நற்றிணை
இப்படைப்பு இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. தங்களால் முடிந்தால் இப்படைப்பை முழுமை செய்ய உதவுங்கள். மேலும் உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். (உதவி) |
- 0. கடவுள் வாழ்த்து
- பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
- 2. இடியினும் கொடியதாகும்?
- பாடியவர்: பெரும்பதுமனார்
- திணை: பாலை
- துறை: உடன்போகா நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது
- அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து,
- ஓலிவல் ஈந்தின் உலவை யங்காட்டு,
- ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த
- செம்மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
- வல்லியப் பெருந்தலைக் குறுளை, மாலை,
- மானோக்கு இண்டிவர் ஈங்கைய, சுரனே;
- வையெயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று
- எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
- காலொடு பட்ட மாரி
- மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!
- 3. சுடரொடு படர் பொழுது!
- பாடியவர்: இளங்கீரனார்
- திணை: பாலை
- துறை: முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன், பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
- ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப்
- பொரியரை வேம்பின் புள்ளிநீழல்
- கட்டளை அன்ன இட்டரங்கு இழைத்துக்
- கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
- வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்ச்
- சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
- உள்ளினேன் அல்லெனோ, யானே - உள்ளிய
- வினைமுடித் தன்ன இனியோள்
- மனைமாண் சுடரொடு படர்பொழுது எனவே?
- 4. கொண்டு செல்வாரோ
- பாடியவர்: அம்மூவனார்
- திணை: நெய்தல்
- துறை: தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.
- கானலஞ் சிறுகுடிக் கடல்மேம் பரதவன்
- நீனிறப் புன்னைக் கொழுநிழல லசைஇத்
- தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி
- அந்தண் அரில்வலை உணக்குந் துறைவனொடு
- அலரே, அன்னை யறியின் இவணுறை வாழ்க்கை
- அரிய வாகும் நமக்கெனக் கூறிற்
- கொண்டுஞ் செல்வர்கொல் தோழி உமணர்
- வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்
- கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்
- மணல்மடுத் துரறும் ஓசை கழனிக்
- கருங்கால் வெண்குருகு வெரூஉம்
- இருங்கழிச் சேர்ப்பிற்றம் உறைவின் ஊர்க்கே.
- 5. பிரிதல் அரிதே
- பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்
- திணை: குறிஞ்சி
- துறை: தலைவனின் செலவுக்குறிப்பறிந்து, வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.
- நீலம்நீர் ஆரக் குன்றம் குழைப்ப
- அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக்
- குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்
- நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
- பெரும்பெயல் பொழிந்த தொழில எழிலி
- தெற்கேர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
- அரிதே, காதலர்ப் பிரிதல் - இன்றுசெல்
- இளையர்த் தரூஉம் வாடையொடு
- மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே.
- 6. 'இவர் யார்?' என்னாள்
- பாடியவர்: பரணர்
- திணை: குறிஞ்சி
- துறை: இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாகிய தலைவன், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
- நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
- நார்உரித் தன்ன மதனில் மாமைக்
- குவளை யன்ன ஏந்தெழில் மழைக்கண்
- திதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்கு
- எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே!
- 'இவர்யார்?' என்குவன் அல்லள்; முனாஅது
- அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
- எறிமட மாற்கு வல்சி ஆகும்
- வல்வில் ஓரி கானம் நாறி
- இரும்பல் ஒலிவரும் கூந்தல்
- பெரும்பே துறுவள்யாம் வந்தனம் எனவே!
- 7. நின்னை வரைவர் வருந்தாதே !
- பாடியவர்: நல்வெள்ளியார்
- திணை: பாலை
- துறை: இது பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.
- சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்கப்
- பெருவரை அடுக்கத் தருவி யார்ப்பக்
- கல்லலைத் திழிதருங் கடுவரற் கான்யாற்றுக்
- கழைமாய் நீத்தங்க காடலை யார்ப்பக்
- தழங்குகுர லேறொடு முழங்கி வானம்
- இன்னே பெய்ய மின்னுமால் தோழி
- வெண்ணெ லருந்திய வரி நுதல் யானை
- தண்ணறுஞ் சிலம்பில் துஞ்சுஞ்
- சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே.
