரியர்:[தொகு]
1. திருவள்ளுவர்
- 1. இம்மை மறுமையின் - பயன்கள்
- எவருமே யடையச்
- செம்மை நெறியினை - விளக்கும்
- தெய்வ நூல் செய்தோன்.
- 2. வழுக்கள் போக்க வந்தோன் - நல்ல
- வாழ்வை ஆக்க வந்தோன்;
- ஒழுக்கம் காட்ட வந்தோன் - தமிழுக்கு
- உயிரை ஊட்ட வந்தோன்.
- 3. தொன்மை நூல்க ளெல்லாம் - நன்கு
- துருவி ஆராய்ந்து,
- நன்மை தீமைகள் வகுத்த
- நாவலர் கோமான்!
- 4. எதை மறந்தாலும் - உள்ளம்
- என்றுமே மறவா,
- பொது மறை தந்த - தேவன்
- பொய் சொல்லாப் புலவன்!
- 5. அறிவின் எல்லை கண்டோன் - உலகை
- அளந்து கணக்கிட்டோன்;
- தறியில் ஆடை நெய்தோன் - தமிழில்
- தரும நூல் நூற்றோன்!
- 6. சாதி ஒன்றேயாம் - தமிழர்
- சமயம் ஒன்றேயாம்!
- நீதி ஒன்றேயாம்! - என்று
- நிலை நிறுத்தி நின்றோன்!
(வேறு)
(வெண்பா)
- 7. வையம் புகழ்ஞானி வள்ளுவன் மக்களெல்லாம்
- உய்யும் படிமுப்பால் ஓதினான் - ஐயமின்றி
- இம்மை மறுமை யிரண்டுக்கும் நேர்வழியைச்
- செம்மையிற் கண்டு தெளிந்து.
- 8. சாதி மதபேதம் சற்றேனு மின்றிநடு
- நீதி நிலைகண்ட நீள்புகழோன் - தோலாச்
- செந்தமிழ்ச் செல்வன் திருவள் ளுவன்பாதம்
- சிந்தையிற் கொள்வோம் தினம்.
- 9. புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச்
- சித்தம் கலங்கித் திகைப்பதேன்? - வித்தகன்
- தெய்வப் புலவன் திருவள் ளுவன்சொன்ன
- பொய்யில் மொழியிருக்கும் போது.
- 10. நாலா ரணப்பசுவை நாடிக் கறந்தளித்த
- பாலாகு மென்றுபா ராட்டுமே - நூலாய்ந்து
- வள்ளுவன் தந்த மறுவில் திருக்குறளை
- உள்ளுவந் தோது முலகு.
2. திருக்குறள்
- (வெண்பா)
1. மக்களுக்கு மாநிலத்தில் வாழ்க்கை வழிகளெலாம்
- சிக்கலறக் காட்டிநலம் செய்நூலாம் - மிக்கபுகழ்ச்
- செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே!
- சிந்தனை செய்வாய் தினம்.
(வேறு)
2. சங்கப் பலகையிலே - அன்று
- தனிய மர்ந்த நூலாம்!
- பங்கய நான்முகனே - தமிழில்
- பகர்ந்த மாமறையாம்!
3. ஆதி மனுநூலைத் - திருத்தி
- அமைத்த நன் நூலாம்!
- நீதி எடுத்தோதப் - புவியில்
- நிகரிலா நூலாம்!
4. ஓதி அறம் தெரிவீர் - பொருளின்
- உண்மை உணர்ந்திடுவீர்!
- காதலின் காட்சியெல்லாம் - நன்கு
- கண்டு களித்திடுவீர்!