நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எதிரிகள் வந்த வழியே சென்றனர்

விக்கிமூலம் இலிருந்து

116. எதிரிகள் வந்த வழியே சென்றனர்

அபூ ஸுப்யான், குறைஷிகளை எல்லாம் அழைத்து:

“நம்முடைய நாட்டை விட்டு நாம் அனைவரும் இங்கு வந்து, கஷ்ட நிலையில் இருக்கிறோம். நம்முடைய படைகளும், ஒட்டகங்களும், குதிரைகளும் நலிவடைந்து கொண்டிருக்கின்றன. தவிர. புயலின் கோரத்தால் நாம் அடுப்புப் பற்ற வைக்கவும், நம்முடைய உணவைத் தயாரித்துக் கொள்ளவும் முடியவில்லை. இந்த நிலைமையில் நாம் இங்கு தாமதிப்பது சரியல்ல” என்று கூறி, ஒட்டகத்தில் ஏறி அவர் புறப்பட்டு விட்டார்.

அதன் பின்னர், குறைஷிகள் எல்லோரும் அவரைப் பின் தொடர்ந்து போய் விட்டார்கள். குறைஷிகளுடன் வந்த கூட்டத்தினரும் அவர்களைப் பின் தொடர்ந்து செல்லலானார்கள்.

மதீனாவைச் சுற்றிலும் கவிந்து கொண்டிருந்த யுத்த மேகமானது, இருபத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு கலைந்து விட்டது

இந்தச் சண்டையில் முஸ்லிம்களுக்கு உயிர்ச் சேதம் மிகவும் குறைவுதான். ஆனால் அவர்களுக்குப் பாலமாகவும், ஒளஸ் குடும்பத்தாரின் தலைவராகவும் இருந்த ஸஅத் இப்னு முஆத் என்பவர் பலத்த காயமுற்றார்.