உள்ளடக்கத்துக்குச் செல்

தேன்பாகு/இட்டிலியும் மிளகாய்ப் பொடியும்

விக்கிமூலம் இலிருந்து

ஒரு காக்கை வீதி வழியே பறந்து வந்து கொண்டிருந்தது, வீதியின் ஓரத்தில் ஒரு கிழவி இட்டிலி விற்றுக் கொண்டிருந்தாள். கூடைக்குள்ளே சில இட்டிலிகளும், மேலே இருந்த தட்டில் ஐந்தாறு

இட்டிலிகளும் இருந்தன, காக்கை அந்த இட்டிலிகளைப் பார்த்தது. அதன் வாயில் நீர் ஊறியது.

கிழவி எங்கேயோ கவனம் இன்றிப் பார்த்துக் கொண்டிருந்த சமயம் பார்த்து அந்தக் காக்கை ஒர் இட்டிலியைக் கவ்வியது; உடனே வேகமாகப் பறந்து போயிற்று! பாவம் கிழவி உரக்கக் கத்தினாள். ஒரு பயனும் இல்லை.

இட்டிலியைக் கவ்விக்கொண்டு வந்த காக்கை ஊருக்கு வெளியே ஒரு மரத்தின்மேல் போய் உட்கார்ந்தது. அது வாயில் ஒர் இட்டிலியுடன் வரு வதை நரி கவனித்துப் பார்த்தது. எப்படியாவது அந்த இட்டிலியை ருசி பார்க்க வேண்டும் என்ற ஆசை அதற்கும் உண்டாயிற்று.

அந்த மரத்தடிக்கு நரி விரைவாக வந்தது. மேலே உள்ள காக்கையைப் பார்த்து. "தம்பி, இந்த இட்டிலியை நீ எப்படி எடுத்துக் கொண்டு வந்தாய்? உன் சாமார்த்தியமே சாமார்த்தியம்!" என்று புகழ்ந்து பேசியது. காக்கை வாயில் கவ்விய இட்டிலியுடன் மரத்தின் மேலேயே இருந்தது.

நரி, இனிமேல் நேரே கெஞ்சிக் கேட்டுத்தான் இட்டிலியில் கொஞ்சம் வாங்க வேண்டும் என்று தெரிந்து கொண்டது. ஆகவே, "தம்பி, எனக்கு வெகு நாட்களாகவே இட்டிலி தின்ன வேண்டும் என்று ஆசையாக இருந்தது. நான் ஊருக்குள்ளே போய் ஒன்றும் திருட முடியாதே. நண்டையும்

தவளையையும் தின்று தின்று சலித்துப் போய் விட்டது. நீ தான் பாக்கியசாலி, மனிதர் தின்னும் தின்பண்டங்களெல்லாம் உனக்குக் கிடைக்கின்றன" என்று நயமாகச் சொல்லத் தொடங்கியது.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த காக்கை தன் வாயிலிருந்த இட்டிலியை மரத்தில் இருந்த சிறிய பொங்தில் வைத்துவிட்டு, "கா, கா" என்று கூவியது.

நரி மறுபடியும் காக்கையைப்பார்த்து, "தம்பி நீ பிறருக்குக் கொடுக்காமல் எதையும் உண்ணாதவன். இந்த இட்டிலியைத் தின்ன உன் உறவினர்களை "கா, கா’ என்று அழைக்கிறாயே, நான் இருக்கிறேன். என்னையும் உன் சொந்தக்காரனாக எண்ணி எனக்கு ஒரு துண்டாவது கொடு" என்று கெஞ்சிக் கேட்டது.

காக்கைக்குக் கொஞ்சம் மனசு இரங்கியது, அந்த இட்டிலியை மறுபடியும் கவ்விக்கொண்டு கீழே இருந்த ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து கொண்டது.

அதற்குள் கரி என்னவோ நினைத்துக் கொண்டது; "தம்பி ஒரு விஷயம் சொல்கிறேன், கேட்கிறாயா? இங்த இட்டிலி வெறும் இட்டிலி யாக இருக்கிறது. மனிதர்கள் மிளகர்ப்ப் பொடி என்றும், சட்டினி என்றும் சில பதார்த்தங்களை இதற்கு உபயோகிப்பார்களாம். நாமும் அந்த

மாதிரி ஒன்றோடு இட்டிலியைச் சாப்பிடலாம் என்று தோன்றுகிறது, உனக்குச் சம்மதமாக இருந்தால் அப்படிச் செய்யலாம்" என்றது.

காக்கை, "இப்போது மிளகாய்ப் பொடிக்கு எங்கே போவது?" என்று கேட்டது.