- 8. யார் புதல்வியோ? இவள் தந்தை வாழ்க.
- பாடியவர்: (பெயர் தெரியவில்லை)
- திணை: குறிஞ்சி
- துறை: இஃது இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடுங்கண்ட தலைமகன் சொல்லியது .
- அல்குபடர் உழந்த அரிமதர் மழைக்கண்
- பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல்
- திருமணி புரையு மேனி மடவோள்
- யார்மகள்கொல் இவள் தந்தை வாழியர்
- துயரம் உறீஇயினள் எம்மே அகல்வயல்
- அரிவனர் அரிந்துந் தருவனர்ப் பெற்றுந்
- தண்சேறு தாஅய் மதனுடை நோன் தாள்
- கண்போல் நெய்தல் போர்விற் பூக்குந்
- திண்தேர்ப் பொறையன் தொண்டி
- தன்திறம் பெறுக இவள் ஈன்ற தாயே.
- 9. புன்னகையால் வழிவரல் வருத்தம் போக்கியவளே!.
- பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ
- திணை: பாலை
- துறை: இஃது உடன் போகா நின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.
- அழிவில முயலு மார்வ மாக்கள்
- வழிபடு தெய்வங் கண் கண்டாஅங்
- கலமரல் வருத்தந் தீர யாழநின்
- நலமென் பணைத்தோள் எய்தினம் ஆகலின்
- பொரிப்பூம் புன்கி னெழற்தகை ஒண்முறி
- சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி
- நிழல்காண் தோறும் நெடிய வைகி
- மணல்காண் தோறும் வண்டல் தைஇ
- வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே!
- மாநனை கொழுதி மகிழ்குயி லாலும்
- நறுந்தண் பொழில கானம்
- குறும்ப லூர! யாஞ் செல்லும் ஆறே.
.
- 10. கைவிடாதே கொள் !.
- பாடியவர்: (பெயர் தெரியவில்லை)
- திணை: பாலை
- துறை: இஃது உடன்போக்குந் தோழி கையடுத்தது.
- அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
- பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த
- நல்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
- நீத்த லோம்புமதி பூக்கே ழூர!
- இன்கடுங் கள்ளி னிழையணி நெடுந்தேர்க்
- கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
- வெண்கோட் டியானைப் போஒர் கிழவோன்
- பழையன் வேல்வாய்த் தன்னநின்
- பிழையா நன்மொழி தேறிய இவட்கே.
- 11. புலவியை நெஞ்சத்து ஒழிப்பாயாக !
- பாடியவர்: உலோச்சனார்
- திணை: நெய்தல்
- துறை: இது காப்பு மிகுதிக்கண் இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
- பெய்யாது வைகிய கோதை போல
- மெய்சா யினையவர் செய்குறி பிழைப்ப
- உள்ளி நொதும லேர்பு உரை தெள்ளிதின்
- வாரா ரென்னும் புலவி யுட்கொளல்
- ஒழிக மாளநின் நெஞ்சத் தானே
- புணரி பொருத பூமண லடைகரை
- யாழி மருங்கின் அலவன் ஓம்பி
- வலவன் வள்பாய்ந் தூர
- நிலவுவிரிந் தன்றாற் கானலானே.
- 12. தோழியர் நோவர் !
- பாடியவர்: கயமனார்
- திணை: பாலை
- துறை: இது தோழி உடன்போக்கு அஞ்சுவித்து.
- விளம்பழங் கமழுங் கமஞ்சூற் குழிசிப்
- பாசந் தின்ற தேய்கான் மத்தம்
- நெய்தெரி யியக்கம் வெளில்முதன் முழங்கும்
- வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கா
- லரியமை சிலம்பு கழீஇப் பன்மாண்
- வரிபுனை பந்தொடு வைஇய செல்வோள்
- இவை காண்தோறு நோவர் மாதோ
- அளியரோ வளியரென் னாயத் தோரென
- நும்மொடு வரவுதா னயரவுந்
- தன்வரைத் தன்றியுங் கலுழ்ந்தன கண்ணே.