நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/புதல்வியார் திருமணம்

விக்கிமூலம் இலிருந்து

80. புதல்வியர் திருமணம்

இந்த வருடத்தில், பெருமானார் அவர்களின் குமாரத்தி பாத்திமா நாச்சியார் அவர்கள், அலீ ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்கள்.

பெருமானார் அவர்கள் தங்கள் மகளுக்கு ஸ்திரீதனமாக தோல் படுக்கை, தோல் கூசா(கூஜா), இரண்டு திரிகைகள், இரண்டு மண் பானைகள் ஆகியவற்றையே அளித்தார்கள்.

இதே வருடத்தில்தான் ரமலானுடைய நோன்பு கடமையாக்கப்பட்டது. நோன்பு முடிந்த மறுநாள் 'ஈதுல் ஃபித்ரு என்னும் பெருநாளாகக் கொண்டாடப் பெற்றது, தவிரவும் ஃபித்ரா, (ஸதக்கா) தர்மங்கள் செய்யும் முக்கிய காலமாகவும் கடைப் பிடிக்கப் பெற்றது அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தியதும் இந்த வருடத்திலேதான் என்பது குறிப்பிடத்தக்கது (குத்பாச் சொற்பொழிவு).