"இதுதானா பிரமாதம்? இட்டிலி எப்படிக் கிடைத்ததோ, அது மாதிரி மிளகாய்ப் பொடி கிடைக்கும். நீ மனசு வைத்தால் எதுதான் கிடைக்காது? நீ இப்போதே ஊருக்குள் போய் மிளகாய்ப் பொடியையும் சம்பாதித்துக் கொண்டு வந்துவிடு. அதுவரை நான் இதைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்" என்று தந்திரமாகச் சொல்லியது.

காக்கை அந்த வார்த்தைகளை உண்மையாக நம்பி, மறுபடியும் ஊரை நோக்கிப் புறப்பட்டது. நரி சிறிது கேரம் சும்மா இருந்தது. அதனுடைய துஷ்டகுணம் அதைச் சும்மா இருக்க விட வில்லை. அந்த இட்டிலிக்குப் பக்கத்தில் உட்கார்ந்த நரி அதைத் தொட்டுக் கொண்டே இருந்தது. பின்னும் கொஞ்ச நேரம் ஆயிற்று நரியினால் ஆசையை அடக்க முடியவில்லை. இட்டிலியைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டது. இதை இப்படியே வாயில் போட்டுக கொண்டு ஓடி விடலாமே! என்று எண்ணம் உண்டாயிற்று. ஆனாலும் அதற்குத் தைரியம் ஏற்படவில்லை.

'இதைக் கொஞ்சம் காக்கில் வைத்துப் பார்க்கலாம்' என்ற எண்ணம் அடுத்தபடியாகத்

தோன்றியது, மெதுவாக நாக்கினால் அதை நக்கிப்பார்த்தது. அப்போது நரிக்கு இட்டிலியை ஒரே விழுங்காக விழுங்கிவிட வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. 'காக்கை வந்தால்...?' என்று எண்ணியது. 'வந்தால் என்ன செய்யும்? நாம் ஒடிப்போய் விடலாம்' என்று அடுத்தபடி ஓர் எண்ணம் வந்தது.

உடனே, துணிந்து இட்டிலியின் ஒரு பாகத்தைக் கடித்துத் தின்றது. அந்தச்சமயத்தில் காக்கை திரும்பி வந்து விட்டது. வாயில் ஒரு சிறு கிண்ணத்தோடு பறந்து வந்தது. அந்தக் கிண்ணம் நிறைய மிளகாய்ப் பொடி இருந்தது. வரும்போதே நரியைப் பார்த்தது. நரி இட்டிலியின் ஒரு பாகத்தைக் கடித்துக் கொண்டிருந்தது. நரி முழுவதையும விழுங்கிவிடப் போகிறது என்றே அது எண்ணியது. உடனே இரைந்த குரலில், நரி அண்ணா, அவசரப்படாதே அந்த இட்டிலியை நீயே தின்னலாம, இந்த மிளகாய்ப் பொடியை போட்டுக் கொண்டு தின்னலாம். எனக்கு வேண்டாம். பாவம் இவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருந்தாயே. எனக்கு வேறு இட்டிலி கிடைக்கும்' என்றுசொல்லிக் கொண்டே பக்கத்தில் வந்தது.

நரிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. இட்டிலி முழுவதையும் தானே சாப்பிட வேண்டும் என்ற பேராசை அதற்கு இருந்தது. ஆனாலும் காக்கை இப்படிச் சொல்லும் என்று அது எதிர்

பார்க்க வில்லை. "என்ன தம்பி சொல்கிறாய்?" என்று சொல்லிக் கையில் இருந்த இட்டிலியை கரி கீழே வைத்தது,வைத்தது தான் தாமதம்; மறு கணத்தில் காக்கை தன் வாயில் பிடித்திருந்த கிண்ணத்திலிருந்த மிளகாய்ப் பொடியை அப்படியே நரியின் கண்மேல் கொட்டி விட்டு அது கண்ணைத் துடைப்பதற்குள் இட்டிலியைக் கவ்விக்கொண்டு பழைய மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டது.

நரியோ மிளகாய்ப்பொடி விழுந்ததனால் கண்ணைத் திறக்க முடியாமல் கஷ்டப்பட்டது; எரிச்சல் தாங்க முடியவில்லை. "ஐயோ! ஐயோ! ' என்று கதறியது.

காக்கை, "நரியண்ணா, மிளகாய்ப் பொடி எப்படி இருக்கிறது! இட்டிலியினால் உன்னுடைய நாக்கில் நீர் சுரங்தது. இப்போது மிளகாய்ப் பொடியினால் கண்ணிலே நீர் சுரக்கிறது. நல்ல வேளை! இவ்வளவு நேரத்தில் இட்டிலியை விழுங்காமல் இருந்தாயே! உனக்கு வந்தனம்"என்று சொல்லிவிட்டு இட்டிலியைத் தின்றது.